வத்திராயிருப்பு : கின்னஸ் சாதனைக்காக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா உலகின் நீண்ட நேரம் இயங்கும் "கம்ப்யூட்டர் கேம்' உருவாக்கியுள்ளான்.
வத்திராயிருப்பில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன். தாயார் ஆக்னெலின் இடைநிலை ஆசிரியை. இவர்கள், மகனின் ஆர்வத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டனர். தனது திறமையால் சி ப்ளஸ், விசுவல் பேசிக், லாங்வேஜ் வரை விரைவில் கற்றான். 2010 பிப்ரவரியில் கின்னஸ் சாதனைக்காக புதிய சாப்ட்வேர்களையும், அதில் எட்டு "கேம்'களை வடிவமைத்தான். இவை கின்னஸ் அமைப்பின் முதல்கட்ட தேர்வில் தேர்வாகி அடுத்தகட்ட பரிசீலனையில் உள்ளது. அடுத்த சாதனையாக உலகிலேயே மிக நீண்ட நேரம் இயங்கக்கூடிய "பவர் மைண்ட்' என்ற கேம் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளான். இதுகுறித்து நேற்று வத்திராயிருப்பில் பலர் முன்னிலையில் விவரித்தான்.
டெனித் ஆதித்யா கூறியதாவது: இது ஞாபக சக்தியை வளர்க்கும் "நியூமெரிக்கல் கேம் சாப்ட்வேர்'. பொழுதுபோக்கு "கேம்'களில் அதிகபட்சம் "10 ஸ்டேஜ்' வரை இருக்கும். நான் வடிவமைத்தது 570 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாடக்கூடியது. இதன் மொத்த அளவு "52 கேபி' மட்டுமே, என்றான்.
Thanks To.......Dhinamalar.
இந்த பிளாக்பெர்ரி செல்போனின் பெயர் eUNO R10. வோடபோன் சேவையில் இந்த அதி நவீன வசதி இயங்கும்படி செய்யப்பட்டுள்ளது. இந்த செல்போனில், கையடக்கமான, ஈசிஜி கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதை கையில் கட்டிக் கொண்டு ஈசிஜி பார்க்கலாம். பின்னர் இதன் முடிவுகளை வயர்லைன் ஏஅல்லது ஜிஎஸ்எம் செல்போன் மூலம் நமது டாக்டருக்கு அனுப்பி வைத்து அவருடையை ஆலோசனையைப் பெற முடியும்.
அதாவது எந்த லேபுக்கும்,டாக்டரிடமும், மருத்துவமனைக்கும் செல்லாமல் நாமே ஈசிஜி பார்த்து ஆலோசனையை டாக்டரிடம் செல்போன் மூலமே பெற முடியும்.
இருப்பினும் பிளாக்பெர்ரி செல்போன்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். அதாவது நாம் எடுக்கும் அந்த ஈசிஜி அறிக்கை பிளாக்பெர்ரியின் சர்வருக்குப் போய் அங்கிருந்து டாக்டர் வைத்துள்ள பிளாக்பெர்ரிக்குப் போய்ச் சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதி நவீன வசதி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. வோடபோன், பிளாக்பெர்ரி சேவைகளைக் கொண்டோர் மட்டும் இதைப் பயன்படுத்த முடியும்.
Thanks To.....Vaavimakal

