Tuesday, March 27, 2012

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க....

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்குஎவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கானஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்துAnalyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும். 
அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து Optimize  ஐ அழுத்துங்கள்.
அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.

Manual 
Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்
http://www.downloadcrew.com/article/23452-auslogics_internet_optimizer

Monday, March 26, 2012

உடல்நிலையை கண்காணிக்கும் ஸ்மார்ட் போன்கள்

உங்களது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர சிகிச்சைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.
கமெரா, படம் பார்ப்பது, விளையாடுவது என பொழுதுபோக்காக மட்டுமின்றி, மருத்துவ ரீதியாகவும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுகின்றன.
இதன் மருத்துவ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக நியூசிலாந்தின் மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை தற்போது ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. எக்ஸ்ரே, இசிஜிகூட வந்துவிட்டன.
இந்நிலையில் ப்ளூடூத்,Wifi வசதி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.
இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஸ்மார்ட் போன் தொடர்ச்சியாக கண்காணிக்கும். உடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் மூலம் இதுபற்றிய தகவல் வைஃபி அல்லது இன்டர்நெட் இணைப்பு மூலமாக உங்களது மருத்துவரின் ஸ்மார்ட் போனுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.
இருந்த இடத்தில் இருந்தே அவர் கண்காணிக்க முடியும். இதனால் அவசரகால சிகிச்சைகளை உடனுக்குடன் செய்வது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.


 

Sunday, March 25, 2012

அப்பிளின் சாதனை!


 48 மணி நேரத்தில் 3 மில்லியன் ஐபேட்கள் விற்று ஆப்பிள் சாதனை!
எலக்ட்ரானிக் சாதன உலகில் ஆப்பிள் நியூ ஐபேட் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மார்ச் 16 தேதி விற்பனைக்கு வந்த ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட் 2 நாட்களில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
வருகிற மார்ச் 23-ஆம் தேதி நியூ ஐபேட் டேப்லட், மற்ற 25 நாடுகளிலும் வெளியாகும். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், ஜெர்மெனி போன்றநாடுகளில் நியூ ஐபேட் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்தம்பிக்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் ஒன்று இந்த நியூ ஐபேட் டேப்லட்டில் இருக்கிறது. இதன் ரெட்டினா டிஸ்ப்ளே என்ற பிரத்தியேகமான தொழில் நுட்பம் ஒன்று இதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இதில் உள்ளதால் எதையும் நேரில் பார்ப்பது போன்ற துல்லியத்தினை வெகு சுலபமாக பெறலாம்.

நியூ ஏ5எக்ஸ் சிப், குவாட் கோர் கிராஃபிக்ஸ், 5 மெகா பிக்ஸல் ஐசைட் கேமரா, 1080பி உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட வீடியோ என்று இதன் வசதிகள் ஏறாலம். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான இந்த ஆப்பிள் நியூ ஐபேடில், வைபை மற்றும் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் தொழில் நுட்பமும் உள்ளது.

வைபை தொழில் நுட்பத்தினை கொண்ட நியூ ஐபேட் டேப்லட்டை வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் பெறலாம். 16ஜிபி நியூ ஐபேட் மாடலை அமெரிக்காவில் ரூ.24,907 விலையிலும், 32ஜிபி மாடலை ரூ.29,899 விலையிலும், 64ஜிபி மாடலை ரூ.34,896 விலையிலும் பெறலாம்.

Saturday, March 24, 2012

மனிதனாக வாழ வழிகள்.

மிகவும் வேண்டியது
பணிவு
மிகவும் வேண்டாதது
வெறுப்பு
மிக பெரிய தேவை 
நம்பிக்கை
மிகவும் வேண்டியது 
பணிவு
மிகவும் வேண்டாதது 
வெறுப்பு
மிக பெரிய தேவை 
நம்பிக்கை
மிகக்கொடிய நோய் 
பேராசை
மிகவும் சுலபமானது
குற்றம் காணல் 
தரமற்ற குணம்  
பொறாமை
நம்பக்கூடாதது
வதந்தி 
ஆபத்தை ஏற்படுத்துவது 
அதிக பேச்சு
செய்யக்கூடாதது
நம்பிக்கை துரோகம் 
செய்யக்கூடியது
உதவி 
விளக்க வேண்டியது  
சோம்பேறித்தனம்
உயர்வுக்கு
வழி உழைப்பு
நழுவவிடக்கூடாதது 
வாய்ப்பு
பிரியக்கூடாதது 
 நட்பு
மறக்கக்கூடாதது   
 நன்றி
ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது  
இறை பயம்


Thursday, March 22, 2012

சிறந்த  ஸ்மார்ட்  போன்

 சென்ற ஆண்டில் உலக அளவில் வெளியான ஸ்மார்ட் போன்களில், பல வகைகளில் சிறப்பு பெற்றதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போன் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் உலக மொபைல் கருத்தரங்கில், மொபைல் தயாரிப்பு மற்றும் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுவார்கள். அதே நேரத்தில் சென்ற ஆண்டு சிறப்பாக இயங்கிய மொபைல் போன்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். இந்த விருதுகளை பன்னாட்டளவில் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தேர்ந்தெடுத்து வழங்குகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள் வரிசையில், சாம்சங் கேலக்ஸி எஸ்2 தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டின் சிறந்த சாதனத்தை வடிவமைத்த நிறுவனத்திற்கான விருதும் சாம்சங் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட் போன்களுக்கான தரம், செயல் வேகம், திரை அமைப்பு மற்றும் போனில் தரப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகியவற்றில் புதிய இலக்குகளை எட்டியதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜே.கே. ஷின் தெரிவித்துள்ளார்.
சிறந்த டேப்ளட் பிசிக்கான விருதை, அனைவரும் எதிர் பார்த்தபடி, ஆப்பிள் நிறுவனத் தின் ஐபேட் 2 பெற்றது. இன்றைய நாள் வரை, இந்த பிரிவில் ஐபேட் சாதனத்துடன் போட்டி யிடும் வகையில் எந்த நிறுவனமும் டேப்ளட் பிசியினைத் தயாரிக்கவில்லை. வரும் மாதங்களில், உலகின் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு மொபைல் உலகைக் கலக்கப் போகின்றன.