Saturday, May 8, 2010

மிதக்கும் ஓட்டல் பறக்கவும் செய்யும்


சிகாகோ : நீரில் மிதந்தபடி செல்லும் சொகுசு ஓட்டல், வானிலும் பறக்கும் வகையில் இங்கிலாந்து டிசைனர் வடிவமைத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த டிசைனர் நிக் டால்போட். நீரில் மிதப்பதுடன் வானில் பறக்கக்கூடிய சொகுசு ஓட்டலை அவர் வடிமைத்து உள்ளார்.

அதன் பெயர் ஏர்க்ரூயிஸ். 30 மீட்டர் உயரம் கொண்டது. 4 டூப்ளக்ஸ் அறைகள், 5 சிறிய அறைகளுடன் முற்றிலும் கண்ணாடி தரை கொண்டது. அதிகபட்சமாக 100 பயணிகள் தங்கக் கூடிய ஏர்க்ரூயிஸ், நீரில் மிதக்கும்போது நான்கு புறமும் ஆக்டோபஸ் கரங்கள் போன்ற அடித்தளத்தில் பொருந்தியிருக்கும். பிறகு, ஹைட்ரஜன் சக்தி மூலம் வானில் உந்தித் தள்ளப்படும். சூரிய சக்தி பேட்டரிகள் மூலம் வானில் பயணத்தைத் தொடங்கும்.

அதில் கார்பன் வெளியாகாது என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. சொகுசு ஓட்டலின் வசதிகளை அனுபவித்தபடி நீரிலும் வானிலும் பயணிகள் மகிழும் வகையில், ஏர்க்ரூயிஸ் மெதுவாகவே பறக்கும். மணிக்கு 145 கி.மீ. செல்லக்கூடிய அது, லண்டனில் இருந்து நியூயார்க் போய்ச் சேர 37 மணி நேரம் ஆகும். இதுபற்றி சுற்றுலா நிபுணர் டோனி சார்டர்ஸ் கூறுகையில், ‘‘அடுத்த தலைமுறை பயணிகளைக் கவரும் வகையில் ஏர்க்ரூயிசை நிக் தயாரித்துள்ளார். சுற்றுலாவை அதிகரிக்க இது உதவும். இதுபோன்ற புது முயற்சிகளுக்கு தூண்டுதலாக அமையும்’’ என்றார்.

Thanks to Manithan

மொபைல் கொலை.

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணப்பகுதியில் பரவிய வதந்தியினால் மக்கள் பீதி.பொய்யென இலங்கை அரசாங்கம் அறிவிப்பு.




கையடக்க தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை பெற்று அவர்களுடன் உரையாடும் போது பாதிப்படைந்திருப்பதாக நேற்று இரவு யாழ் குடா முழுவதும் வதந்தி பரவியது. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது.

கையடக்க தொலைபேசிகளுக்கு 7888308001 , 9316048121 ,9876266711 , 9888854137 , 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களை ஏற்க வேண்டாம்.இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும் போது அவற்றில் இருந்து வெளி வரும் உயர் ஒழி அதிர்வு (High Frequency ) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத்தொளைபெசிகளுக்கு குறுந்தகவல் (SMS ) அனுப்பப்பட்டது.

அக்குறுந்தகவலில் இதனை டயலொக் செய்திச்சேவை (DD News ) உறுதி செய்வதாகவும் , இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும், மேலும் கூறப்பட்டிருந்தது.

இத்தகவலால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன், தமது கையடக்க தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.

இது தொடர்பாக, டயலொக் நிறுவனம் எந்த செய்திகளையோ , குறுந்தகவல்கலையோ வெளியிடவில்லை என்றும், இது மக்களை பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் டயலொக் நிறுவனத்தின் யாழ் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொய்யான குறுந்தகவல் பரப்பப்பட்டு வருகிறது- தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு.

யாழ்ப்பாணம் உட்பட ஏனைய பகுதிகளில் பரப்பப்பட்டு வரும் குறுந்தகவல்கள் பொய்யானவை என இலங்கை தகவல் தொலைத்தொடர்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தோலைபேசி இலக்கங்களைத்தந்து அந்த இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்களுக்கு பளிலளித்தால் மரணம் சம்பவிக்கும் என்ற அடிப்படையில் இந்த குறுந்தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது பொய்யானது எனத்தெரிவித்துள்ள தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட, இது அயல் நாடோன்றிளிருந்தே பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே,மக்கள் அச்சம் கொள்ளத்தேவை எனவும் குருப்பிட்டுள்ளார்.

பிந்திய தகவல்களின் படி இவ்வதந்தியானது மட்டக்களப்பு போன்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளதாக தெரிய வருகிறது.

Thanks to Tamilwin.