Saturday, March 31, 2012

வீடியோ ஈமெயில்

வீடியோவை இமெயில் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிட . . .
 
நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவுசெய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம்.

இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வச தி இருந்தால் மட்டுமே போது மானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேசமுடி யும். (இந்த www.vsnap.com லிங்கை கிளிக் செய்து அதில் உங்களது வீடியோ தொகுப்பி னை பதிவுசெய்து கொள்ளுங்க ள்) இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பதுபோன்ற ஒருநினை வை ஏற்படுத்தும்.

இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன் றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இத ன் மூலம் இணைப்புகளின் சாரம்சத்தை எளிதாக புரிய வைக்கலாம்.

Friday, March 30, 2012

உலகின் வேகமான பறவைகள்.

Canvasback Duck

Eider Duck

Frigate
Mallard

Pintail

Red-Breasted Merganser

Spine-Tailed Swift

Spur-Winged Goose

Teal

White-Rumped Swift

Thursday, March 29, 2012

நோக்கியாவின் எச்சரிக்கை!


பன்னாட்டளவில் மொபைல் போன்களைத் தயார் செய்து விற்பனை செய்துவரும் நோக்கியா நிறுவனம், தான் எந்த லாட்டரியும் நடத்தவில்லை என அறிவித்துள்ளது. மார்ச் இரண்டாம் வாரத்தில் வெளியிட்ட இதன் அறிக்கையில், பல நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்கள் "நோக்கியா லாட்டரியில்' பங்கு கொண்டதாகவும், அதன் முடிவுகளை எதிர் நோக்கி இருப்ப தாகவும், பல இணைய மையங்களில் எழுதி உள்ளனர். யாருக்காவது முடிவு தெரிந்தால், உடனே தெரிவிக்கும்படி தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்ட நோக்கியா நிறுவனம், நோக்கியா இதைப் போல எந்த லாட்டரியும் நடத்தவில்லை என்றும், இது போல நோக்கியாவின் நிறுவன இணையதளத்தில் இருந்து வருவது போலக் கிடைக்கும் மின்னஞ்சல் செய்திகள் தேவையற்ற பொய்ச் செய்திகள் என நோக்கியா அறிவித்துள்ளது.
இது போல வரும் மின்னஞ்சல் செய்திகளைப் பெறுபவர்களிடம், அவர்கள் பெயர்கள் லாட்டரியில் சேர்க்கப்பட பெயர், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கேட்டுவிட்டுப் பின்னர், ஒரு சிறிய தொகையினை இன்னொரு வங்கிக் கணக்கில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதனைக் கண்ட பலர், கேட்கப்படும் பணம் குறைவாக உள்ளதாலும், லாட்டரி பரிசு எக்கச்சக்கமாக இருப்பதாலும், போட்டுத்தான் பார்ப்போமே என்று எண்ணி, தங்கள் வங்கி அக்கவுண்ட் தகவல்களைத் தந்து பின்னர் பணத்தையும் செலுத்துகின்றனர்.
நோக்கியா இது போன்ற ஆசைத் தூண்டுதல்களுக்கு பலிகடா ஆகாதீர்கள் என்று தன் வாடிக்கை யாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது போல மின்னஞ்சல் அனுப்புபவர்கள், உங்களிடமிருந்து பெறும் தனிப்பட்ட தகவல்களைக் கூடத் தங்கள் மோசமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் எனவும் நோக்கியா அறிவுறுத்தி யுள்ளது. நோக்கியா மட்டுமின்றி, வேறு எந்த ஒரு தனிநபர் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயர்களில் இது போல திடீர் பணம் கிடைக்கும் என்று கேட்டு தகவல்களைத் திருடும் மின்னஞ்சல்களை உடனே அழித்துவிடும்படியும் நோக்கியா கேட்டுக் கொண்டுள்ளது.

Wednesday, March 28, 2012

அடோப் போட்டோஷாப்  இலவசமாக.....


அடோப் போட்டோஷாப் மென்பொருளின் புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய - Photoshop CS6 beta

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருளை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்திற்கு எப்படி கூகுளோ அது போல போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் என்றால் போட்டோஷாப் தான் அதற்க்கு ஈடான மென்பொருள் இல்லை. உலகம் முழுவதும் போட்டோஷாப் மென்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. வெகுநாட்களாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த மென்பொருளின் புதிய பதிப்பான CS6 Beta வெளியிட்டு உள்ளனர். இந்த புதிய பதிப்பை அனைவரும் இலவசமாக உபயோகிக்கலாம் என்பது மேலும் ஒரு இனிப்பான செய்தி.

இலவசமாக டவுன்லோட் செய்ய:

முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொழுது I want to try Adobe Photoshop CS6 for a limited time என்பதை கொடுத்து உள்ளே சென்றால் சீரியல் எண் கேட்காது இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மற்றும் இந்த இலவச பதிப்பை 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.  ஆக்டிவேட் செய்ய அடோப் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து இலவசமாக ஆன்லைனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இதற்க்கு முன் Adobe ID இல்லை என்றால் புதிதாக உருவாக்கி கொண்டு ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். 7 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வில்லை என்றால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் வேலை செய்யாது.

இதிலுள்ள வசதிகளை பற்றிய அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.

Direct Download Links: 


Download Photoshop CS6 beta for Mac (DMG, 984 MB)

Download Photoshop CS6 beta for Windows (ZIP, 1.7 GB)


போட்டோஷாப் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையான
Minimum System Requirements  அறிய இந்து செல்லவும்.

From:  Lanka Now

Tuesday, March 27, 2012

இணையத்தின் வேகத்தை அதிகரிக்க....

இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்குஎவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கானஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்துAnalyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும். 
அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து Optimize  ஐ அழுத்துங்கள்.
அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.

Manual 
Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்
http://www.downloadcrew.com/article/23452-auslogics_internet_optimizer

Monday, March 26, 2012

உடல்நிலையை கண்காணிக்கும் ஸ்மார்ட் போன்கள்

உங்களது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவசர சிகிச்சைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.
கமெரா, படம் பார்ப்பது, விளையாடுவது என பொழுதுபோக்காக மட்டுமின்றி, மருத்துவ ரீதியாகவும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் பயன்படுகின்றன.
இதன் மருத்துவ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக நியூசிலாந்தின் மனுகாவ் தொழில்நுட்ப கழகத்தின் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை ஆராய்ச்சியாளர்கள் ஹெலன் ஷூ, டிம் ராபர்ட்ஸ் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை தற்போது ஸ்மார்ட் போன்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. எக்ஸ்ரே, இசிஜிகூட வந்துவிட்டன.
இந்நிலையில் ப்ளூடூத்,Wifi வசதி, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலான வயர்லெஸ் சிஸ்டம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம்.
இதய துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகியவற்றை ஸ்மார்ட் போன் தொடர்ச்சியாக கண்காணிக்கும். உடன் இணைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் மூலம் இதுபற்றிய தகவல் வைஃபி அல்லது இன்டர்நெட் இணைப்பு மூலமாக உங்களது மருத்துவரின் ஸ்மார்ட் போனுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.
இருந்த இடத்தில் இருந்தே அவர் கண்காணிக்க முடியும். இதனால் அவசரகால சிகிச்சைகளை உடனுக்குடன் செய்வது சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.


 

Sunday, March 25, 2012

அப்பிளின் சாதனை!


 48 மணி நேரத்தில் 3 மில்லியன் ஐபேட்கள் விற்று ஆப்பிள் சாதனை!
எலக்ட்ரானிக் சாதன உலகில் ஆப்பிள் நியூ ஐபேட் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. மார்ச் 16 தேதி விற்பனைக்கு வந்த ஆப்பிளின் நியூ ஐபேட் டேப்லட் 2 நாட்களில் 30 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
வருகிற மார்ச் 23-ஆம் தேதி நியூ ஐபேட் டேப்லட், மற்ற 25 நாடுகளிலும் வெளியாகும். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ஜப்பான், ஜெர்மெனி போன்றநாடுகளில் நியூ ஐபேட் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்தம்பிக்க வைக்கும் புதிய தொழில் நுட்பம் ஒன்று இந்த நியூ ஐபேட் டேப்லட்டில் இருக்கிறது. இதன் ரெட்டினா டிஸ்ப்ளே என்ற பிரத்தியேகமான தொழில் நுட்பம் ஒன்று இதில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இதில் உள்ளதால் எதையும் நேரில் பார்ப்பது போன்ற துல்லியத்தினை வெகு சுலபமாக பெறலாம்.

நியூ ஏ5எக்ஸ் சிப், குவாட் கோர் கிராஃபிக்ஸ், 5 மெகா பிக்ஸல் ஐசைட் கேமரா, 1080பி உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட வீடியோ என்று இதன் வசதிகள் ஏறாலம். ஆப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பான இந்த ஆப்பிள் நியூ ஐபேடில், வைபை மற்றும் 4ஜி எல்டிஇ நெட்வொர்க் தொழில் நுட்பமும் உள்ளது.

வைபை தொழில் நுட்பத்தினை கொண்ட நியூ ஐபேட் டேப்லட்டை வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்தில் பெறலாம். 16ஜிபி நியூ ஐபேட் மாடலை அமெரிக்காவில் ரூ.24,907 விலையிலும், 32ஜிபி மாடலை ரூ.29,899 விலையிலும், 64ஜிபி மாடலை ரூ.34,896 விலையிலும் பெறலாம்.

Saturday, March 24, 2012

மனிதனாக வாழ வழிகள்.

மிகவும் வேண்டியது
பணிவு
மிகவும் வேண்டாதது
வெறுப்பு
மிக பெரிய தேவை 
நம்பிக்கை
மிகவும் வேண்டியது 
பணிவு
மிகவும் வேண்டாதது 
வெறுப்பு
மிக பெரிய தேவை 
நம்பிக்கை
மிகக்கொடிய நோய் 
பேராசை
மிகவும் சுலபமானது
குற்றம் காணல் 
தரமற்ற குணம்  
பொறாமை
நம்பக்கூடாதது
வதந்தி 
ஆபத்தை ஏற்படுத்துவது 
அதிக பேச்சு
செய்யக்கூடாதது
நம்பிக்கை துரோகம் 
செய்யக்கூடியது
உதவி 
விளக்க வேண்டியது  
சோம்பேறித்தனம்
உயர்வுக்கு
வழி உழைப்பு
நழுவவிடக்கூடாதது 
வாய்ப்பு
பிரியக்கூடாதது 
 நட்பு
மறக்கக்கூடாதது   
 நன்றி
ஓவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது  
இறை பயம்


Thursday, March 22, 2012

சிறந்த  ஸ்மார்ட்  போன்

 சென்ற ஆண்டில் உலக அளவில் வெளியான ஸ்மார்ட் போன்களில், பல வகைகளில் சிறப்பு பெற்றதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 போன் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் உலக மொபைல் கருத்தரங்கில், மொபைல் தயாரிப்பு மற்றும் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் தயாரிப்புகள் குறித்த தகவல்களை வெளியிடுவார்கள். அதே நேரத்தில் சென்ற ஆண்டு சிறப்பாக இயங்கிய மொபைல் போன்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். இந்த விருதுகளை பன்னாட்டளவில் அமைக்கப்பட்ட ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தேர்ந்தெடுத்து வழங்குகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள் வரிசையில், சாம்சங் கேலக்ஸி எஸ்2 தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டின் சிறந்த சாதனத்தை வடிவமைத்த நிறுவனத்திற்கான விருதும் சாம்சங் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
ஸ்மார்ட் போன்களுக்கான தரம், செயல் வேகம், திரை அமைப்பு மற்றும் போனில் தரப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புகள் ஆகியவற்றில் புதிய இலக்குகளை எட்டியதாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜே.கே. ஷின் தெரிவித்துள்ளார்.
சிறந்த டேப்ளட் பிசிக்கான விருதை, அனைவரும் எதிர் பார்த்தபடி, ஆப்பிள் நிறுவனத் தின் ஐபேட் 2 பெற்றது. இன்றைய நாள் வரை, இந்த பிரிவில் ஐபேட் சாதனத்துடன் போட்டி யிடும் வகையில் எந்த நிறுவனமும் டேப்ளட் பிசியினைத் தயாரிக்கவில்லை. வரும் மாதங்களில், உலகின் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு மொபைல் உலகைக் கலக்கப் போகின்றன.

மனிதர்கள்

மனிதர்கள் குழந்தையாக இருக்கும்போது அயர்ச்சி அடைந்து வளரத் துடிக்கிறார்கள்.
வளர்ந்த பிறகோ, குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா' என்று ஏங்குகிறார்கள்.
பணத்தை ஈட்டுவதற்கு உடல் நலத்தை இழக்கிறார்கள்.
பிறகு,பணத்தை செலவழித்து உடல் நலத்தை மீட்க அரும் பாடு படுகிறார்கள்.
எதிர்காலத்தை எண்ணி நிகழ காலத்தை தவற விடுகிறார்கள்.அதனால் அவர்கள் நிகழ காலத்திலும் இல்லை, எதிர் காலத்திலும் இல்லை.
அவர்கள் வாழும்போது, சாகப் போவதே இல்லை என்பதுபோல வாழ்கிறார்கள்.
சாகும்போது வாழவே இல்லை என்பதுபோல வாடுகிறார்கள்.

Wednesday, March 21, 2012

போலி Memory Card, USB Flash drive வை கண்டுபிடிக்க இலவச மென்பொருள்..!!

 வணிகமயமாகிவிட்ட இந்த உலகில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் உற்பத்தி என்பது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நுகர்வோர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருப்பதால், பொருட்களை உற்பத்திசெய்யும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது..

இந்த வகையில் எலட்க்ரானிக் டிஜிட்டல் (Electronic Digital) சாதனங்களின் வரவும் வணிக சந்தையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்தகைய சாதனங்கள் தற்காலத்தில் குப்பைப் போல குவிந்துகிடக்கிறது.

உதாரணமாக கணினி சார்ந்த பொருட்கள், யு.எஸ்.பி டிரைவ்(USB Flash Drive), மெமரி கார்ட் (Memory Card), செல்போன்கள்(Cell phones) போன்றவைகள் ஏகமாக உற்பத்தி ஆகி வருகின்றன.

இவைகள் நாளும் ஒரு புது தொழில்நுட்பத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதாவது இன்று வாங்கிய புது மாடல்(New Model), அடுத்த நாளே அது பழைய மாடல்(old Model) என்று சொல்லும் அளவுக்கு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே உள்ளது.

நுகர்வோர்களின் தேவையைக் கருதி இத்தகைய எலக்ட்ரானிக்(Electronic)- டிஜிட்டல் சாதனங்கள்(Digital Device) ஒரிஜினலைப் போன்றே தோற்றத்தில் உள்ள பல போலிகளையும் சந்தையில் வெளியிட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய போலிகளை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவருவது சீனத் தயாரிப்புகள்தான்.

E Bay என்று சொல்லக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தில்கூட இத்தகைய போலிகள் மலிந்து கொட்டிக்கிடக்கின்றன.

இத்தகைய போலி பிளாஸ் டிரைவ்கள்(duplicate flash drive), யு.எஸ்.பி(USB_pendrive), மெமரி கார்டுகள்(Memory Card) அனைத்தும் சோனி(Sony),கிங்ஸ்டன்(Kingston) போன்ற பிரபல நிறுவனங்களில் பெயர்களிலேயே கிடைப்பதால் நம்மவர்களும் இதை உண்மையானதென எண்ணி வாங்கிவிடுகின்றனர்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால், நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் USB Drive, Memory Card போன்றவற்றைக் கூறலாம்.

குறைந்த விலைக்கே 256GB, 512GB, 640GB என கிடைப்பதால்தான் இதை பலரும் வாங்கிவிடுகின்றனர்.

ஆனால் உண்மையான ஸ்டோரேஜ் அவ்வளவு இருக்காது. ஒரு 4GB அல்லது 6GB வரைதான் இருக்கும். அதனால் குறிப்பிட அளவிற்கு மேல் கோப்புகளை அதில் சேமிக்கும்போது அதனுடைய செயல்படும் திறன் அப்படியே ஸ்தம்பித்துப் போகும் அல்லது அத்தோடு அதனுடைய வாழ்நாள் முடிந்துவிடும்.

உதாரணமாக 256GB கொள்ளவு கொண்ட ஒரு யூ.எஸ்.பி உங்களிடம் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். கணினியில் நிறுவிப் பார்க்கும்போது அதனுடைய கொள்ளவு 256GB என்று காட்டும். 

ஆனால் அது உண்மையல்ல.அவ்வாறு கொள்ளளவை மாற்றிக் காட்டுவதற்கென (அதவாது 256GB) என காட்ட அதில் ஒரு புரோகிராம் பதிந்து வைக்கப்பட்டிருக்கும். - பொய்யான தகவல்களை நமக்குக் காட்டும்.

Flash Driver, Memoy Card போலியானதா என கண்டுப்பிடிக்க:

இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருளைக் கொண்டு நாம் எளிதாக இத்தகைய போலிகளை கண்டுபிடிக்கலாம்.

மென்பொருளின் பெயர்: H2testw

மென்பொருள் தரவிறக்க சுட்டி:


இம்மொன்பொருளைப் பற்றிய மேலதிக விவரங்கள் காண சுட்டி:


இம்மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் USB Flash Drive , Memory card போன்வைகளை முழுவதுமாக எந்த கோப்புகளில்லாமல் செய்து கணினியில் இணைத்துவிட்டு, மென்பொருளில் டார்கெட்டாக மெமரி கார்ட் அல்லது பிளாஸ் டிரைவ்வை கொடுங்கள்.

சிறிய நேர சோதனைக்குப் பிறகு உங்களுடைய பிளாஷ் டிரைவ் அல்லது மெமரிகார்ட் போலியானதா.. அல்லது உண்மையானதா.. உண்மையான கொள்ளவு எவ்வளவு என்பதை துல்லியமாக காட்டிவிடும்.

சோதனையின் முடிவில் Test finished without errors என்று காட்டினால் உங்களது பிளாஷ் டிரைவ், Memory card உண்மையானது என கண்டுகொள்ளலாம்.

The media is likely to be defective என்ற செய்தி கிடைத்தால்...

நான் சொல்லவும் வேண்டுமா? என்ன? போலியானது என்பது உறுதியாகிவிடும். எனவே இத்தகை கணினி சார்ந்த சாதனங்களை வாங்கும்போது நன்றாக தெரிந்தவர்களிடம் வாங்குவது ஒன்றேதான் இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும். பணமும் விரயமாகாது.

குறைவான விலையில் கிடைக்கிறதே என வாங்கிவிட்டு பிறகு அவதிக்குள்ளாவது நாம் தான். கவனம் நண்பர்களே..!! எச்சரிக்கையாக இருப்பது என்றுமே நம் கையில்தான் இருக்கிறது. போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்.

Tuesday, March 20, 2012

வியப்பில் ஆழ்த்தும் மொபைல் போன்.

நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன் 

மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான். 

இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.

  X PAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் Spare-one என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒரு முறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.
இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேச முடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.
இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.
ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது.
 
 

 

Monday, March 19, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு!!

 
கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.

உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர்,https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.

Sunday, March 18, 2012

விண்வெளிக்கு லிப்ட்?


50 மாடி, 100 மாடி லிப்ட் கேள்விப்பட்டிருக்கலாம். விண்வெளிக்குஅதாவது சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு லிப்ட் அமைப்பது குறித்து ஜப்பானின் ஒபயாஷி நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். ஸ்டீலைவிட 20 மடங்கு உறுதியான கார்பன் நானோ டியூப் பயன்படுத்தி, பூமியில் இருந்து சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்கு ஒரு பிரமாண்ட போஸ்ட் நட வேண்டும். அதன் உச்சியில் ஆய்வு மையம் மற்றும் சுற்றுலா தளம் அமைக்கப்படும். போஸ்ட்டின் உச்சிக்கு லிப்ட்டிலேயே போகலாம். இந்த லிப்ட் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு நேரத்தில் 30 பயணிகள் சென்று வர முடியும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினால், 2050-ம் ஆண்டுக்குள் விண்வெளி லிப்ட் ரெடி என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார் ஆய்வு நிறுவனத்தின் தலைவி ஒபயாஷி.

Saturday, March 17, 2012

இந்தியாவின் 2வது பெண் விஞ்ஞானி


நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை: விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது
இந்தியாவின் விண்வெளி மற்றும் அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து, மேலும் பல தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் பறக்க விட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தியது. இந்த சந்திராயன் ராக்கெட் தயாரித்தவர் அதன் திட்ட இயக்குனர் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி. இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. 


இவர்கள் வரிசையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் விஞ்ஞானியான வளர்மதி சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த வளர்மதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 


இந்தியா தற்போது அதிநவீன மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்சேட்டி லைட் என்ற செயற்கை கோளை உருவாக்கி உள்ளது. இதனை தயாரித்தவர் தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதி. இவரிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதையடுத்து அதன் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி வளர்மதி பொறுப்பு ஏற்றார். 


அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இரவு பகலாக உழைத்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதற்கு ரிசாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரிசாட்-1 செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. 


அனேகமாக மார்ச் 15-ந்தேதிக்கு பிறகு செலுத்த ஏற்பாடு நடப்பதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். 


செயற்கைக்கோள் தயாரிப்பு பற்றி பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியதாவது:-
நான் கோவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தேன். 1981-ல் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் என்ஜினீயர் ஆகி இஸ்ரோவில் பணிபுரிந்தேன். ரிசாட்-தயாரிப்பு திட்ட இயக்குனராக இருந்த விஞ்ஞானி தியாகி ஓய்வு பெற்றதும் அதன் திட்ட இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றேன். 


இவ்வாறு அவர் கூறினார்.

2-வது பெண் இந்தியாவின் செயற்கைக்கோள் தயாரித்த 2-வது பெண்மணி வளர்மதியாவார். முதலாவது பெண் விஞ்ஞானி டி.கே.அனுராதா. இவர் ஜி சாட்-12 என்ற செயற்கைக்கோள் தயாரித்தார். அது கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

கின்னஸ் சாதனை படைத்த நபி(ஸல்) அவர்களின் வாழ்வைக்கூறும் உலகின் மிகப்பெரிய புத்தகம்

 நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றிக்கூறும் புத்தகம்,உலகின் மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதiனையை பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாக இது காணப்படுவதுடன், இப்புத்தகத்தை உருவாக்குவதற்கு 11 மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட புத்தமாகவும்,நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப்பற்றிக்கூறும் இப்புத்தகம் விளங்குகின்றது.துபாயின் பிரதி ஆட்சியாளாரும், ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதி அமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூமால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் அதிகாரிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாத்தின் கடைசி நபியாக முஹம்மத்(ஸல்) அவர்கள் காணப்படுவதுடன், சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயல்திட்டத்தின் நோக்கமாகும் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வைப் பற்றிக்கூறும் இப்புத்தகமானது 420 பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையுடையது.
இது 5 மீற்றர் நீளமும்,4 மீற்றர் அகலமும் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.




 
 

Friday, March 16, 2012

இன்டர்நெட் போதை

சிகரெட், மதுவைக் காட்டிலும் இண்டர்நெட் மோகத்தை கைவிடுவது கடினம்!

இன்றைய கணினி உலகில் மின்னஞ்சல், எஸ்எம்எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக ஊடகம் இளைய தலைமுறையினரிடையே அத்தியாவசியமான ஒன்றாகி போய்விட்டது.
இன்றைய இளைஞர்கள் கையில் வேறு எது இருக்கிறதோ இல்லையோ... லேப்டாப் அல்லது மொபைல்ஃபோன் இருப்பது சர்வ நிச்சயமாகி விட்டது. 
இந்நிலையில் இந்த சமூக ஊடகம் நமது இளைஞர்களிடையே எந்த அளவுக்கு ஆழ ஊடுருவியுள்ளது என்பது குறித்து ஆய்வு ஒன்றை சிகாகோ பல்கலைக்கழக குழு ஒன்று நடத்தியது.
இதில் சிகரெட் மற்றும் மதுவைக் காட்டிலும் மேற்கூறிய சமூக ஊடகத்திற்கு பலர் மிகவும் அடிமைப்பட்டிருப்பது உறுதியானது.
உட்ஸ்பர்க்கின் ஜெர்மன் நகரத்தில், பிளாக்பெர்ரியைப் பயன்படுத்தி 18 முதல் 85 வயதிற்குட்பட்ட 205 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களது மன உறுதி பரிசோதிக்கப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது அனுபவம் மற்றும் வலிமை பற்றி ஒரு நாளைக்கு ஏழு முறை கேட்கப்பட்டது.
அவர்கள் கூறிய முடிவுகளுடன், ஆயிரக்கணக்கான பதில்களைக் கொண்டு குழு பார்வையிட்டதிலிருந்து, மது மற்றும் சிகரெட்டைக் காட்டிலும் சமூக ஊடகத்தைத் தடைசெய்வது கடினம் என்று தெரியவந்துள்ளது.

 

Thursday, March 15, 2012

உங்களுக்கென்று ஒரு இலவச Hard Disk.


இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக (hard disk) பயன்படுத்த முடியும்.இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25GB வரை அதிகரிக்க முடியும்.இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும்.இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:
1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.PT
2. தற்போது உங்களது my computer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்..
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.
4. இப்போது குறித்த Hard disk இல் நீங்கள் விரும்பியவற்றை சேமித்து வைப்பதோடு உலகின் எந்த மூலையிலிருந்தும் பாவித்தும் கொள்ளலாம்.

Wednesday, March 14, 2012



ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.

அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்