Saturday, July 31, 2010

மிக பெரிய பனிமலை கடலில் விழுந்தது.

சுமார் 3,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்தது. அதாவது ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் என்ற நாட்டின் பரப்பளவுக்கு சமமான பனிமலைச் சிகரம் மெர்ட்ஸ் என்ற மிகப்பெரிய பனிமலையிலிருந்து பெயர்ந்து விழுந்துள்ளது.
இதனால் கடல் நீர் சுழற்சியில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பி9பி (B9B) என்று அழைக்கப்படும் மற்றொரு பனிமலை மெர்ட்ஸ் பனிமலை மீது மோதியதில் பல பில்லியன் டன் நிறையுள்ள, நினைத்துப் பார்க்க முடியாத பரப்பளவிலான பனிமலை உடைந்து அண்டார்டிகா கடலில் விழுந்துள்ளது.
கிழக்கு அண்டார்டிக்காவிலிருந்து தெற்குக் கடலில் இந்த பனிமலை பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த இரண்டு பனிமலைகளும் தற்போது அடுத்தடுத்து அண்டார்டிகாவில் மிதந்து வருகிறது என்று ஆஸ்ட்ரேலிய அண்டார்டிகா ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மிகப்பெரிய பனிமலையில் ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு நாடுகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடியது என்று அவர் மேலும் கூறினார்.
இதனால் ஐரோப்பாவில் பனிப்பொழிவு நாட்களும், பனிப்பொழிவு அளவும் அதிகரிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிகழ்வு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதன் நீண்ட கால தாக்கம் பற்றி நாம் கவலையடையாமல் இருக்க முடியாது என்று கிரின்பீஸ் ஆய்வுச் சோதனை மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
இந்த பனிமலை உடைந்து விழுந்த அண்டார்டிகா கடல் பகுதியில் கடல்பனி அவ்வளவாக இல்லாத ஒரு இடமாகும். இதனால் இங்கு வாழும் உயிரினங்கள் உணவிற்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பனிமலை உடைந்து விழுந்த இடம் குளிர்ந்த, அடர்த்தியான பிராண வாயு நிரம்பிய நீர் உருவாகும் இடமாகும். இது கடல்தரைக்குச் சென்று ஆழ்கடலை பிராண வாயு நிரம்பிய ஒன்றாக மாற்றும்.இப்போது இந்தப் பனிமலை உடைந்து அண்டார்டிகாவில் விழுந்தது, மேற்கூறிய பிராண வாயு உருவாக்க நடவடிக்கையில் தாக்கம் ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் என்னவென்று இப்பொது கூற முடியாது என்று அந்த விஞ்ஞானி தெரிவித்தார்.

Friday, July 30, 2010

உலகின் முதல் விமானியில்லா போர் விமானம் !: கண்டம் விட்டு கண்டம் பறக்கும்.

லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
'தரானிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் சோதனை விமானத்தை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை இன்று வெளியுலகுக்கு முதன்முறையாகக் காட்டியது.
எதிரி நாட்டு ரேடார்களி்ல் சிக்காத தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானத்தை இயக்க விமானிகள் தேவையில்லை. தரையில் இருந்தவாறு ரேடியோ காண்டாக்ட் மூலம், விமானத்தின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்தலாம். ஏவுகணைகளை வீசலாம், குண்டுகளை வீசித் தாக்கலாம்.
விமானத்தில் உள்ள கேமராக்கள் உதவியோடு தரைக் கட்டுப்பாட்டு அறையின் திரையில் விமானத்தின் பாதையை தீர்மானிக்கலாம், மாற்றலாம். விமானம் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை உடனுக்குடன் அறியலாம். தாக்க வரும் விமானத்தை, ஏவுகணையை எதிர்த்து எவுகணையை செலுத்தலாம்.
விமானியின் துணை இல்லாமலேயே, மிக நீண்ட தூரம், கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் திறன் வாய்ந்த இந்த விமானம் போர் விமானங்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதுவரை ஆளில்லா உளவு விமானங்கள் தான் போர் முனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் சமீப காலமாக ஏவுகணைகளையும் பொறுத்தி அவ்வப்போது ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் குண்டுவீ்ச்சையும் நடத்தி வருகிறது அமெரிக்கா . ஆப்கானிஸ்தான் ராணுவத் தளங்களில் இருந்து கிளம்பும் இந்த விமானங்களை அமெரிக்காவில் இருந்தபடி பாதுகாப்புத்துறையினர் கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் முழுக்க முழுக்க ஆளில்லாமல் இயங்கும் இந்த 'தரானிஸ்' போர் விமானத்தையே இங்கிலாந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'தரானிஸ்' என்றால் இடியைக் குறிக்கும் கடவுளின் பெயராம்!

பெண்ணின் வயிற்றில் 2 கர்ப்ப பைகள் இரட்டை குழந்தைகள் வளர்கின்றன.

அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார்.
இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.
பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை கர்ப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் வளர்வதாலும், வெவ்வேறு நேரத்தில் கர்ப்பமாகி இருப்பதாலும் குழந்தை வளரும்போது இதில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே என்ன செய்யலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

“மூளையை “ஸ்கேன்” செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்கலாம்” ஆய்வில் தகவல்

மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால. திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும்.
இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர்.
இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆய்வு நடத்தினார். ஒருவருக்கு உள்ள திறமை மற்றும் தனித்தன்மை என்ன என்று மூளைக்கு தான் தெரியும். எனவே, மூளையை “ஸ்கேன்” செய்வதன் மூலம் இதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் 6 ஆயிரம் பேரின் மூளைகளை ஸ்கேன் செய்து ஆய்வு மேற் கொண்டார்.

பூமியைப் போன்ற 140 கிரகங்களை கண்டுபிடித்த கெப்லர் விண்கலம்!

அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள இந்த exoplanets என்றழைக்கப்படும் சூரிய மண்டலங்களில் உள்ள 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்காலம் என்று கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளி மண்டத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17bயின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்).
நமக்கு பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் வி்ண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த கணித மேதை, கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், கிரகங்களின் இயக்கம் குறித்த கணக்கீட்டை 1960களில் தனது 3 விதிகளில் அடக்கிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.

சீனாவில் 110 கோடி பேரிடம் டெலிபோன்கள்.



சீனாவின் மக்கள் தொகை 130 கோடி ஆகும். இவர்களில் 110 கோடி பேரிடம் டெலிபோன் இருப்பதாக தெரியவந்து உள்ளது. டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் முடிய உள்ள 5 மாதங்களில் டெலிபோன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 110 கோடி ஆனது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் 4 கோடியே 8 லட்சம் டெலிபோன்கள் அதிகரித்து உள்ளன. இந்த கால கட்டத்தில் `லேண்டுலைன்’ போன் வைத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 78 லட்சம் குறைந்து 30 கோடியே 60 லட்சம் ஆகவும், மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 85 லட்சம் அதிகரித்து 79 கோடியே 60 லட்சம் ஆனது.
இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 11 கோடியே 30 லட்சம் ஆகும்.

100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்தது

அண்மையில் அமெரிக்க உளவுத்தகவல்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ் என்ற இணையத்தளம்.
தற்போது த பைரட் பே என்ற இணையத்தளத்தில் 100 மில்லியன் பேஸ்புக் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஒருங்கே திரட்டி தரவிறக்குவதற்கேற்ற வகையில் வெளியிட்டுள்ளனர்.
இவ்வளவு தகவல்களையும் வெளியிட்டவர் thepiratebay.org இணையத்தளத்திற்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்
Ron Bowes என்பவரே ஆவார்.
பேஸ்புக்கின் பிரைவசி செட்டிங்க் மூலமாக தனது தனிப்பட்ட தகவல்களை மறைத்து வைக்காதவர்களிடமிருந்தே அவர்களது தகவல்களை திரட்டியதாக Ron Bowes தெரிவித்தார் எனவும் இதற்காக விஷேட கணனி நிரலிகளை உருவாக்கி அதைக்கொண்டு எல்லா பேஸ்புக் புரொவைலையும் ஸ்கான் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவல்களை பிரைவசி செட்டிங்க் மூலம் மாற்றங்கள் செய்து பாதுகாப்பாக வைக்காதவர்கள் இனிமேல் மாற்றியும் பலனில்லை என்றும் தெரியவருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்களை பலமாக மறுத்த பேஸ்புக் இவ்வாறு இணையத்தில் கசிந்த தகவல்கள் ஏற்கனவே ஆன்லைனில் இருப்பவைதான் என்று தெரிவித்துள்ளது.
தெரிந்த நண்பரின் தகவலை வைத்து பேஸ்புக்கில் தேடும்போது கிடைக்க கூடிய தகவல்களே இவை என்றும் பேஸ்புக் தெரிவித்தது. அண்மையில் தான் பேஸ்புக் சுமார் அரை பில்லியன் பாவனையாளர்களை எட்டியது.

Thursday, July 29, 2010

ஜோர்ஜ் வோஷிங்டன் அணு குண்டு தாங்கிய கப்பல்.

இளைஞர்கள் தற்கொலை எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம்!



உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம் என்று ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு‌ள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை 3ஆ‌ம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு எனவும் மனநல மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊடகவியாளருக்கான மனநல விழிப்புணர்வு கருத்தரங்கு நே‌ற்று சென்னையில் நடைபெற்றது. மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகமும், மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி நிறுவனமும் (ஸ்கார்ஃப்) இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மனநல மருத்துவரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் சாரதா மேனன் சிறப்புரையாற்றினார்.
மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என்ற கேட்டுக்கொண்ட அவர், பொது மக்களிடம் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற இயலும் என்று தெரிவித்தார். மனச்சிதைவு உள்ளிட்ட மனநோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறிய டாக்டர் சாரதா மூட நம்பிக்கைகளை கைவிட்டு அறிவியல் பூர்வமாக இதனை அணுக வேண்டும் என்று கூறினார்.
உரிய மருத்துவரின் ஆலோசனைகளுடன் சரியான மருந்துகளை உட்கொண்டால் மனநலம் பாதித்தவர்களை குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை திரைப்படங்கள் சரியான கோணத்தில் சித்தரிக்க வேண்டும், ஆக்கபூர்வமாக அணுக வேண்டும் என்றும் டாக்டர் சாரதா தெரிவித்தார்.
கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய அபிராமி ராமநாதன், மனச்சிதைவு நோயால் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்புகளை நேரடியாக பார்த்த அனுபவம் தனக்கு உண்டு என்றும் சரியான மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் மனநோயாளிகளுக்கு தேவை என்றும் எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் உரையாற்றிய பத்திரிகைத் தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் க.மா.ரவீந்திரன், இன்றைய அவசர உலகில் மக்களை பெரிதும் பாதிப்பது மன அழுத்தமும், அதன் விளைவுகளும் தான் என்று கூறினார். மனநலம் தொடர்பான விழிப்புணர்வு செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்கார்ப் அமைப்பு வருடம் தோறும் “ஃப்ரேம் ஆஃப் மைன்ட்” என்ற மனநலம் தொடர்பான விழிப்புணர்வு திரைப்பட விழாவை நடத்தி வருவதாகவும், ஐந்து நிமிடங்களுக்குள் மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதாகவும் இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் தாரா தெரிவித்தார். ‘மனநல குறைபாடு மற்றும் நோய்களை தீர்ப்பதில் குடும்பத்தின் பங்கு’ என்பது இந்த ஆண்டு குறும்பட போட்டிக்கான தலைப்பு. போட்டிக்கான குறும்படங்களை இந்த ஆண்டு திரைப்பட விழாவிற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
மன அழுத்தமும், தற்கொலையும் என்ற தலைப்பில் சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் லட்சுமி விஜயகுமார், சிறுவர் மற்றும் வளர் இளம் பருவத்தினரின் மனநலம் என்ற தலைப்பில் குழந்தைகள் நல மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் ஜெயந்தினி, மனச்சிதைவு நோய், மனநலம் மற்றும் ஊடகங்கள் என்ற தலைப்பில் ஸ்கார்ப் அமைப்பைச் சார்ந்த டாக்டர் மங்களா ஆகியோர் உரையாற்றினர். பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர்.

துருக்கிய பெண்ணின் எவரெஸ்ட் ஏறும் முயற்சி தோல்வி

எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை கைவிட்டுப் பாதியில் திரும்பினார் ஒரு துருக்கியப் பெண்மணி.
துருக்கியைச் சேர்ந்த ஐகோ பனாஹாஷி (வயது 70 ), வக்கீலாக பணி புரிகிறார். இவர் உலகிலேயே மிக உயரமான பனிபடர்ந்த இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க விரும்பினார்.
அதற்காக நியூசிலாந்தை சேர்ந்த மார்க்விண்டன் வுட்வார்ட் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
சுமார் 6 ஆயிரம் அடி உயரம் ஏறியவுடன் கடும் குளிர் நிலவியது. மேலும் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது. கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எனவே, எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது முயற்சியை அவர் கைவிட்டுப் பாதியில் திரும்பினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு மே மாதம் ஜப்பானைச் சேர்ந்த தேம் வாடனபிள் என்ற பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இவர் 8,848 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்தார். அப்போது அவருக்கு 63 வயது.
ஆனால் பனாஹாஷி, தனது 70ஆவது வயதில் எவரெஸ்ட் சிகர உச்சியில் ஏறி அதிக வயதில் மலை ஏறிய முதியவர் என்ற உலக சாதனை படைக்க விரும்பினார். இதற்காகத் தற்போது 5ஆவது தடவையாக கடும் முயற்சியில் ஈடுபட்டார்.
பாதியில் திரும்பியதால் அவரது உலக சாதனை கைநழுவியது. பன்ஹாசி கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க முயன்று வருகிறார். ஆனால் அவரால் இன்னமும் அந்தச் சாதனையை எட்ட முடியவில்லை.
பனாஹாசி திருமணம் ஆனவர் அவரது கணவர் அட்டர்னி காஷீ போசி (76). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். _

'பேஸ் புக்' கில் ஒசாமாவின் பெயரை நீக்கிவிட முடிவு.

ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம் என்று பேஸ் புக் நிறுவன செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரூ நாய்ஸ் தெரிவித்தார்.
உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதிவை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்டர்நெட் உலகில் அபார வளர்ச்சி அடைந்து வரும் பேக்ஸ்புக்கில் நாள்தோறும் பலர் தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதன் மூலம், தங்களை இதில் சேர்த்துக் கொண்டவர்கள் தங்களது நண்பர்கள் வட்டாரங்களைப் பெருக்கி கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் பெரும் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில் ஒசாமா பின்லேடன் பெயரிலான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரவாக சேர்ந்துள்ளனர். பலர் தங்களது மத ரீதியான கோட்பாடு மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டும் வாசகங்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
பிரின்ஸ் ஒப் முஜாகிதீன் என்றும் ஒசாமாவை வர்ணித்துள்ளனர். இவர் மலை பகுதியில்தான் பதுங்கி இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அல்-கொய்தா மற்றும் அல்சகாப் பயங்கரவாத அமைப்பின் கோட்பாடுகளும் இதில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆடியோ கேசட்டுகளும் இருக்கின்றன.
இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் இந்தப் பதிவை அழிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆண்ட்ரூ நாய்ஸ் இது குறித்து மேலும் கூறுகையில்,
"பேஸ்புக்கில் மக்கள் சிலர் போலியான பெயர்களைப் பதிவு செய்கின்றனர். இவர்கள் புகழ்பெற்ற அல்லது வேறு மாற்று நபர்கள் பெயரிலோ பதிவு செய்கின்றனர்.
ஒசாமா பின்லேடன் பெயரில் பதிவு செய்யும் நபர்கள் எந்த வகையில் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற விவரத்தை எங்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை.
இருந்தாலும் ஒசாமா பின்லாடன் பெயரில் பதிவு வந்தால் அதனை முழுமையாக நீக்கிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.

ஈராக்கில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு _

ஈராக்கின் பலுஜா நகரில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்திற்கும், சுனி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த ஆறு வருட காலமாக பலுஜா நகரில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் தலைநகர் பக்தாத்திலிருந்து 40 மைல் தொலைவில் பலுஜா நகரம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நகரில் பிரசவிக்கப்படும் பல குழந்தைகள் உடற் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும், இந்த நிலைமை தொடர்பில் ஈராக்கிய அரசாங்கமோ அல்லது அமெரிக்காவோ இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
நாள்தோறும் இரண்டு மூன்று உடற் குறைபாடுடன் கூடிய பிரசவங்கள் இடம்பெறுவதாக பலூஜா தேசிய வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் சமீரா அல் அனி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் ஏனைய எவரும் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிடவில்லை.
உடற் குறைபாடுகளுடன் பலூஸா நகரில் குழந்தைகள் பிறக்கின்றமைக்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடையாதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தலைகளுடன் பிறத்தல், உடல் அவையங்கள் இன்றி பிறத்தல், மேலதிக அவையங்களுடன் பிறத்தல், இருதய நோய்களினால் பாதிக்கப்படல் என பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை பலூஜாவில் பிறக்கும் குழந்தைகள் எதிர்நோக்கி வருவதாக பி.பி.சீ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

Wednesday, July 28, 2010

கூகுளுடன் கைகோர்க்கும் யாஹூ

இணைய உலகின் ஜாம்பவான்களாகிய யாஹூவும் கூகுளும் இன்று ஜபானில் கைகோர்த்துள்ளது. yahoo japan நிறுவனம் தனது தேடுபொறியை கூகிளின் உதவியுடன் இயக்கும் என அறிவித்துள்ளது.
இன்று காலை இந்த அறிவித்தல் வெளியானதாக பல இணைய தளங்கள் உறுதி செய்துள்ளன. yahoo japan நிறுவனமாத்தின் பெரும்பான்மை பங்கினை(40%) Softbank Corp நிறுவனம் கொண்டிருப்பதும் yahoo inc 35% பங்கினை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜபான் சந்தையில் 53% பங்கினை யாஹூ ஜபானும் 35% பங்கினை கூகிளும் கொண்டுள்ள இந்த தருணத்தில் இந்த ஒப்பந்தமானது மற்றய அனைத்து தேடுபொறிகளையும் பின்தள்ளிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.
மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.

Tuesday, July 27, 2010

இது எப்படி இருக்கு?????

கிரீஸ் திவாலான கதை!


ஐரோப்பாவின் மிகப் பெருமைக்குரிய சேதம் கிரீஸ் எனும் கிரேக்கம். உலக நாகரிகத்தின் பிறப்பிடமாகப் பார்க்கப்பட்ட நாடு.
பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் ஆளுமையிலும் உலகின் பெரிய வல்லரசுகளுக்குச் சமமான அந்தஸ்து பெற்ற கிரீஸ் இன்று மொத்தமாக திவால்!.
முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது அந்த நாடு. வர்ணிக்க முடியாத அளவு மோசமான பணவீக்கம், மைனஸ் 3 ஆக பயமுறுத்தும் ஜிடிபி வீழ்ச்சி, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், எங்கும் வேலையின்மை ஓலம்… இனி மீள முடியுமா என்ற பயத்திலும் சோகத்திலும் மக்கள். நிலைமை கைமீறிப் போனதில் உள்நாட்டுக் கலகம் மூள ஆரம்பித்திருக்கிறது. நாடு தழுவிய புரட்சி வெடிக்குமோ என்ற கேள்வி எங்கும் தொக்கி நிற்கிறது.
என்ன ஆனது இந்த நா+ட்டுக்கு… எப்படி இந்த நிலைமை வந்தது?
எல்லாவற்றுக்கும் மூல காரணம் அரசின் தவறான நிதிக் கொள்கைதான். ஐரோப்பிய யூனியனில் முக்கிய அங்கமான கிரீஸ், 2001ம் ஆண்டிலிருந்து யூரோ நாணயத்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவழிக்கிறோம் என்று கூறி, பல ஆயிரம் கோடி யூரோக்களை கடன் வாங்கிக் குவித்துள்ளது கிரீஸ். இன்றைய தேதிக்கு கிரீஸின் கடன் அளவு 300 பில்லியன் யூரோக்கள் (ஒரு யூரோவி்ன் மதிப்பு ரூ. 58). நாட்டின் மொத்த உற்பத்தியை விடச 125 சதவீதம் அதிகம் இந்தக் கடன்!.
கடன்களுக்கான தவணை மற்றும் வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு பல லட்சம் கோடி யூரோக்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆனால் கஜானாவில் பணமில்லை. காரணம் உள்நாட்டில் நடக்கும் பெருமளவு வரி ஏய்ப்பு. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள், வரி செலுத்தவே மறுக்கின்றனர்.
உற்பத்தியிலும் பெரும் வீழ்ச்சி. கடன்களை மட்டுமே நம்பியிருந்த நாட்டுக்கு, அந்தக் கடன்வரத்து முற்றிலும் நின்றுபோக, விழி பிதுங்கியது. நாட்டின் மொத்த உற்பத்தியோ பூஜ்யமாகி, மைனஸுக்கும் போய்விட்டது.
இதையெல்லாம் குறிப்பிட்ட காலம் வரை சாமர்த்தியமாக மறைத்து வந்த கிரீஸ், சமாளிக்க முடியாத நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உண்மையைச் சொன்னது. அதுவரை கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது கடனை திருப்பிக் கேட்கத் துவங்கின.
கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் டெபாஸிட்டுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்துள்ளனர்.
இப்படி கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நச்சுச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனையே பாதிக்க, இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
கிரீஸுக்கு இந்த ஆண்டு 25 பில்லியன் யூரோ அளவுக்கு குறைந்த வட்டிக்கு கடன் அளித்து நிலைமையைச் சமாளிக்க வைக்கலாம் என்று ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனமும் உதவ முன் வந்துள்ளது.
ஆனால், கிரீஸ் வாங்கிய பழைய கடன்களுக்கான ஆண்டு தவணையே 55 பில்லியன் யூரோ எனும்போது, இந்த 25 பில்லியன் யூரோவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, உள்நாட்டில் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்துப் பொருள்கள், பணிகளின் வரிகளை தாறுமாறாக உயர்த்திவிட்டது கிரீஸ் அரசு. உபயம்- சில தனியார் நிறுவன முதலாளிகள். இதனால் கடுப்பான மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர் போராட.
கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் மூண்டு விட்டதோ என்ற அச்சம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆக்ரோஷமான போராட்டமாக அமைந்துவிட்டது. ஏதென்ஸில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற கலவரங்கள் மூண்டன. இந்தக் கலவரங்களில் 3 பேர் பலியாகியதும் நேற்று நடந்தது.
‘பிரான்ஸ் புரட்சிக்கு முன்பு வெர்சைல்ஸ் நகரில் குவிந்த மக்களின் ஆக்ரோஷத்தைப் படித்திருக்கிறோம். அதை நேற்று கிரீஸில் நேரில் பார்த்தோம்’, என்கிறார் ஒரு செய்தியாளர்.
கிரீஸின் இந்த நிலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. அமெரிக்காவின் வீழ்ச்சி எப்படி உலகம் முழுக்க கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல, கிரீஸின் வீழ்ச்சி ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
கிரீஸின் இந்த வீழ்ச்சியால், யூரோ நாணயத்தின் மதிப்பே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் 1.45 டாலராக இருந்த யூரோ மதிப்பு, இன்று 1.27 டாலராக குறைந்துவிட்டது.
நிலைமை இப்படியே போனால் டாலரை விட யூரோ மதிப்பு குறைந்துவிடும். இதனை ஐரோப்பிய யூனியன் நிச்சயம் விரும்பாது… அத்தகைய சூழலில் கிரீஸை ஐரோப்பிய யூனியனை விட்டேகூட விலக்க வேண்டிய நிலை வரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
சர்வதேச பங்கு வர்த்தகத்திலும் கிரீஸ் வீழ்ச்சியின் தாக்கம் தெரியத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் இன்று கூடிப் பேசவிருக்கின்றனர். அதில்தான் கிரீஸின் தலை எழுத்து நிர்ணயிக்கப்பட உள்ளது!.

எவரெஸ்ட் செல்லும் ஹிலாரி அஸ்தி



எவரெஸ்ட் சிகரத்தை 50 வருடங்களுக்கு முன்னர் முதலில் எட்டிய சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களின் அஸ்தி அந்த சிகரத்தில் கொண்டு சென்று தூவப்படவுள்ளது. ட்மண்ட் ஹிலாரி 2008 இல் காலமானார் ந்த அஸ்தியை நேபாளத்தின் முக்கிய மலையேறியான அபா ஷெர்பா அவர்கள் செவ்வாய்க்கிழமை காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட்டுக்கு எடுத்துச் செல்கிறார்.
அபா ஷெர்பாவைப் பொறுத்தவரை இந்த சிகரத்துக்கான அவரது 20 வது மலையேற்றம் இதுவாகும். 848 மீட்டர்கள் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்துக்கு இதுவரை 19 தடவைகள் மலையேறிச் சென்றிருக்கின்ற அபா ஷெர்பாதான் உலகிலேயே அச்சிகரத்துக்கு அதிக தடவை ஏறியவராவார்.
தனது எவெரெஸ்டுக்கான 20 வதாவது மலையேற்றத்தை நியூசிலாந்து நாட்டின் மலையேறியான சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களுக்கு அஞ்சலி செலுத்த பயன்படுத்த வேண்டும் என்பது அவரது விருப்பம்.
எட்மண்ட் ஹிலாரி அவர்கள் 1953 ஆம் ஆண்டு டென்சிங் நோர்கே ஷெர்பாவுடன் எவரெஸ்ட்டுக்கு ஏறினார்.
2008 இல் எட்மண்ட் ஹிலாரி அவர்கள் காலமானதை அடுத்து அவரது அஸ்தியில் ஒருபகுதி ஒக்லாண்ட் துறைமுகத்தில் கரைக்கப்பட்டது. மிகுதி எவரெஸ்ட்டில் தூவப்படுவதற்காக ஒரு மடாலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த சாம்பலை அங்கு எடுத்துச் சென்று தூவுவதற்கு திட்டமிட்டுள்ள அபா ஷெர்பா, அங்கு ஒரு சிறிய புத்தர் சிலையையும் நிர்மாணிக்க விரும்புகிறார்.
கிலாரி அவர்கள் தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் எவரெஸ்ட் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பள்ளிக்கூடங்களையும், மருத்துவ மனைகளையும் திறந்து தந்ததற்காக அவருக்கு தனது நன்றியை தெரிவிக்க தான் விரும்புவதாக அபா ஷெர்பா கூறுகிறார்.
தனது இந்தப் பயணம், எவரெஸ்ட்டில் முன்னர் சென்ற மலையேறிகள் விட்டு வந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதையும் முக்கியத்துவப்படுத்த உதவ வேண்டும் என்பது அபா ஷெர்பாவின் நோக்கம்.
ஹிமாலயத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதன் காரணமாக அங்கு பழைய மலையேறிகள் விட்டுவிட்டு வந்து, உறைந்துபோய்க்கிடந்த ஒக்சிசன் சிலிண்டர்கள் மற்றும் உணவுப் பொதிகள் ஆகியவை இப்போது கீழே வரத்தொடங்கியுள்ளன.
மலையேறிகளுக்கான வழிகாட்டிகளாக செயற்படும் ஷெர்பாக்களுக்கு, இந்தக் குப்பைகளை அகற்றுவதற்காக, ஒரு கிலோ குப்பைக்கு தலா ஒன்றைரை டாலர்கள் தற்போது வழங்கப்படுகின்றது.
இந்தத் திட்டம் தொடர்ந்து செயற்படுவதற்கு தனது இந்தப் பயணத்தின் மூலம் கிடைக்கும் நிதி பயன்படும் என்று அபா ஷெர்பா நம்புகிறார்.

மின்சாரக்கார்



ஜெனரல் மோட்டார் நிறுவனம் இந்த வருட இறுதியில் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் எலக்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்யும் ரிவா எலக்ரிக் கார் கம்பெனியுடன், மின்சாரத்தால் இயங்கும் காரை தயாரிக்க சென்ற வருடம் செப்டம்பரில் ஜெனரல் மோட்டார் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ஏற்கனவே ரிவா சிறிய எலக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த வருட இறுதியில், ஜெனரல் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான நான்கு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவரும், இயக்குநருமான பி.பாலேந்திரன் கூறுகையில், ஜெனரல் மோட்டார் இ-ஸ்பார்க் என்ற எலக்ட்ரிக் காரை தயாரிக்க ரிவாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது ஜெனரல் மோட்டாரின் சிறிய ரக காரை போன்று இருக்கும். இதற்கு தேவையான பேட்டரி தொழில் நுட்பத்தை ரிவா நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்தார்.

Monday, July 26, 2010

மரண வாசலை தொட்டு வந்த விமானி (வீடியோ இணைப்பு)


கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்தது.அதற்கான பயிற்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானியான கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார்.
இவர் CF-18 ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாமர்த்தியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன்.
இதை இன்னும் என்னால் நம்பமுடியாமல் உள்ளது.இயந்திரத்தில் ‘பொப்… பொப்… பொப்…’ என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.

Sunday, July 25, 2010

டைனோசரை ஒத்த உயிரினத்தின் எலும்புகள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு!

மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எலும்புகள், முன்னர் டைனோசர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் காலத்திற்கும் சுமார் 10 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது எனக் கருதப்படுகின்றது.
தன்சானியாவில் உள்ள இடமொன்றிலிருந்து இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினம் இருநூற்று நாற்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தப் புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நகரங்கள் நகர்வு.

சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி சிலி நாட்டின் மேற்கு கடற்கரையில் 8.8 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.
பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர்டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.
வல்பாறைசோ, மென்டோஷா, ஆர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thanks To.......Virakesari.

ஆப்பிள் நிறுவன 'ஐபேட்' கம்பியூட்டர் விற்பனையில் சாதனை.

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்பியூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்தது. 2 மாதங்களில் 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனையானது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

7 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்பியது ஜப்பான் விண்கலம்!

  பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் 15 /6 /2010 அன்றைய தினம் பூமிக்கு திரும்பியுள்ளது.
பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்தக் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது.
இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர்.
எனவேதான், அக்கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்து எடுத்துவர ஹயபுசா விண்கலத்தை அவர்கள் அனுப்பினர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்குத் திரும்பியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள்( கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் அரட்டை அடிக்க…

உலகின் மிக பெரிய சோசியல் நெட்வொர்க் பேஸ் புக். இதில் தன்னை இணைத்து கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன் பாடு அதிகரித்து வருகிறது. இதில் நீங்கள் மற்றவரிடம் அரட்டை அடிக்க விருபினால் chat window வை உபயோகிப்பீர்கள். அதில் தட்டச்சி மட்டும் செய்யாமல், அரட்டை அடிக்கும் போது உபயோகிக்க படும் சில சிறப்பான தட்டச்சி அம்சங்கள் உங்களுக்காக. இதை நான் ஒரு இணையத்தளத்தில் பார்தேன்.
உங்கள் வார்தையை தடிப்பாக( Bold ) தட்டச்சு செய்ய. தடிப்பாக காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( * ) சிம்பலை தட்டச்சு செய்யவும், உதரணத்துக்கு:
*I love U* என்று தட்டச்சு செய்தால் I love U என்று தடிப்பாக வரும்
உங்கள் வார்தைக்கு கீழ் அடிக்கோடு இடு ( underline ) தட்டச்சு செய்ய.
அடிக்கோடு இடு காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( _ ) அடிக் கோடு சிம்பலை தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:
_I love U_ என்று தட்டச்சி செய்தால் I love U என்று அடிக் கோடும் வரும்
உங்கள் வார்தையை தடிப்பாகவும், அடிக்கோடு இடும் சேர்ந்து தட்டச்சி செய்ய. வார்த்தைக்கு முன்னும் (*_ ) சிம்பலை சேர்த்து மற்றும் வார்த்தைக்கு பின்பு (*_ ) சிம்பலை சேர்த்து தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:
*_I love U_* என்று தட்டச்சி செய்தால் I love U என்று வரும்
Smile :) or :-) or :] or =)
Frown :( or :-( or :[ or =(
Tongue :p or :-p or =P
Grin :D or :-D or =D
Gasp :O or :-O or :o or :-o
Wink ;) or ;-)
Glasses 8) or 8-) or B) or B-)
Sunglasses 8| or 8-| or B| or B-|
Grumpy >:( or >:-(
Unsure :/ or :-/ or :\ or :-\
Cry :'(
Devil 3:) or 3:-)
Angel O:) or O:-)
Kiss :* or :-*
Heart <3
Kiki ^_^
Squint -_-
Confused O.o or o.O
Upset >:O or >:-O or >:o or >:-o
Pacman :v
Colon Three :3
Robot * :| ]
Putnam * :putnam:
Shark * (^^^)
Penguin * (Added 17 Sept 09) <(“)
இதை பயன்படுத்தி அரட்டை அடித்து மகிழுங்கள்.
Thanks To.......Kokkarako.