Friday, April 30, 2010

மெல்லிய லேப்-டாப்: ஆப்பிள் திட்டம்

சர்வதேச சந்தையில் தற்போதுள்ள லேப்-டாப்களை விட மெல்லிய, எடைகுறைந்த நவீன லேப்-டாப் கணினியை ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மடிக்கணினியில் ஹார்ட்-டிஸ்க் பகுதிக்கு பதிலாக, ஆப்பிள் ஐ-போன்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஷ் மெமரி சிப்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் எடை மற்றும் தடிமன் பாதியாக குறையும் என கணினி தயாரிப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மடிக்கணினி விற்பனையில் அதிக ஆர்வமும், தீவிரமும் காட்டி வரும் ஆப்பிள் நிறுவனம், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த 4ம் காலாண்டில் 1.34 மில்லியன் மடிக்கணினிகளை விற்பனை செய்துள்ளது.

இது கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட மடிக் கணினிகளின் எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகம் என ஆப்பிள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கைப்பேசிகளின் தொடுகைத்திரையும் தொடரும் வழக்குகளும்


2007ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பத்துடன் அறிமுகம் செய்து அது பெரு வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தொடுகைத் திரை கைப்பேசிகளை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டின.தொடுகைத் திரை(touchscreen) தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஐபாட் (Tablet)கணனியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இந்தத் தொடுகைத் திரைத் தொழில் நுட்பத்திற்கு உரியகாப்புரிமை தன்னுடையது என்று இப்போது தைவானின் Elan Microelectronics என்னும் நிறுவனம் வாதிடுகிறது. அது அமெரிக்க அரசிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளது.
அமெரிக்க பன்னாட்டு வர்த்தக ஆணையகம் (US International Trade Commission) இது தொடர்பாக விசாரணகளையும் ஆரம்பித்துள்ளது. Elan Microelectronics சார்பாக தீர்ப்பை வழங்கினால் ஆப்பிள் தனது ஐ-பாட், ஐ-போன், ஐ-பொட் ரச், ஆகிய கருவிகளின் விற்பனையை நிறுத்த வேண்டி வரலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்பிள் 2007இல் இருத்து 40 மில்லியன்கள் ஐ-போன்களை விற்பனை செய்துள்ளது.
இது இவ்வாறிருக்க ஆப்பிள் நிறுவனம் தனது கைப்பேசிகளின் தொழில் நுட்பங்களை தைவானைச் சேர்ந்த HTC நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
உலகின் மிகப் பெரிய கைப்பேசி விற்பனையாளர்களான நொக்கியா நிறுவனம் தனது தொழில் நுட்பங்களை ஆப்பிள் நிறுவனம் திருடிவிட்டதாக வழக்குத் தொடுத்துள்ளது.
Thanks To.....www.z9tech.com

Wednesday, April 28, 2010

நம்ப முடியாத புதிய தொழிநுட்பம்- கொரியா

                                                                                                                          Read More........

Tuesday, April 27, 2010

மின்சாரம் தேவை இல்லை. தானாகவே சார்ஜ் ஆகும் மொபைல்


மனிதர்களின் ஆறாவது விரலாகவே மாறிப்போய்விட்டது செல்போன்கள். ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல அலுவலகப் பணிக்கு ஒன்று, குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்கள் கொண்ட மொபைல் போன்கள் வந்துவிட்டன.படம் பிடிக்க, வீடியோ எடுக்க, பாட்டு கேட்க, மின்னஞ்சல் பார்க்க…. என பல்வேறு உபயோகத்துக்காக செல்போன்கள் தேவைப்படுவதால், அவற்றுக்கு சக்தி அளிக்கும் பேட்டரி முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இதனால் செல்போன் வாங்கு பவர்கள் அதன் பேட்டரி எத்தனை மணி நேரத்துக்கு உழைக்கும் என்பதை கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் எல்லா இடங்களிலும் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சார வசதி இருப்பதில்லை. எனவே சூரிய ஒளியில் சார்ஜ் ஆகும் பேட்டரி கொண்ட செல்போன்கள் சந்தைக்கு வந்தன. இந்த வரிசையில் தேவைக்கு ஏற்ப தானாகவே சார்ஜ் ஆகும் செல்போன் ஒன்றை நோக்கியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த வகை செல்போன்களை பயன்படுத்தும் போதும், அது அசையும் போதும் தானாகவே சார்ஜ் ஆகிவிடும். இதற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
அசையும் தன்மையுள்ள `படிக தொழில் நுட்பத்தின்’ அடிப்படையில் இந்த செல்போன் இயங்குகிறது. தற்போது ஆய்வு நிலையில் உள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் முழுமையடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thanks To........www.z9tech.com

Sunday, April 25, 2010

நவீன செல்போன்

எங்கும் செல்போன்! எதற்கும் செல்போன்!!

சகல வசதிகளும் இனி செல்போனிலேயே என்று சொல்லும் அளவுக்கு நவீன செல்போன்கள் தயாரிக்கப்பட்டு விட்டன.

காரில் போய் கொண்டே போன் பேச முடியுமா? நடந்து கொண்டே போன் பேச முடியுமா? இது செல்போன் வந்த பொழுது ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தி நாம் அதிசயித்த காலம்.

அதெல்லாம் இப்பொழுது கடந்து எங்கு பார்த்தாலும் செல்போன் ரீங்காரம், சினிமா பாடல்களின் இசையில் செல்போன் சிணுங்கல்கள்.

காலுக்கு செருப்பு இல்லாமல் கூட வெளியில் சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது ஆனால் செல்போன் இல்லாமல் யாரும் செல்வதே இல்லை.

"ஊருக்கு போனதும் மறக்காமல் லட்டர் போடுங்கள்'' இது விடைபெறும் போது வழக்கமாக பயன்படுத்தும் சொல்.

ஆனால் இப்பொதெல்லாம் "செல்லில் காண்டாக்ட் பண்ணுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்'' என்று இப்படி முன்னேறிவிட்டது.

இப்பொழுது அதையும் தாண்டி செல்போனிலேயே வியாபாரம், கிரிக்கெட் ஸ்கோர், பங்கு சந்தை நிலவரம், தேர்தல் நிலவரம், சந்தை நிலவரம், வங்கி கணக்கு இன்னும் என்னென்னவோ வசதிகள் எல்லாம் வந்துவிட்டன. ஜப்பானில் தற்பொழுது அதிநவீன வசதிகளுடன் செல்போன்கள் வந்துவிட்டன. வந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் எதற்காகவும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு நம்பரையும் பட்டனையும் தட்டினால் போதும், செய்திகள், விவரங்கள், உங்களுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் சிறிது நேரத்திலேயே உங்கள் காலடியில் தரும். நவீன வசதிகளுடன் வந்திருக்கும் செல்போன்களை பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஜப்பானில் ஆண்டிற்கு 4 கோடியே 50 லட்சம் பேர் செல்போன் வாங்குகிறார்கள். தற்பொழுது அனேக சிறப்பம்சங்களுடன் செல்போன்கள் வந்துவிட்டன. சமீபத்தில்கூட ஜப்பானின் சில நகரங்களில் அதிகபட்சமாக 7 சேனல்கள் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தங்களது செல்போன் உதவியுடன் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது செல்போனின் மூலம் online வசதியும் நமக்கு கிடைக்கிறது. அதாவது கிரெடிட் கார்டு, பணம் போன்றவை எடுத்துச் செல்லவேண்டிய அவசியம் நமக்கு தேவை இல்லை. அதற்காக பர்சையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு உதவ ஜப்பானில் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த செல்போன்கள் வந்துக்கொண்டிருக்கின்றன.

உதாரணமாக ஒரு கச்சேரியின் சுவரொட்டி அல்லது விளம்பரப் பலகையை பார்த்தால் போதும். அதில் உள்ள பார் கோடு எண்ணை செல்போனில் தட்டிவிட்டால் போதும். உடனே உங்களை அந்தக் கச்சேரி சம்பந்தமான இணைய தளத்திற்கு அழைத்துச் சென்று எல்லா விபரங்களையும் கொடுத்துவிடும். எவ்வளவு இருக்கைகள் எந்தெந்த வகுப்பில் இருக்கிறது. கச்சேரி எத்தனை மணிக்கு? டிக்கெட் விலை எவ்வளவு? யார் யார் பங்கு கொள்கிறார்கள் என்ற விபரங்களையும் கொடுத்து விடும். மேலும் நீங்கள் அதற்கு டிக்கெட்டும் புக் செய்து விடலாம். இதெல்லாம் உங்கள் கைக்கடக்கமான செல்போனிலிருந்தே.


நீங்கள் காரில் சென்று கொண்டு இருக்கும் போது ரோடு ஓரத்தில் இருக்கும் ஒரு விளம்பரம் உங்கள் கண்ணில் படுகிறது. உடனே காரில் இருந்த படியே `இந்தப் பொருளை நான் வாங்க வேண்டும்' என்று விரும்பலாம். அங்கிருந்தே அதன் பார் கோடு எண்ணை மொபைலில் கொடுத்து அதை வாங்க முடியும்'' என்கிறார் ஜப்பானின் டோக்கியோவிலுள்ள ஹிட்டோட்சுபாஷி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாப்ரே பங்க். சென்ற வாரம் செல்போனிலேயே குதிரைப் பந்தயத்திற்காக பணம் கட்டும் வசதியையும் ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

`நான் என்னுடைய அலுவலகத்தில் உள்ள நாற்காலியை விற்க எண்ணினால் உடனே அதை செல்போன் கேமராவிலேயே க்ளிக் செய்து என்னுடைய செல்போன் நம்பருடன் விலை விபரங்களை சேர்த்து?விளம்பரத்திற்கு கொடுத்தால் போதும் உடனே அதை விற்க முடியும்' என்கிறார் ஜப்பானின் நொமுரா ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் ஷூனிச்சி கிட்டா.

செல்போன் மூலம் பங்கு சந்தை மற்றும் ஏலங்களில் கலந்து கொள்ள முடியும். ஏலம் மற்றும் பங்கு விற்ற கமிஷன் செல்போனிலேயே வந்துவிடும். ஜப்பானின் ஒரு பிரபல செல்போன் கம்பெனியின் மூத்த துணைத் தலைவர் டேக்கேஷி நாட்சுனோ கூறுகையில், "இனி பணம், கிரெடிக் கார்டு, அடையாள அட்டை முதலானவைகளை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. எல்லாம் ஒரே ஒரு செல்போன் மட்டுமே போதும்'', என்கிறார்.

தற்பொழுது ஜப்பானில் அதிகமானோர் செல்போனையே தொலைக்காட்சி ரிமோட் கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 50 லட்சம் ஜப்பானியர்கள் தங்களது செல்போனிலேயே தொலைக்காட்சி சேனல்களூக்கான சந்தாக்களை பெற்று விரும்பிய சேனல்களை ரசிக்கிறார்கள். மேலும் இந்த செல்போனையே தொலைக்காட்சி, டி.வி.டி பிளேயர்களை இயக்கும் `ரிமோட் கண்ட்ரோல்' ஆகவும் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கும்போது போரடித்தால் உடனே உங்கள் செல்போனின் மூலம் எந்தெந்தச் சேனலில் எந்தெந்த நிகழ்ச்சிகள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்' என்கிறார் டேக்கேஷி நாட்சுனோ.
       மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளே செல்வதற்கு அடையாள அட்டையோ அல்லது சாவியோ பயன்படுத்த தேவையில்லை. செல்போன் மூலமாகவே உள்ளே நுழைவதற்கு முடியும். மேலும் நீங்கள் வெளியில் இருக்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் செல்போனில் தகவல் வந்துவிடும். நீங்கள் உடனே உங்கள் செல்போன் மூலமாகவே வீட்டின் கதவைத் திறந்துவிட முடியும். குழந்தைகள் பாதுகாப்பாக வீட்டை அடைந்த தகவலும் செல்போனில் வந்துவிடும்.


மின்சார கட்டணம், டெலிபோன் கட்டணம், ரெயில் பாஸ், பஸ் பாஸ், வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து நேரத்தை விரயமாக்கத்? தேவையில்லை.? செல்போனை எடுக்க வேண்டியது. அதற்குண்டான விபர அட்டவணைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட இணைய தளத்திற்கோ சென்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம். ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு பல மைல் தூரத்தை பல மணி நேரம் செலவழித்து சென்று வரிசையில் நின்று கடைசியில் டிக்கெட் கொடுப்பவரை அணுகும் சமயத்தில் அப்பொழுதுதான் நீங்கள் செல்லவேண்டிய ரெயிலில் எல்லா டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு ஏமாற வேண்டிய அவசியமில்லை. ரெயில்வே இணையதளத்திற்கு சென்று நீங்கள் செல்ல வேண்டிய ரெயிலைப் பிடித்து எந்த தேதியில் எத்தனை மணிக்கு எத்தனை இருக்கைகள் இருக்கின்றன என்றெல்லாம் பார்த்து வீட்டில் காபி குடித்துக்கொண்டே முன்பதிவு செய்துவிடலாம்.

திருக்குறளை புகழ்ந்த அவ்வையார் `அணுவைப் பிளந்து கடல் நீரை புகுத்தியிருக்கிறார்'' என்று சொன்னார். அவ்வளவு விஷயங்களை இரண்டே வரிகளில் வள்ளுவர் சொல்லியிருப்பதை இப்படி சொல்லியிருக்கிறார்.

இது செல்போனுக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். அவ்வளவு விபரங்கள் மற்றும் வசதிகள் செல்போனில் வந்துவிட்டன.

உலகம் உங்கள் கையில். வணிக உலகம், பொழுதுபோக்கு உலகம், அரசியல் உலகம் இப்படி எல்லாவற்றையுமே உங்கள் விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டது விஞ்ஞான உலகம்.

இனி `கையிலே காசு வாயிலே தோசை' என்பது கிடையாது. `கையிலே செல், உங்கள் வீட்டிலே உலகம்' தான்.
நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்(சித்தார்கோட்டை)

Saturday, April 24, 2010

Yahoo Messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

                        சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Onling இல் இருந்தாலும்  நமக்கு தெரியாதபடி appear offline (அதாவது Invisible) இல் இருப்பார்கள். அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களைக் கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.
முதலில் உங்கள் Yahoo Messenger அய் Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double Click பண்ணவும். அதில் உள்ள IM Vironment தெரிவு செய்து அதில் See all IMVironments ,இல் Yhaoo! Tools அல்லது Interactive Fun அய் click பண்ணி Doodle அய் தெரிவு செய்யவும். அப்போது படத்தில் காட்டியவாறு “waiting for your friend to load Doodle” என்ற திரை தோன்றும்.
sunday malar template.pmd
அதில் ஏதாவது type செய்து send பண்ணும் போது அந்த நபர் அந்த appear offline இல் இருந்தால் “waiting for your friend to load Doodle” என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும். நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்தத் திரை மாறாது அப்படியே இருக்கும்.
                  இதில் இருந்து அவர் Online இல் இருந்துகொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
           நன்றி,தமிழ்நிருபர்.

Sunday, April 18, 2010

வாழைப்பழம்

அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் யாவுமே மனிதர்களுக்கு மிகப் பயனுள்ளது. அதில் நாவிற்கு இனிமையும், உடலுக்கு வலிமையும், முகத்திற்கு அழகையும் தரக்கூடிய புரதச் சத்துக்கள் நிறைந்த கனிவர்க்கங்கள் மனித இனத்திற்கு இறைவனால் அருளப்பட்ட வரப்பிரசாதமே.
நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம்  மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.
நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் இன்ஷா அல்லாஹ் உங்களை விட்டு பறந்துவிடும்.
உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.
புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.
அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.
இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.
கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.
வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.
எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.
தமிழாக்கம்: அபுல் அமான்
Thanks To Islamkalvi.com

Saturday, April 17, 2010

செல்போனின் தரத்தை அறிவது எப்படி? -அபூ ரம்லா

காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம்.
இந்த செய்தியின் மூலம் நாம் வாங்கியிருக்கின்ற அல்லது வாங்கப்போகின்ற செல்போன்களின் தரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். அதாவது நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களின் தரம் உயர்ந்த அல்லது குறைவான அல்லது போலியான பொருட்கள் மார்க்கெட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் செல்போனின் தரத்தை எதனை அடிப்படையாக கொண்டு நிர்ணயிப்பது பற்றி அறிவோம்.
உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில் தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும் மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று)
7 மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று)
7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்)
7 மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;. தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)
மேற்சொன்ன செய்திகள் அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தரமான பொருள்களை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும் என்பதற்காகவே இந்த தகவல்களை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks To Islamkalvi.com

Friday, April 16, 2010

புற்றுநோய்க்கு நவீன மருத்துவம்

'வரும் முன் காப்போம்' என்றாலே அது எந்தவகை இடரும் வரும் முன் காப்போம் என்பதைத் தான் குறிக்கும். பொதுவாக இந்த வாக்கியத்தைக் கேட்டால் நோய் வரும்முன் காப்போம் என்பது பற்றித்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஏனென்றால் நோய் வரும்முன் சில அறிகுறிகள் தென்படும். அதாவது 'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்பதைப் போல. நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் அப்போதே தேவையான வைத்தியம் செய்து களை எடுத்துவிட்டால் நோயிலிருந்து தப்பிப்பது மட்டுமல்ல, இறப்பையும் தள்ளிப்போடலாம்.

எந்த நோயை எடுத்துக்கொண்டாலும் சில அறிகுறிகள் தென்படும். அல்லது மருத்துவர்கள் சோதனையின் மூலம் கண்டறிந்து விடுவார்கள். உதாரணமாக மாரடைப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு இவை ஒவ்வொன்றிற்கும் சில ஆரம்ப அறிகுறிகள் தென்படும். இதை வைத்தே நமக்கு வந்துள்ள நோய் என்னது என்று அறிந்து கொள்ள முடியும். உடனே உரிய மருத்துவ சிசிச்சைகள் மூலம் தற்காத்து கொள்ளலாம். ஆனால் இதில் புற்று நோய் மட்டும் சற்று வித்தியாசமானது. இதனால்தான் புற்றுநோய் புதிர்நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் எப்படி தாக்கியது அல்லது நோய் தொற்றிக் கொள்ள காரணங்கள் சில சமயம் ஒரு புரியாத புதிர்தான்.

இன்றைய மருத்துவ உலகில் புதுப்புது ரகங்களில் புற்று நோயின் தாக்கம் உள்ளது. உதாரணமாக மார்பகப் புற்று நோய், மூளைக் கட்டிகள் என்று பலவகைகளில் மனிதனை ஒரு கை பார்த்துவிடுகிறது. சில சமயம் உயிரை பறித்துக் கொள்ளும் அளவுக்கு இதன் தாக்கம் அதிகம் இருக்கும். இது மாதிரியான நோய்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு கடும் சவாலாக உள்ளது. இதனால் புற்று நோய் பற்றிய பயம் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் உள்ளது. பெரும்பாலும் புற்றுநோய் அதன் அறிகுறியே தென்படாமல் கொரில்லா தாக்குதல் போல் முற்றிய நிலையில் தாக்கிவிடும். இதன்பிறகு அதற்கு சிகிச்சை அளிப்பது பயனற்று போய் மருத்துவர்கள் கை விரித்துவிடுவார்கள்.


புற்றுநோய் எப்படி? ஏன்? யாருக்கு வரும்? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உலகில் ஏராளமானோருக்கு எளிதில் தென்படாத நிலையில் புற்றுநோய் தாக்கியிருக்கின்றது. இதில் வசதிபடைத்தவர், ஏழை என்ற வித்தியாசம் இல்லை. இப்படி தாக்கிய புற்றுநோய்கள் திடீரென்று முற்றிய நிலையில் மாறி உயிரை காவு வாங்கியிருக்கின்றன. எவ்வளவு காசு இருந்து என்ன பயன்? புற்றுநோய் இருந்ததை கண்டுபிடிக்க முடியவில்லையே! என்று சொல்வோர்களும் உள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இடைவிடாது ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கு கைமேல் பலனும் கிடைத்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள Massachusset Institute of Technology-யில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு நூதன முறையின் மூலம் புற்று நோயை அறியும் முறையை கண்டறிந்துள்ளனர். இப் பல்கலைகழகத்தின் பேராசிரியர் சங்கீதா பாட்டியா என்பவர். இவர் தனது மாணவர்களுடன் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதாவது வேதிப்பொருட்கள் கலந்த நுண்துகள்களை உடலில் செலுத்துவதன் மூலம் புற்றுநோயை அறிய முடியும் என்பதை கண்டறிந்தார். மேலும் அதே முறையில் சிகிச்சையும் அளிக்க முடியும் என்றும் நிரூபித்தார்.


இதற்காக விலங்குகளுக்கு ஊசி மூலம் நுண்துகள்களை செலுத்தப்படும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நானோ என்றால் ஒரு மீட்டரில் பலகோடி மடங்கு சிறியது என்பது பற்றி முந்தையக் கட்டுரைகளில் விவரித்திருக்கின்றோம். நொதிப்பொருட்களுடன் கூடிய இந்த நுண்துகள்கள் ரத்த நாளங்களில் சென்று ஆரம்ப கட்டத்தில் இருக்கும் புற்றுநோய் கட்டிகளின் நுண் இடுக்குகளில் சென்று ஆராய ஆரம்பிக்கும். இவ்வாறு புற்றுநோய் கட்டிகளின் இடுக்குகளில் சென்ற வேதி நுண்துகள்கள் ஒன்று சேர்ந்து காந்த சக்திகளின் மூலம் Magnetic Resonance Imagine Machine (MRI) எனப்படும் இயந்திரத்திற்கு புற்றுநோயை பற்றிய துல்லியமான படத்தை அனுப்பும். இதன் மூலம் புற்றுநோயின் தன்மை, எப்பொழுது உருவானது என்பதையெல்லாம் அறிய முடியும்.

நுண்துகள்களாக சென்ற நொதிப்பொருட்கள் (வேதிப்பொருட்கள்) ஒன்று சேர்வதால் அதிகமான காந்த சக்தியை பெறுகிறது. இதனால் புற்றுநோயை ஆராய்வது சுலபமாவதுடன் துல்லியமான விவரமும் கிடைக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் சங்கீதா பாட்டியா கூறுகையில், 'ஊசி மூலம் நாங்கள் இந்த நுண்துகள்களை உடலில் செலுத்துகிறோம். இவ்வாறு உடலில் சென்ற நுண்துகள்கள் ஒன்றுசேர்ந்து புற்றுநோய் கட்டிகளில் உள் நுழைந்து அல்லது இடுக்குகளில் ஊடுருவி ஆராய்கிறது. இவ்வாறு ஒன்று திரண்ட நுண்துகள்கள் கட்டியிள் உள்ளே ஊடுருவுவதால் திரையில் துல்லியமான படங்களுடன் விவரங்கள் தெரிகிறது'', என்கிறார். சங்கீதா பாட்டியா Health Science & Technology யில் மின்னியல் மற்றும் கணிப்பொறித் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் MIT&Harward Center of Cancer Nanotechnology Excellence  இவர் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


முதன்முறையாக இந்த நுண்துகள் சோதனை மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பொழுது ஏராளமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கி இருக்கிறது. இதுபற்றி ஆராய்ச்சியாளர் பாட்டியா கூறுகையில், 'முதலில் மார்பக புற்று நோய் பாதித்த பெண்களுக்கு பயன்படுத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவுகள் நன்றாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் படிப்படியாக இச்சோதனை எல்லா வகை புற்றுநோய்களையும் கண்டறிய பயன்படுத்தப்படும். மேலும் இந்த நானோ நுண்துகள்களின் மூலமே வேதியியல் சிகிச்சை (Chemotherapy treatments)  மற்றும் கதிர்(Radiation) சிசிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை குணப்படுத்த முடியும்'' என்றார்.

இந்த ஆராய்ச்சியில் பேராசிரியர் சங்கீத பாட்டியாவுடன் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழக மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிநவீன ஆராய்ச்சிக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகத்தின் (National Cancer Institute) முழு ஆதரவும் இருக்கிறது. மேலும், இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்த புதுமையான மருத்துவ முறைக்கு அதிகாரப் பூர்வ உரிமமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி, சகோதரர்-எம்ஜேஎம் இக்பால்

Wednesday, April 14, 2010

காதுகேளாதவர்களுக்கு நவீன சிகிச்சை 
மருத்துவத்துறை ஐம்புலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இனி ஊனம் என்ற சொல்லையே மறந்துவிடும் அளவிற்கு அரிய சாதனைகளை படைத்து வருகின்றது. இதய மாற்று அறுவை சிகிச்சை, கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை சுவாசப்பை, செயற்கை கண் இவ்வாறு மனித உடலில் இன்றியமையாத பாகங்கள் செயல்படாத நிலையில் இருந்தால் சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக மாற்றி செயல்பட வைத்து வருகின்றனர். கண் பார்வைக்கு மூக்குக் கண்ணாடி அணிந்த காலம் போய் காண்டக்ட் லென்ஸ் பொருத்தும் நிலை வந்துள்ளது. இதை பொருத்திக் கொள்வதன் மூலம் ஹகண்பார்வை கோளாறு உள்ளவர்' என்பதை மறைத்துவிடுகிறது. இதே போல் செயற்கை மூட்டு, செயற்கை கால், கை என்று ஊனமுற்றவர்களையும் நடந்தோடச் செய்யும் நவீன செயற்கை உறுப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

காதுகேளாதவர்கள் வாக்மேன் கேட்பது போல காதில் இயர்போன் போன்ற கருவியை செருகிக் கொண்டு சட்டையில் சிறிய ட்ரான்சிஸ்டர் போல் உள்ளக் கருவியை மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படி காதில் மாட்டிக் கொண்டு வெளியில் சென்றால் கேட்கும் திறனில் பாதிப்பு உள்ளது என்று மற்றவர்கள் அறிந்து கொள்ளும் நிலை இருந்தது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட இதெல்லாம் சுருங்கி காதின் பின்புறம் சிறிய கருவி செருகியிருப்பார்கள். இது ஓரளவு அவர்கள் ஊனத்தை மறைத்ததோடு கேட்கும் திறனையும் பெற முடிந்தது. இருந்தாலும் எத்தனையோ பேர் இதற்காக வெட்கப்பட்டவர்களும் உண்டு. காது மெஷின் மாட்டியிருப்பதால் நம்மை செவிடர் என்று மற்றவர்கள் அறியக்கூடும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது அவர்களிடம். ஆனால் அவர்கள் காதில் தேன் வந்து பாய்வது போல ஒரு விஞ்ஞானப் புரட்சி நடந்திருக்கின்றது. ஆம்! அறிவியலின் அபார வளர்ச்சியில் பயோனிக் காது எனப்படும் செயற்கை காது இப்பொழுது பொருத்தப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக காணலாம்.

மைக்ரோபோன் மூலம் பெறப்படும் ஒலி மின் சிக்னல் மூலம் நரம்பு தூண்டப்பட்டு செய்தியை அனுப்புகின்றது. காது கேளாதவர் இதற்கான கருவியை எப்பொழுதும் அணிந்து கொள்ளவேண்டும். இது பழைய முறை. ஆனால் பயோனிக் இயர் என்ப்படும் புதிய முறையில் காதின் பின்புறம் தோலுக்கடியில் நிரந்தரமாக பொருத்தப்படுகிறது ஒரு கருவி. இதன்மூலம் காதுகேளாதவர் மற்றவர்களைப் போல சாதாரணமாக கேட்கலாம்.

பயோனிக் இயர் எனப்படும் இதை காக்ளியர் மாற்று அறுவை சிகிச்சை என்று அழைக்கிறார்கள். காக்ளியர் எனப்படும் காதில் உள்ள இந்த உறுப்பின் வேலை, செவியால் பெறப்படும் ஒலியை இந்த சவ்வு பெற்று நரம்புகள் மூலம் தூண்டப்பட்டு கேட்கும் திறனை அறியச் செய்கின்றது. இம்முறையில் பயோனிக் இயர் எனப்படும் இந்த செயற்கை கருவியை காதின் பின்பகுதியின் தோலுக்கடியில் பொருத்தி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் செவிடான ஒருவர் நன்றாக கேட்கும் ஆற்றலை பெறமுடிகிறது. இதனால் பெறப்படும் ஒலி மின் சிக்னல்களாகப் பெறப்பட்டு செவி நரம்புகளுக்கு செய்தியாக அனுப்பப்படுகிறது.

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக 35 வயதுள்ள ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இம்மருத்துவ மனையில் தொண்டை,மூக்கு, காது பிரிவின் தலைவர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரகுமான் கூறுகையில், "காது கருவி வைத்தும், கேட்கும் திறனை இழந்த இப்பெண்ணுக்கு இந்த பயோனிக் இயர் மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம். வெற்றிகரமாகவும் முடிந்தது. இதன்மூலம் அந்தப் பெண் மற்றவர்களைப் போலவே காது கருவி இல்லாமலேயே கேட்கும் திறனைப் பெற்றார். இனி நாங்கள் சிறிய வயதினருக்கும் மற்றும் 6 மாதக் குழந்தைகளுக்கும் கூட இந்த சிகிச்சையை மேற்கொள்ள இருக்கின்றோம". என்றார்.

இதற்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தற்போது இந்த நவீன சிகிச்சைக்கு அதிக செலவு ஆகிறது என்றாலும் வருங்காலத்தில் வெகுவாக குறையவும் வாய்ப்பு உள்ளது.

நன்றி, சகோதரர் -எம்.ஜே.எம்.இக்பால் 

Tuesday, April 13, 2010

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

Thanks to...Dr.M.Sathick from Darulsafa

சிரிங்க....

Monday, April 12, 2010

சர்க்கரையை (நீரிழிவு) கட்டுப்படுத்த......
மருத்துவர். சாதிக்  RNMP., RHP., ND., FRIM., DAT(Acu), MD(Acu)


சர்க்கரை நோய் வரக் காரணங்கள்:
  1. பரம்பரை ஒரு காரணமாகலாம்
  2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத வாழ்க்கைநிலை
  3. நகர்புற வாழ்வியல் சூழல்
  4. முறையற்ற உணவு பழக்கம்
  5. மது, புகை, போதை பொருட்களால்
  6. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப் பொருட்கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் எடுப்பதால்
  7. இன்னும் பிற
சர்க்கரை நோயின் அறிகுறிகள்:
  1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  2. சிறுநீர் கழித்ததும் கை, கால், மூட்டுவலி
  3. அதிக வியர்வை (துர்நாற்றாத்துடன்)
  4. சிறுநீரில் ஈ,எறும்பு மொய்த்தல்
  5. அடிக்கடி தாகம், அதிக பசி
  6. உடலுறவில் அதிக நாட்டம், இந்திரியம் நீர்த்துபோதல் - அதனால் ஆண்மைக்குறைவு
  7. தூக்கமின்மை
  8. காயம்பட்டால் ஆறாதிருத்தல்
சர்க்கரை அதிகரிக்க காரணங்கள்:
  1. அதிக அளவில் இனிப்பு பொருட்களை உண்பது
  2. நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி அதிகளவில் உண்பது
  3. வேகாத உணவுகள் மற்றும் வடை, போண்டா, பஜ்ஜீ, பூரி போன்ற மந்த பொருட்கள் உண்பதால்
  4. அடிக்கடி உடலுறவு கொள்வது அல்லது சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்வதாலும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
  1. வாழைப்பூ
  2. வாழைப்பிஞ்சு
  3. வாழைத்தண்டு
  4. சாம்பல் பூசணி
  5. முட்டைக்கோஸ்
  6. காலிஃபிளவர்
  7. கத்தரிப்பிஞ்சு
  8. வெண்டைக்காய்
  9. முருங்கைக்காய்
  10. புடலங்காய்
  11. பாகற்காய்
  12. சுண்டைக்காய்
  13. கோவைக்காய்
  14. பீர்க்கம்பிஞ்சு
  15. அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
  1. முருங்கை கீரை
  2. அகத்திக் கீரை
  3. பொன்னாங்கண்ணிக் கீரை
  4. சிறுகீரை
  5. அரைக்கீரை
  6. வல்லாரை கீரை
  7. தூதுவளை கீரை
  8. முசுமுசுக்கைகீரை
  9. துத்தி கீரை
  10. மணத்தக்காளி கீரை
  11. வெந்தயக் கீரை
  12. கொத்தமல்லி கீரை
  13. கறிவேப்பிலை
  14. சிறு குறிஞ்சான் கீரை
  15. புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
  1. விளாம்பழம் -50கிராம்
  2. அத்திப்பழம்
  3. பேரீத்தம்பழம்-3
  4. நெல்லிக்காய்
  5. நாவல்பழம்
  6. மலைவாழை
  7. அன்னாசி-40கிராம்
  8. மாதுளை-90கிராம்
  9. எலுமிச்சை 1/2
  10. ஆப்பிள் 75கிராம்
  11. பப்பாளி-75கிராம்
  12. கொய்யா-75கிராம்
  13. திராட்சை-100கிராம்
  14. இலந்தைபழம்-50கிராம்
  15. சீத்தாப்பழம்-50கிராம்
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
  1. எலுமிச்சை சாறு -100மி.லி
  2. இளநீர் -100மி.லி
  3. வாழைத்தண்டு சாறு -200மி.லி
  4. அருகம்புல் சாறு -100மி.லி
  5. நெல்லிக்காய் சாறு -100மி.லி
  6. கொத்தமல்லி சாறு -100மி.லி
  7. கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
தவிர்க்க வேண்டியவைகள்:
  1. சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட், ஐஸ்கிரீம்)
  2. உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
  3. மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
  4. அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
  5. வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.