* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.
* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும்.
* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பிவிடும்.
* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை; மற்றவர்களுக்கும் நன்மை இல்லை
* பிதுர் காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வகாரியங்களுக்கு பக்தி வேண்டும்.
* கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
* நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்.அது தான் தர்மம். -பெர்சீன் பழ்மொழி.
* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
* உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
* ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
* கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
* வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.
* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.




வளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார் இருவரது மரணங்களைத் தொடர்ந்து, பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்று ஹை-டெக் தீர்வைக் கையில் எடுத்துள்ளது.
வளைகுடா நாட்டின் வெப்பம் உலகறிந்தது. அதிகபட்சமாக 55 டிகிரி செண்ட்டிகிரேட்வரை திறந்த வெளியில் உள்ள வெப்பம், கதவுகளையும் கண்ணாடி ஜன்னல்களையும் இறுக மூடிய ஒரு வாகனத்திற்குள் 70 டிகிரி செண்ட்டிகிரேட்வரை உயரும். இத்தகைய கடுமையான அவஸ்தையில் துடித்து இறந்துபோன அந்த ரோஜா மலர்களின் மறுமை வாழ்வு சிறக்க, அடிமனதில் இருந்து உருக்கமாக பிரார்த்திக்கிறோம்.
இச்சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு அகலும் முன்னரே அடுத்த 25 தினங்களில் சவூதியிலுள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் அச்சாக இதேபோன்றதொரு நிகழ்வில் மற்றொரு பிஞ்சு துடிதுடிக்க பலியானது.

