Monday, April 2, 2012


ஓய்வு நேரம்!

காடுகளில் மரம் வெட்டுவதே அவர்களுடைய வேலை.
அதில் ஒருவன் நாள் ஒன்றுக்குப் பத்து மரங்கள் வெட்டுவான். இன்னொருவனோ இருபது மரங்களை வெட்டுவான்.
பத்து மரங்களை வெட்டுபவன் கேட்டான்: ""ஓய்வே எடுக்காமல் மரம் வெட்டுகிறேன். என்னால் 10 மரங்களுக்கு மேல் வெட்ட முடியவில்லை. நீயோ ஒருமணி நேரம் மரம் வெட்டினால் அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறாய். ஆனால் என்னை விட இரண்டு மடங்கு மரங்களை வெட்டி விடுகிறாய். இது எப்படி?''
அதற்கு இருபது மரங்களை வெட்டுபவன் சொன்னான்:
நான் ஓய்வெடுக்கும் அந்த அரைமணி நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. கோடரியைக் கூர்மையானதாக்கிக் கொள்கிறேன்.''