Wednesday, August 4, 2010

"ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ்"

ஆஸ்பெஸ்டாஸ் ஆபத்தானது
ஆஸ்பெஸ்டாஸ் ஆபத்தானது என்று பலர் அறியாதுள்ளனர்
ஆஸ்பெஸ்டாஸை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அடுத்த இருபது ஆண்டுகளில் அதனால் ஏற்படும் இறப்புகள் பெரிய அளவில் அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிபிசியும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்களின் கூட்டமைப்பும் நடத்திய ஒரு புலனாய்வில் ஆஸ்பெஸ்டாஸின் விற்பனையை வளர்க்கும் நோக்கில் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
தொழில் ரீதியாக உடல் நலத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த சட்டங்கள் எந்த வளர்ந்து வரும் நாடுகளில் பலவீனமாக இருக்கின்றதோ அந்த நாடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸின் ஏற்றுமதி அதிகமாக உள்ளது எனவும் அந்த புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வெள்ளை ஆஸ்பெஸ்டாஸை, சரியாக கையாண்டால் அது ஆபத்தற்றது என்று தொழிற்துறையினர் கூறுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் ஆஸ்பெஸ்டாஸ் புற்று நோயை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புற்று நோய் அபாயம்
ஆஸ்பெஸ்டாஸ் துறையில் ஒரு பெண்மணி
அபாயங்களை அறியாமல் ஆஸ்பெஸ்டாஸை சுமக்கிறார்
உலகின் பல வளர்ந்த நாடுகளில் மலிவான மேற்கூரைகள் அமைக்க வெள்ளை ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் நீர் விநியோகத்துகாக குழாய்களை அமைக்கவும் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உலகிலேயே மிக அதிக அளவில் வெள்ளை ஆஸ்பெஸ்டாஸை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.
உயிராபத்தை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் உலகளவில் 52 நாடுகளில் ஆஸ்பெஸ்டாஸின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது அல்லது அதன் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு மாறாக வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் இதன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
ஆஸ்பெஸ்டாஸை உடைத்து கூறைகள் அல்லது குழாய்களை தயாரிக்கும் போது அதிலிருந்து வெளியாகும் கல்நார் துகள்கல் காற்றில் கலந்து மக்கள் சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்று அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
மரணத்தை ஏற்படுத்தக் கூடிய புற்று நோயைக் கூட இந்த கல்நார் துகள்கள் ஏற்படுத்தும்.
இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்துறை 850 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் ஆஸ்பெஸ்டாஸ் துறையில் அதிகப்படியானவர்கள் ஈடுபட்டிருப்பது இந்தியாவில்தான்.
நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்தியாவில் 35 லட்சம் மக்கள் ஆஸ்பெஸ்டாஸ் தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பாக்கு மென்றால் புற்றுநோய்


பாக்கு தோப்பு
பாக்கு தோப்பு
ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.
தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது. தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.
பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.
அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.
ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.

மொழி எப்படிப் பிறந்திருக்கும்?

மொழியின் தோற்றம் என்று சொன்னதும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியோ, சீன மொழியின் பண்டைய வரலாற்றைப்பற்றியோ அல்லது கிரேக்கம், அரபு மொழிகளின் உருவாக்கத்தைப் பற்றியோ பேசவுள்ளதாகவே நாம் நினைப்போம். ஏதோ ஒரு மொழியை குறித்த தகவல்களை சொல்லப்போகிறார்கள் என்றே நமது எண்ணங்கள் நமக்கு குறிப்புணர்த்தும்.
ஆனால் இங்கு நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றிய மூலத்தை அறியப்போவதில்லை. மனிதர்களின் மொழி, மனிதன் தனது இனத்தோடு தொடர்புகொள்ள பயன்படுத்திய மொழியின் உருவாக்கம் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்கிறோம்.
அறிவியலாளர்களின் கூற்றின் படியும், பகுப்பின் படியும் மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் ஒரு இனமே. ஆறாவது அறிவு என்ற பகுத்தறிவு கொண்டவன் என்பதே ஒரு சிறப்புத் தகுதியாகக் கொண்டு மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டவன் என்று நாம் சொல்லிக்கொள்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மேம்பட்டவர்கள், பண்பட்டவர்கள் என்று நமக்கு நாமே அடைமொழிகளை தந்திருக்கிறோம். சமூக அவலங்களை பார்க்கும்போது, மற்ற விலங்குகளிலிருந்து எந்த வகையில் மனிதன் வேறுபட்டான் என்ற கேள்வி பலமுறை எழத்தான் செய்கிறது.
விலங்குகளில் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை, ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் கொண்டவை என்று சொல்லப்படுபவை சிம்பன்சி, போனோபோ ஆகிய குரங்கினங்களாகும். சிம்பன்சியை நாம் அறிந்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால் போனோபோவை அவ்வளவாக நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களை ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக மனிதர்களிடையே பேச்சு மொழியே முதலில் தோன்றியிருக்கும் என்று நாம் நினைக்கலாம். வாய் வழி ஒலி எழுப்பி மற்றவரோடு தொடர்பு கொண்ட மனித இனம் காலப் போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கும் என்பது தெளிவு. ஆனால் முதலில் மனித இனம் சைகைகளையும், உடல் அசைவுகளின் மூலமான செய்திகளையும்தான் பரிமாறிக்கொண்டிருக்கும் என்பதற்கு ஆதாரமாக, அண்மையில் சிம்பன்சி மற்றும் போனோபோ குரங்குகளைக் கொண்டு நடத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்ட தகவல்கள் அமைந்துள்ளன.
ஆண் சிம்பன்சி மற்றும் போனோபோக்கள் தங்களுக்கு பசிக்கிறது உணவு கொஞ்சம் தா என்று சக இனத்தவரிடம் கேட்கும்போதும் சரி, பெண் குரங்குகளை காதல் இச்சைக்கு இணங்க அழைக்கும் போதும் சரி அல்லது மற்ற ஆண் குரங்கினத்தோடு சண்டையிட்டு ஓய்ந்து சரி நாம் அமைதியாகப் பிரிந்து சொல்வோம், நண்பர்களாவோம் என்று சொல்ல விரும்பினாலும் சரி, திறந்த கைகளை நீட்டுகின்றனவாம்.
அதாவது ஒரே ஒரு அசைவுதான். ஆனால் இடத்திற்கு ஏற்றாற்போல் அது வெவ்வேறு பொருள்கொள்ளப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா, முக பாவங்களைக் காட்டிலும், குரல் எழுப்பி தொடர்புகொள்வதைக் காட்டிலும் இவை சைகைகளை, அங்க அசைவுகளின் மூலமான மொழியையே அதிகமாக பயன்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் இயல்பாகவே அதிகம் அங்க அசைவுகளும், சைகைகளும் மூலம் தொடர்புகொள்ளக் கூடியவர்கள். அனேகமாக மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியிருக்கும். பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்தபின் பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் மனிதர்கள் குரங்குகள் உள்ளிட்ட முலையூட்டிகளின் உயர்நிலை இனங்கள் தொடர்பான முதனியிய லாளராக உள்ள பிரான்ஸ் தேவால் இந்த ஆய்வுக்காக சான்டியாகோவி லுள்ள வனவிலங்கு பூங்காவின் 13 போனோபோக்களையும், யெர்கெஸிலுள்ள வனவிலங்கு பூங்காவின் 34 சிம்பன்சிகளையும் கூர்ந்து கவனித்து ஒளிப்பதிவு செய்தார் தேவால்.
அவரது உதவியாளர் ஏமி பொல்லாக்கும் அவருமாக மொத்தம் 31 கை மற்றும் கால் சைகைகளையும், 18 முக முகபாவ உணர்ச்சி வெளிப்பாடுகளையும். குரலெழுப்பலையும் பதிவு அவதானித்தனர். இதில் இரண்டு வகை குரங்கினங்களுமே முகபாவங்கள் குரலெழுப்பல்கள் இவற்றை ஒரே வகையானசூழலில், நம்மால் கணிக்கக்கூடியதாக பயன்படுத்தியதையும், குறிப்பாக வலி மற்றும் பயம் ஏற்பட்டால் சத்தமாக கத்தின என்றும் இந்த ஆய்வாளர்கள் கண்டனர்.
ஆனால் சைகைகளை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட அங்க அசைவு வேறுபட்ட இடங்களில், சூழலில் வெவ்வேறு பொருள் கொள்ளப்பட்டதை அவர்கள் கண்டனர். உயர் நிலை முலையூட்டி இனங்கள் எல்லமே முக பாவங்கள், குரலெழுப்பல்கள் மூலம் தொடர்புகொள்கின்றன. தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக்கொள்கின்றன.
ஆனால் மனிதர்கள், சிம்பன்சிகள், போனோபோக்கள், உராங்குட்டான்கள், கெரில்லாக்கள் ஆகியவை மட்டுமே இவ்வாறு சைகைகளை வெவ்வேறு பொருள் கொண்டவையாக பயன்பாட்டில் வைத்துள்ளன. இந்த குரங்கினங்களின் உயர் நிலை இனங்கள் கிட்டத்தட்ட 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்துள்ளன என்பதால், இத்தகைய சைகைகளும் நீண்டகாலமாக இருந்துள்ளன என புரிகிறது.
மேலும் பொதுவாக இந்த குரங்கினங்கள் சைகை செய்ய விரும்பும்போது வலது சையையே பயன்படுத்துகின்றனவாம் வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மூளையில் மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்கத்தில்தான் என்பது கூடுதல் தகவல். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லப்படும்போது, வருத்தப்படத் தேவையில்லை.
நன்றி,சூத்திரம் 

குளிர்பானம் அருந்தினால் - குறை பிரசவம் கர்ப்பிணிகளுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை !


ர்ப்பிணி பெண்கள், ‘சாப்ட் டிரிங்ஸ்’(Soft Drinks) என அழைக்கப்படும் குளிர்பானங்களை அடிக்கடி அருந்தினால், குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ள தென, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படும். இதற்காக ‘சாப்ட் டிரிங்ஸ்’ எனப்படும் குளிர் பானங்களை பருகும் பழக்கம் கர்ப்பிணிகளிடையே அதிகரித்து வருகிறது. இது கர்ப்பிணிகளுக்கு பல வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, மருத்துவ நிபுண ர்கள் கூறுகின்றனர்.
டில்லி போர்ட்டீஸ் மருத்துவனை நிபுணர் அனூப் மிஸ்ரா கூறிய தாவது: கர்ப்பிணி பெண்கள் முன் பெல்லாம் எலுமிச்சை பழச்சாறு அல்லது தயிரில் சர்க்கரை (லஸ்ஸி) சேர்த்து அருந்துவர். தற்போது பின் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் குளிர்பானங்களை அருந்துகின் றனர். இதனால், அவர்களது உடல் நிலை பாதிக்கப்படும். குளிர்பானங்களால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், அதில் சேர்க்கப்படும் சர்க்கரை, பதப்படுத் துவதற்கு சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்களால் குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அனூப் மிஸ்ரா கூறினார்.
கோகிலபென் அம்பானி மருத்து வமனை நிபுணர் சுசித்ரா பண்டிட் கூறுகையில், ‘சாப்ட் டிரிங்ஸ்களில் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லை. அதில், கலக்கப்படும் செயற்கை நிற மூட்டிகள் கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் சுடவைத்து ஆற வைத்த வெந்நீர் அல்லது பழச் சாறு அருந்தலாம்‘ என்றார். 
து தொடர்பாக அமெரிக்க பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில்: இனிப்பு சுவை மிக்க குளிர்பா னங்களில் கலக்கப்படும் பொருட் களால், பல பின் விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் குளிர்பானம் அருந்துவதை தவிர்த்து, இயற்கை யான பானங்களை அருந்துவது நல்லது என கூறப்படுகிறது.  
தற்காக டச்சு நாட்டைச் சேர்ந்த, 60 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. கர்ப்ப காலத்திற்கு நடுவில் கர்ப்பிணிகளுக்கு செயற் கை குளிர்பானங்கள் மற்றும் இயற்கை குளிர்பானங்கள் கொடு த்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் செயற்கை குளிர்பானங்கள் அருந்திய பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது. குறை பிரசவத்தால் தாய்க்கும், குழந் தைக்கும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவ்வாறு ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளது.
நன்றி,திருவை.