Tuesday, April 23, 2013

உலகின் மிகப்பெரிய சமாதானப் புறா

1.2 மில்லிய் பொத்தான்களை கொண்டு உலகின் மிகப்பெரிய சமாதான புறா வடிவமைக்கப்பட்டுள்ளது. 

டுபாயில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சமதான புறா கொடியானது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் கொடியில் உள்ள நிறங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

19x9 மீட்டர் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சமாதான புறா பூஜிப் கலிஃபா வளாகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இப்பகுதியில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23-24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது சமாதான மற்றும் விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு இதன் விழா ஏற்பாட்டுக் குழு இப் பிரமாண்ட சமாதான புறா அடங்கிய கொடியை இவ்விடத்தில் பறக்கவிட்டுள்ளது.

இச்சமாதான புறாவை ஈராக்கின் சிறந்த விளையாட்டு வீரரான பரீட் லப்டா (வயது 33) என்பவரே வடிவமைத்துள்ளார். நல்லெண்ண தூதுவரும் சமாதான பிரசாரகாரருமான பரீத் டுபாயிலுள்ள பாடசாலை சிறுவர்களை இணைத்துகொண்டு இப்புறாவை வடிமைத்துள்ளார்.

மேற்படி விளையாட்டு வீரரை உள்ளடக்கிய குழுவினர் புறாவை வடிவமைக்கும் செயற்பாட்டை கடந்த  2 ஆம் திகதி ஆரம்பித்துள்ளனர். இதனை முற்று முழுதாக வடிவமைப்பதற்கு 7 நாட்கள் சென்றுள்ளன.

விளையாட்டு மற்றும் சமாதான நிகழ்வு நடைபெறும் தினத்தில் இப்புறாவிற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 22, 2013

ஆறு கால்களுடன் பிறந்த அதிசயக்குழந்தை!

மனிதர்களுக்கு இரண்டு கால்கள் என்பதே வழமை எனினும் சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட எண்ணிக்கையான கால்களைக் கொண்ட குழந்தைகள் பிறந்த ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு.

இவ்வாறு அண்டையில் ஆறு கால்களுடன் குழந்தை ஒன்று பிறந்து உலகத்தையே அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் காராச்சி நகரிலேயே இம்ரான் ஷேய்க் என்ற இக்குழந்தை பிறந்துள்ளது. எனினும் குழந்தை எவ்விதாமன பிரச்சினையும் இன்றி ஆரோக்கியமாக உளள்ளது.