Tuesday, December 21, 2010

 உலகின் மிக ஆபத்தான பறவை

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் "உலகின் மிக ஆபத்தான பறவை" யாக இடம் பிடித்துள்ளது.
விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நியூகினியில் முகாமிட்டிருந்த படை வீரர்களுக்கு இந்த பறவை பற்றிய எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தமையானது இதனது தாக்குதலின் பாரதூரத்தை தெளிவாக்குகிறது.
இந்த நெருப்புக்கோழிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியின் மழைக்காடுகளில் பெரும்பாலும் வாழுகின்றன.
உண்மையில் பார்ப்பதற்கு மிக அழகான இவைகள் பயங்கர ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.மிருகக்காட்சி சாலைகளில் வைத்து பராமரிக்க மிகக் கடினமான ஒரு உயிரினமாக இவை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.