Wednesday, September 15, 2010

நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!

1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.
2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).
3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).
4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).
5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (NARROW MINDEDNESS).
6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).
7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).
8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).
9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).
12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).
14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).
15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.
18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.
19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.
20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை. 
- வேதாத்திரி மகரிஷி

200 தேங்காய்களை தன் முழங்கையால் உடைக்கும் மனிதன்.

 
இந்தியாவைச்  சேர்ந்த முஹம்மது ஜாகிர் என்பவர், மக்கள் முன் தனது முழங்கையினால் 200 தேங்காய்களை உடைத்து சாதனை புரியும் காட்சி.

உலகிலேயே மிகச்சிறிய அல்-குர்ஆன் கையெழுத்துப்பிரதி.

உலகிலேயே மிகச்சிறிய அல்-குர்ஆன் கையெழுத்துப்பிரதியொன்று லெபானான், பெய்ரூட்டைச் சேர்ந்த Hassan Abed Rabbo என்பவரிடம் உள்ளது.
தங்க மையினால் எழுதப்பட்ட,சுமார் 604 பக்கங்களையும், 2.4Cm நீளமும் 1.9Cm அகலமும் கொண்ட இந்த குர்ஆன் பிரதி, தனது துருக்கிய பரம்பரையைச்சேர்ந்த பாட்டியிடமிருந்து பரம்பரை வழிச் சொத்தாக இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மிகவும் சிறிய எழுத்துக்களை கொண்டுள்ளதால், இந்த  குர்ஆன் பிரதியினை அவர் பூதக்கண்ணாடியைப் பயன்படுத்தி வாசிக்கிறார். அது மட்டுமன்றி, இதனை ஒத்ததாக பெரியதொரு பிரதியினையும் அவர் உருவாக்கியுள்ளார்.
உலகிலேயே மிகச்சிறிய அல்-குர்ஆன் கையெழுத்துப்பிரதியின் படங்கள்.









நன்றி-சகோதரர்,ஹஸன் அலி.

பலத்த காற்றுத்தாக்குதலுக்குள்ளாகும் உல்லாசக்கப்பல்