Tuesday, June 21, 2011

தாய்ப்பால் தரும் பசு.

ப்யூனஸ் அயர்ஸ்:உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்துகுளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால்தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம்புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது.இப்பசுவின் மரபணுக்களில்இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைதாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள்பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசுமனிதர்களின் தாய்ப்பாலைப் போலவிட்டமின்கள் கொண்டபாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதிபிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால்அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால்தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும்சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.