Thursday, January 26, 2012

மூன்று கைகளுடன் பிறந்த குழந்தை

இந்தியாவில் திருப்பூர் மாவட்டத்தில் காணப்படும் அரசு மருத்துவமனையில் மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தையை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த சுப்ரமணி மனைவி தெய்வாள். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த பெண் குழந்தையின் பின்புறம் முதுகு பகுதியில் சதைப்பற்றுடன் மூன்றாவது கை போல் வளர்த்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கருத்து தெரிவிக்கையில், மூன்று கிலோ எடையுடன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது.
மேலும் நல்ல உடல் ஆரோக்கியம் வந்ததும் பெற்றோர் அனுமதியுடன் பின்பகுதியில் வளர்ந்துள்ள கை போன்ற சதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தண்டுவடம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 நன்றி, மனிதன்