Wednesday, December 1, 2010

கண் தெரியாத 5 வயது கொரியக் குழந்தையின் சாதுர்யம்.

ஐந்து வயதுடைய கண்கள் இரண்டு அற்ற  கொரிய பெற்றோருக்குப் பிறந்த  
Yoo Ye-eun என்ற குழந்தை தான் இந்த அபூர்வ அறிவைப்பெற்றுள்ளது.
3 வயதாக இருக்கும் போது,  ஒரு தடவை ஒரு பாடலை கேட்டால் அதனை உடனடியாக கிரகித்துக்கொண்டு அதற்குரிய இசையை பியானோவில் வாசிக்கிறது.
இக்குழந்தை அடிப்படையில் பியானோ சம்பந்தமான எந்த பயிற்சியையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வரிய திறமையை கொண்ட இக்குழந்தை, கண்கள் இரண்டு இல்லை என்ற காரணத்துக்காக பெற்றோரால் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொரியாவின் மிகப்பிரசித்தி பெற்ற Pandora TV என்ற இணைய தளத்தில் வெளியான இக்குழந்தையின் வீடியோக்காட்சியை 27 மில்லியன் பார்வையாளர்களும், YouTubeல் 2 மில்லியன்பார்வையாளர்களும் பார்வையிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

4 காதுகளுடன் பூனை