Friday, July 23, 2010

விமான 'கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

  விமான விபத்துக்களின் போது அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் கறுப்பு பெட்டியைக் கண்டுபிடித்தவரும் பிரபல அவுஸ்திரேலிய விஞ்ஞானியுமான டேவிட் வொரென் தனது 85ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
வொரென் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள பின்தங்கிய கிராமமொன்றில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை 1934ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார்.
அந்நாட்டின் இராணுவ அறிவியல் தொழில்நுட்ப அமைப்பில் 1952 முதல் 1983 வரை விஞ்ஞானியாக இவர் செயற்பட்டார்
விமான கறுப்பு பெட்டி 1956ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்டது. இவர் 1953ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகின் முதலாவது 'ஜெட்' விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்த குழுவில் அங்கம் வகித்தார்.
விமானத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கும் விமானிகளின் உரையாடலை ஒலிப்பதிவு செய்வதினூடாக மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியுமென உணர்ந்த அவர் இதனைக் கண்டுபிடித்தார்.
1960ஆம் ஆண்டுக்கு பின்னரே இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு, அனைத்து விமானங்களுக்கும் 'கறுப்புப் பெட்டி' பொருத்தப்பட்டது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கி கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thanks To......Virakesari.

'அடோப் பிளாஷ்' அறிமுகப்படுத்தும் புதிய முப்பரிமாண புரட்சி.

  'அடோப் பிளாஷ்', இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். உலகளாவிய ரீதியில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை பாவித்து வருகின்றனர்.
'அடோப்' நிறுவனத்தின் அனைத்து மென் பொருட்களும் வெளியீடுகளும் வரைக்கலையில் (graphics) தனித்துவம் பெற்றவை. இந்த வரிசையில் அடுத்த வெளியீடாக முப்பரிமாண 'அடோப் பிளாஷ்' வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென சிறப்பு முப்பரிமாண (3D) கண்ணாடியையும் அது வெளியிடவுள்ளது. இவ்வெளியீடானது 'அடோப்' தனது அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆயத்தமாக எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொழில்நுட்பமானது இணையத்தளங்களை வடிவமைக்கவுள்ள முப்பரிமாண தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்க உதவும். பாவனையாளர்கள் இதனைப் பார்வையிடும் போது, எழுத்து வரைகலை, காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றில் முப்பரிமாண அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான அந்நிறுவத்தின் சிறப்பு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Thanks To.....Virakesari.