Tuesday, July 26, 2011

80 கிலோ இராட்சத கட்டியுடன் வாழும் மனிதன்.

வியட்னாம் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய  nguyen duy hai என்பவரது வலது காலில் கடந்த 30 வருடங்களாக கட்டி வளர்ந்து இன்று 80 கிலோ எடையுடன் அது காணப்படுவது ஆச்சரியமான ஒன்றாகும்.
இவரது காலில் ஏற்பட்ட வேறு நோய் ஒன்றுக்காக 14 வருடங்களுக்கு முன்னர் வலது கால் வெட்டப்பட்டது. ஆனால் அறியாமை, வறுமை, அசிரத்தை காரணமாக இவரது குடும்பத்தினர் கட்டியை கவனிக்க தவறி விட்டனர்.
அளவுக்கு மீறி வளர்ந்துள்ள இக்கட்டியினால் இவரால் தற்போது உட்காரவும், படுக்கவும் மாத்திரம் தான் முடிகின்றது. எழுந்து நடக்க  முடியாத நிலையில் உள்ள இவரை 61 வயது நிரம்பிய தாயே கவனித்து வருகிறார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள இந்நோயானது  புற்று நோய் அல்ல. மரபணு குழப்பத்தால் ஏற்பட்டதாக இருக்கக் கூடுமென கருதுகின்றனர்.
எப்போது பார்த்தாலும் முறுவல் பூத்த முகத்துடன் காணப்படும் இவர் தனது நோய்க்கு  சத்திர சிகிச்சை மேற்கொள்ள  மனிதாபிமானிகள், தொண்டர் அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி அன்பளிப்புக்களை கோரி உள்ளார்.


 நன்றி-மனிதன்.