Wednesday, July 27, 2011

ஜப்பானின் அற்புதமான தொழில்நுட்பம்.

இதனை நன்று உற்றுப்பாருங்கள். என்னவாக இருக்கக் கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பேனாக்களா? இல்லை.
இன்றைய நவீன உலகில் கணனியின் தேவை தவிர்க்க முடியாத ஒன்று என்பதுடன், அது பல்வேறு பரிணாமங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பேனா அமைப்புக்களில் அமைந்த, ஆடைகளில் செருகிக்கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய கணணிகளை புதிய  தொழிநுட்பத்தின் முன்னோடிகளான ஜப்பானியர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
கீழ் வரும் படங்களில் காணலாம்.









கண் பார்வைக்குறைபாடு.

கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகள் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
1. "மயோபியா' அல்லது கிட்டப் பார்வை

2. "
ஹைப்பர்மோட்டிரோப்பியா' அல்லது தூரப் பார்வை
மயோபியா'வில், தொலைவில் உள்ள எழுத்துக்கள் மற்றும் பொருட்கள் மங்கலாக தெரியும். அருகில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியும். இது, பிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை, யாருக்கும் வரலாம். பொதுவாக, சிறு வயதிலேயே கண்டுபிடித்து விடலாம். தொலைதூர கண்பார்வை குறைவு, தலைவலி, கண்ணில் நீர் வழிதல் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு, வகுப்பில், போர்டில் எழுதும் எழுத்துக்கள் மங்கலாக தெரிகிறது என்பர். 
மேலும், கண்களை வேகமாக அடித்தல், அதிக சோர்வு நிலை மற்றும் கண்ணை சுற்றி வலி போன்ற பிரச்னைகளும் வரலாம். மயோபியா உள்ளவர்களுக்கு, "மைனஸ் பவர்' இருக்கும். மேற்கண்ட சிரமங்கள் இருந்தால், உடனே கண் மருத்துவரிடம் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும்.
கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ் போன்ற தீர்வுகள் இதற்கு உண்டு. இந்த தேதியில், பல நவீன முறை சிகிச்சைகள் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் செய்யப்படுகின்றன. கண்ணாடி அணிவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே, "லாசிக்' எனும் லேசர் முறை சிகிச்சை கொண்டு வரப்பட்டது. "சையாப்டிக்ஸ்' (Zyoptix) எனும் லேசர் முறையில், கண்ணில் இருக்கும், 
"மைனஸ் பவர்' குறைக்கப்படுகிறது. இப்போது, நவீன லேசர் சிகிச்சையான, "இன்ட்ராலேஸ்' (Intralase) முறை மூலம், பார்வை குறைபாட்டை சரி செய்து கொள்ளலாம்.
கருவிழியின் தடிமன் குறைவாக இருப்பின், அதை வெறும், "சையாப்டிக்ஸ்' மூலம் சரி செய்ய இயலாது. ஆனால், "இன்ட்ராலேஸ்' உதவியுடன் இதை முழுமையாக குணப்படுத்த முடியும். மேலும், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்'சில், பக்க விளைவுகள் மிகவும் குறைவாக காணப்படும்.
கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாகவே இருக்கும் நோயாளிகளுக்கு, "ஆர்ப்ஸ்கேன்' (Orbscan)மற்றும் "அபரோமேட்டிரி'(Aberrometry) ஆய்வு செய்யப்பட்டு, பின்னர், "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' செய்யப்படும். பொதுவாக கண்ணாடி அணிந்தும் கண் பார்வை குறைவாக உள்ளவர்கள், இந்த முறை சிகிச்சைக்கு பின், முழுமையான பார்வை பெறுகின்றனர். இதை, "அபரோப்பியா' என்று அழைக்கிறோம்.
லேசர் முறையில், பாதி, "பிலேட்' முறையிலும், பாதி, "லேசர்' (எக்சைமர்) வழியாகவும் சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதுள்ள, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை சிகிச்சையில், லாசிக் சிகிச்சை முழுவதும்,"பெம்டோசெகண்ட்' ((femtosecond) லேசர் மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம், பார்வை குறைபாடு சீராவது மட்டும் இல்லாமல், பார்வைத் திறனும் நன்றாக இருக்கும். இந்த சிகிச்சை முறையில், பக்க விளைவுகளும் குறைவு. லேசர் முறை சிகிச்சையில், பெரும்பாலான பக்கவிளைவுகள் கிடையாது. கண் கூசுவது, கண் உறுத்தல் போன்ற சிறிய விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். அவ்வாறு வந்தாலும், அதற்கு மருந்து மூலம் தீர்வு காணப்படும். 18 வயது நிறைந்தவர்கள், இரண்டு கண்களிலும் பார்வைத் திறன் குறைபாட்டில் சமநிலை அடைந்தவர்கள் மற்றும் கருவிழியில் வேறு எந்த குறைபாடும் இல்லாதவர்கள், இந்த சிகிச்சைக்கு உகந்தவர்கள். சில நேரங்களில், சிறு வயதிலேயே, "அபரோப்பியா' காரணமாக கண் பார்வை குறைவு ஏற்பட்டால், இந்த சிகிச்சை செய்யலாம். இந்த, "இன்ட்ராலேஸ் சையாப்டிக்ஸ்' முறை லேசர் சிகிச்சைக்கு, மயக்கம் கொடுக்க தேவையில்லை. கண்களில் சொட்டு மருந்து (Local Anesthesia) மூலமாக உணர்ச்சிகளை குறைக்க வைத்து, லேசர் சிகிச்சை செய்யப்படும். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய தேவையில்லை. ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை மற்றும் ஆய்வு முடிவுறும். இரண்டு கண்களுக்கும் ஒரே நாளில், ஒரே முறையில் சிகிச்சை பெறலாம். முதல் இரண்டு நாட்கள், கண்ணில் நீர் கசிவு மற்றும் உறுத்தல் இருந்தாலும், பெரும்பாலான நோயாளிகளிடம், ஒரே வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும். "ஹைப்பர்மெட்ரோபியா' எனும் கண் குறைபாடு ஏற்பட்டால், தூரப் பார்வை குறைவாக தெரியும். "பிளஸ் பவர்' அதிகமாக இருக்கும். இதற்கும் லேசர் முறை சிகிச்சை செய்யலாம். குழந்தைகளுக்கு கண் குறைபாடு இருந்தால், சிறு வயதிலேயே அதற்கான தீர்வு, கண்ணாடி அணிய வேண்டும். இல்லையெனில், பிற்காலத்தில் கண்பார்வை சீராக வராமல், குறைவாகவே நின்று விடும்.

Tuesday, July 26, 2011

80 கிலோ இராட்சத கட்டியுடன் வாழும் மனிதன்.

வியட்னாம் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய  nguyen duy hai என்பவரது வலது காலில் கடந்த 30 வருடங்களாக கட்டி வளர்ந்து இன்று 80 கிலோ எடையுடன் அது காணப்படுவது ஆச்சரியமான ஒன்றாகும்.
இவரது காலில் ஏற்பட்ட வேறு நோய் ஒன்றுக்காக 14 வருடங்களுக்கு முன்னர் வலது கால் வெட்டப்பட்டது. ஆனால் அறியாமை, வறுமை, அசிரத்தை காரணமாக இவரது குடும்பத்தினர் கட்டியை கவனிக்க தவறி விட்டனர்.
அளவுக்கு மீறி வளர்ந்துள்ள இக்கட்டியினால் இவரால் தற்போது உட்காரவும், படுக்கவும் மாத்திரம் தான் முடிகின்றது. எழுந்து நடக்க  முடியாத நிலையில் உள்ள இவரை 61 வயது நிரம்பிய தாயே கவனித்து வருகிறார்.
இவருக்கு ஏற்பட்டுள்ள இந்நோயானது  புற்று நோய் அல்ல. மரபணு குழப்பத்தால் ஏற்பட்டதாக இருக்கக் கூடுமென கருதுகின்றனர்.
எப்போது பார்த்தாலும் முறுவல் பூத்த முகத்துடன் காணப்படும் இவர் தனது நோய்க்கு  சத்திர சிகிச்சை மேற்கொள்ள  மனிதாபிமானிகள், தொண்டர் அமைப்புக்கள் ஆகியவற்றின் நிதி அன்பளிப்புக்களை கோரி உள்ளார்.


 நன்றி-மனிதன்.

Thursday, July 21, 2011

வலுவான எலும்பு.. வளமான வாழ்வு..

நாற்பது வயதைத் தாண்டி விட்டாலே பல்வேறு நோய்களோடு எலும்பு தேய்மானமும் பெண்களைத் தேடி வந்து ஒட்டிக் கொள்கிறது. இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் எலும்பு தேய்மானம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 40 ஆண்டுகளில் இந் நோய் 30 கோடி பேரைத் தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்களில், 2 பேரில் ஒருவர் எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  கூறப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது எலும்பு தேய்மானம் நோயால் இந்தியப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந் நோயின் ஆரம்ப அறிகுறியாக மூட்டின் மேல் பகுதியில் லேசான வலி, குதிகாலில் வலி ஏற்படும். சிலருக்கு முதுகுப் பகுதியில் விட்டு விட்டு வலி வரலாம். இந்த பாதிப்புகள் உள்ளவர்கள் உடனடியாக மூட்டுமாற்று சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
எனினும், வரும் முன் காக்கும் நடவடிக்கையாக அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் கே, டி ஆகியவற்றை சேர்த்துக் கொண்டால் எலும்பு நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பால் தயாரிப்பு உணவுப் பொருள்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. ஒரு டம்ளர் பாலில் 300 கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. இனிப்பு அதிகம் சேர்க்காமல் பால் உணவுப் பொருள்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தவிர, கடல் மீன்கள், பாசிகள், சோயாபீன்ஸ், மொலாசஸ், முளைவிட்ட கொண்டை கடலை ஆகியவற்றிலும் கால்சியம் சத்து உள்ளது.
அன்றாட உணவு வகைகள் மூலம் உடலுக்கு போதுமான கால்சியம் கிடைக்கவில்லை என்றால் நாள்தோறும் 1,000 முதல் 1,500 மில்லி கிராம் கால்சியமும், 300 மில்லி கிராம் மேக்னிசியமும் டாக்டரின் ஆலோசனைபேரில் மருந்தாக உட்கொள்ளலாம்.
எலும்புகள் வலுவடைவதற்கு வைட்டமின் கே, டி ஆகியவற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கனிகளில் வைட்டமின் கே-வும்சிறிய மீன்கள், பால், முட்டை, காளான்களில் வைட்டமின் டி சத்தும் நிறைந்துள்ளன.
"பைதோஸ்' என்றழைக்கப்படும் தாவர வகையிலிருந்து கிடைக்கும் சத்துகளும் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் காய்கனிகள், கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொட்டாசியம், லூடின் சத்து போதுமான அளவு கிடைக்க பழ வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இனிப்பு வகைகள், அதிக உப்பு, குளிர்பானங்களை அறவே தவிர்ப்பது நல்லது.
பெரும்பாலான பெண்களுக்கு மெனோபாஸýக்குப் பின்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க அந்தப் பருவத்தில் அவர்கள் கால்சியம் சத்து மிகுந்த பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவர்கள் உடல் எடையைக் குறைக்கும் எளிய பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளலாம்.
இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நடுத்தர வயது பெண்கள் இப்போதே கடைபிடித்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு தேய்மானம் இன்றி இனிமையாக வாழலாம்.

Wednesday, July 20, 2011

சினிமாவின் சீரழிவு .

சினிமாக்கள் மூலம் சிகரெட்புகையிலை கம்பெனிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது என்றும் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
தீவிரமாக நடக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் மீறிபுகைப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புகை பிடிக்கும் பழக்கம் ஏன் உண்டாகிறது என்பது குறித்து அரசு சாரா அமைப்புகள்இந்திய தேசிய புகையிலை ஒழிப்பு நிறுவனம் (நோட்)மற்றும் கோவா தன்னார்வ சுகாதார சங்கம் இணைந்து ஆய்வு மற்றும் கருத்துக் கணிப்பு நடத்தின. இந்த ஆய்வில் தெரியவந்த தகவல்கள்: உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பேர் இப்பழக்கத்தில் விழுகின்றனர்.
இவர்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் திடீரென எப்படி வந்தது என்று ஆய்வில் கேட்கப்பட்டது. இதில் பலர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 54% இளைஞர்களும் 30% பொதுமக்களும் சினிமா பார்த்து புகை பிடிக்க ஆரம்பித்தோம்’ என்று கூறியிருக்கின்றனர்.
சிகரெட்புகையிலை கம்பெனிகளுக்கு சினிமாக்களால் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உலக அளவில் இந்தியாசீனாவில் மட்டுமே புகையிலை பழக்கத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகம். இப்பழக்கத்தால் உலகம் முழுவதும் சராசரியாக தினமும் ஒரு மணி நேரத்தில் 114 பேர் இறக்கின்றனர்.
மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய உலக சினிமாவியாபார நோக்கில் செய்து வரும் தவறுகளால் மக்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. புகை பழக்கத்துக்கு அடிமையாகி நுரையீரல் மற்றும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடுபவர்களை பார்த்தால்சினிமாவில் எந்த நடிகரும் சிகரெட் பிடிக்க மாட்டார்.
தொடர் விழிப்புணர்ச்சிகள் மூலம் கோவாபஞ்சாப் மாநிலங்களில் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறைந்து தற்போது முறையே 9, 15 என்ற சதவீதமாக உள்ளது. 30 வயதுக்கு குறைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். புகை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபடவும் புகைப் பழக்கம் இல்லாத சமுதாயம் உருவாகவும் நடிகர்கள்மீடியாக்களின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் தேசம் - பாலஸ்தீனம்.

ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த அதே அநியாயத்தினை இன்று யூதர்கள் பலஸ்தீனர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் , இருவரின் ஒற்றுமையையும் படங்கள் பேசுகின்றன.