Tuesday, August 3, 2010

நீ...ள...மா...ன... நாக்கு கொண்ட நடிகர்.



கலிபோர்னியாவைச் சேர்ந்த நடிகரான நிக் அபெனசிவ் அமெரிக்காவிலேயே மிக நீண்ட நாக்கைக் கொண்டவர் என அமெரிக்காவின் தொலைக்காட்சியொன்று அறிவித்துள்ளது.
நடிகர் அபெனசிவ்வினுடைய மேலுதட்டிற்கு வெளியே நீட்டப்படக்கூடிய நாக்கின் நீளம் 3.5 அங்குலமாகும்.
எனினும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதியப்படுவதற்கு அவரின் நாக்கின் நீளம் 0.30 அங்குலம் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த ஸ் ரீபன் டெய்லர் என்பவர் உலகின் அதிக நீளமான நாக்கைக் கொண்டவராக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
20 வயதான நடிகர் அபெனசிவ் இது தொடர்பாக குறிப்பிடுகையில்... எனது நாக்கு நீளமானது என எனக்கு தெரியும். ஆனால். அது உலகின் மிக நீண்ட நாக்குகளில் ஒன்று என்று நான் அறிந்திருக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

40 லட்சம் நுளம்புகளைப் பிடித்து 3,000 டொலர் வென்ற பெண்.


தாய்வானைச் சேர்ந்த பெண் ஓருவர் அதிக எண்ணிக்கையான நுளம்புகளைப் பிடித்து  3,000 அமெரிக்க டொலர் பணப்பரிசை வென்றுள்ளார். இவர் ஒரே மாதத்தில் சுமார் 40 லட்சம் நுளம்புகளை பிடித்துள்ளார்.
தென் தாய்வான் யுன்லின் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவாங் யூ யென் என்பவரே நுளம்புப் பிடிக்கும் போட்டியொன்றில் இவ்வாறு அதிக நுளம்புகளை பிடித்துள்ளார்.  இப்போட்டியில் 72  போட்டியாளர்களை அவர் தோற்கடித்தார். அவர் பிடித்த நுளம்புகளின் மொத்த எடை  1..5 கிலோகிராம்களாகும்.
நுளம்புப் பிடிக்கும் கருவிகளைத் தயாரிக்கும் இம்பிகட்ஸ் இன்டர்நெஷனல் எனும் நிறுவனம் இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்து.
அந்நிறுவனமானது ஹுவாங் யூ யென்னின் பெயரை  கின்னஸ் உலக சாதனை நூலில் பதிவு செய்வதற்காக  அனுப்பிவைத்துள்ளது.
தாய்வானில் நுளம்புகளால் பல நோய்கள் பரவி வந்தன. குறிப்பாக, 1965 ஆம் ஆண்டு வரை மலேரியா நோய் அங்கு பரவியிருந்தது. தற்போதும்  டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்கி;றார்கள்.

சாண எரிவாயுவில் ஓடும் ரெயில்.

வேகமாக தீர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மாற்று எரிபொருள் தேவையை அதிகரித்திருக்கிறது. இதன் எதிரொலியாக காட்டாமணக்கில் இருந்து பயோடீசல் உள்பட பலவிதமான மாற்று எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முன்னோடி நிகழ்வாக மாட்டுச் சாண எரிவாயுவைக் கொண்டு முதல்முதலாக ரெயில் இயக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லகோமா – போர்ட் வொர்த் நகரங்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. ஒரு ஆண்டு காலத்துக்கு பயணிகள் ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த ரெயில் சமீபத்தில் சோதனை ஓட்டமாக விடப்பட்டது. முதற்கட்ட ஆய்வில் 20 சதவீத எரிவாயுவும் 80 சதவீத டீசலும் சேர்த்து இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன்பிறகு அதிகப்படியான எரிவாயு சேர்த்து தற்போது ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரெயிலுக்கு `ஹார்ட்லேண்ட் பிளையர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. `பொதுவாக உயிரி எரிபொருளை பயன்படுத்தும்போது என்ஜினுக்குள் அழுத்தம் அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும். எனவே சில மாற்றங்களுடன் இந்த என்ஜின் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவில் முதல்முதலாக சாண எரிவாயுவில் இயங்கும் வகையில் ரெயில் விடப்பட்டுள்ளது’ என்று அங்குள்ள ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.