Sunday, October 31, 2010

மரம் பாதி.மனிதன் பாதி.

 இந்தோனேசியாவின் மீன்பிடித்தொழிலாளியான Dede என்பவர் ஆச்சரியமான,அசாதாரண தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடம்பில் கை,கால்ப்பகுதிகளில் மரவேர் போன்ற அமைப்பொன்று வளர்வதுடன், இதன் கிளைகள் வருடத்துக்கு 5Cm நீள அளவில் வளர்வதாக குறிப்பிடப்படுகின்றது.அத்துடன் அதன் தழும்புகள் உடம்பு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூரில்  இவரை "மரமனிதன்" என்றே அழைக்கின்றனர்.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக உள்ளூர் வைத்தியர்களினால் இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக  BBC இன் உலகின் "அசாதாரண  மனிதர்கள்" சம்பந்தமான ஆவணக்காப்பகம் குறிப்பிடுகின்றது.
Dede யினுடைய  மர்மமான தோல் நோய் சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சியில் University of Maryland ச் சேர்ந்த உலகின் தோல் நோய் வல்லுநர் Dr Anthony Gaspari, அவர்கள் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





2 வயது சாதனைக்குழந்தை.

அமெரிக்காவைச் சேர்ந்த Darell Lilly என்ற இரண்டு வயதுக்குழந்தை அதிசயிக்க தக்க வகையில் சுமார் 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் பெயர்களை உலகப்படத்தில் தொட்டு காட்டி சொல்லி பிரமிப்பில் ஆழ்த்துவதை இங்கே காணலாம்.

செங்கல் உண்ணும் மனிதன்.

இந்தியா,சென்னையைச்சேர்ந்த மணிமாறன் என்ற இளைஞர் செங்கற்களை  தன் பல்லால் கடித்து விரும்பி உண்ணுகிறார்.
இவர் பாறை,பளிங்கு கற்கள் போன்றவைகளையும் உண்ணுவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் விஷேசமாக செங்கற்களை உண்ணுவது தான் இவருக்கு விருப்பமாகவுள்ளதாம்.