Saturday, July 17, 2010

48 ஆண்டுகளுக்குப்பின் உடல் மீட்பு.

இந்திய சீனப்போரில் உயிரிழந்தவரின் உடல் 48 ஆண்டுகளுக்குப்பின்னர் மீட்பு.

1962-ம் ஆண்டு இந்தியா- சீனா இடையே போர் நடந்தது. இந்த போரின் போது அருணாசல பிரதேசத்தில் டோக்ரா ரெஜிமெண்ட் என்ற படைப் பிரிவில் சேர்ந்து போரிட்ட வீரர்கரம் சந்த் கடோச். இவர் இந்த போரில் வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் அப்போது கிடைக்க வில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அருணாசலபிரதேசத்தில் பனி மூடிய சிகரத்தில் ஒரு ராணுவ வீரர் உடல் கெட்டுப் போகாமல் கிடந்தது.
சீருடை அணிந்த நிலையில் இருந்தார். உடனே உடலை மீட்டு கொண்டு வந்தனர். சீருடையில் இருந்த அடையாள பேட்ஜை வைத்து அவர்யார் என்று அடையாளம் காணப்பட்டது.
இவரது சொந்த ஊர் இமாசலபிரதேச மாநிலம் பாலம் பூர் ஆகும். கடோச் 1959-ல் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 19. அவர் பணியில் சேர்ந்த 3 வருடத்தில் இந்தியா- சீனா இடையே போர் ஏற்பட்டது. அருணாசலபிரதேசத்தில் 4-வது டோக்ரா, ரெஜி மண்ட்டில் சேர்ந்து சீனாவை எதிர்த்து போரிட்டார்.இதில் அவர் 22 வயதில் வீரமரணம் அடைந்தார்.
48 ஆண்டுகள் கழித்து அவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. சொந்த ஊரான பாலம்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடந்தன.
பனி மூடிய சிகரத்தில் பனிக்கட்டிகளுக்கு இடையே உடல் கிடந்ததால் கெட்டுப் போகாமல் இருந்திருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு ராணுவ வீரர் போரில் இறந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய உடல் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
இது பற்றி கடோச்சின் உறவினர்கள் கூறும் போது, எங்கள் குடும்பத்தில் ஒருவராக கடோச் இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவருக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என்றனர்.

"மோனாலிசா"

புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள். 
எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஓவியர் லியோனார்டோ டா வின்சியின் ஓவியங்கள் பாரிஸ் நகரின் லூவர்அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்குள்ள மோனாலிசா உள்ளிட்ட 7 ஓவியங்களை விஞ்ஞானிகள் பிலிப்வால்டர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.
மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் மீது எக்ஸ்ரே கதிர்களை பாய்ச்சி பரிசோதனை செய்தனர். அதில் மோனாலிசா ஓவியத்தை லியோனார்டோ டாவின்சி 30 அடுக்கு பெயிண்டிங் (வண்ணம்) செய்து இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒவ்வொரு வண்ண கலவை அடுக்கு களும் 40 மைக்ரோ மீட்டர் அதாவது மனிதனின் மயிர் தடிமன் அளவுக்கு நுண்ணியமாக வரையப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
மேலும், மோனாலிசா ஓவியத்தில் மேங்கனிஷ் ஆக்சைடு என்ற ரசாயண கலவையின் மூலம் ஓவியர் டா வின்சி வரைந்துள்ளார். ஓவியம் பளபளப்பாக இருப்பதற்கு அதன் மீது அவர் காப்பர் உலோகத்தை பயன் படுத்தியுள்ளார்.
இந்த தகவலை விஞ்ஞானி பிலிப்வால்டர் தெரிவித்துள்ளார். ஓவியர் டாவின்சி பயன் படுத்திய தொழில் நுட்பத்துக்கு ”ஸ்பு மோடோ” என்று பெயர் என அவர் கூறினார்.
மோனாலிசா ஓவியத்தை டாவின்சி கடந்த 1503 -ம் ஆண்டு வரைய தொடங்கினார். புளோ ரென்டைனை சேர்ந்த வியாபாரி பிரான்சிஸ்கோ டெல்ஜியோகாண்டோ வின் மனைவி லிசா கெராந்தினி இந்த ஓவியத்துக்கு மாடலாக இருந்தார்.
Thanks To.....www.z9world.com

உலகின் மிக உயர்ந்த பாலம்.

உலகின் அதிவேக கார்.

உலகின் அதிவேக காராக உருவெடுத்துள்ளது புகாட்டி வெய்ரான். இதன் வேகம் மணிக்கு 268 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பூமியிலேயே அதிவேகமான காராக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
காரை ஸ்டார்ட் செய்து கிளம்பியதும் மணிக்கு 60 மைல்கள் என்ற வேகத்தை எட்ட இந்தக் கார் எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 2.5 விநாடிகள்தான். அதேபோல 124 மைல்கள் என்ற வேகத்தை எட்ட 7.3 விநாடிளையும், 186 மைல்கள் என்ற வேகத்தைப் பிடிக்க 15 விநாடிகளையும் மட்டுமே இது எடுத்துக் கொள்கிறது.
புகாட்டி கார் ஏற்கனவே கின்னஸ் சாதனையையும் மேற்கொண்டுள்ளது. அந்தக்காரை ஓட்டிய டிரைவர் பியரி ஹென்றி ரபேனல் அதிகபட்சம் மணிக்கு 265.9 மைல்கள் மற்றும் 269.8 மைல்கள் வேகத்தில் காரை ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
புகாட்டி வெய்ரான் சூப்பர்ஸ்போர்ட் கார், 8 எல் டபிள்யூ 16 என்ஜினில் இயங்குகிறது. இந்த என்ஜின் 12000 குதிரை சக்தியில் இயங்கக் கூடியதாகும்.
ரேஸ்களில் பயன்படுத்தக் கூடிய கார்களுக்கான வடிவமைப்புடன் கூடியதாக இந்த கார் உள்ளதாலேயே இந்த அளவுக்கு மின்னல் வேகத்தில் பயணிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

'மம்மி'


கலிபோனியாவில் 'மம்மி'களின் கண்காட்சி


இதுவரை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டாத அரிய பல 'மம்மி'களின் கண்காட்சி இம்மாதம் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. 200இற்கும் மேற்பட்ட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிகள் இக்கண்காட்சியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றையே இங்கு காண்கிறீர்கள்.


Thanks To......Tamildailymirror

''பேஷ்புக்''குக்கு எச்சரிக்கை!!!

2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்' பாவனையை விட்டு விலகுவதாக எச்சரிக்கை!
அகற்றப்பட்ட 4 இஸ்லாமிய பக்கங்களை மீண்டும் கொண்டுவரப்படாதவிடத்து 2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்'கிலிருந்து விலகிவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பல 'பேஸ்புக்' பக்கங்களில் ஒரே மாதிரியான விளம்பரங்களை இவர்கள் விடுத்திருக்கிறார்கள். அவ்விளம்பரத்தில், 'பேஸ்புக்' நிறுவுனரான மார்க் ஸக்கர்பேக் மற்றும் 'பேஸ்புக்'கின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோர், 2.5 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வை உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.
மிகப் பிரபலமான இஸ்லாமிய பக்கங்கள் நான்கு அகற்றப்பட்டதையிட்டு இஸ்லாமிய சமுதாயம் கோபமாக உள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாதவிடத்து பேஸ்புக்கினை பயன்படுத்தும் முஸ்லிம்கள், இஸ்லாமிய மாற்று வலையமைப்புகளுக்கு மாறிவிடுவர் எனவும் அவர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.
இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை 'பேஸ்புக்'கில் பதிவிடுவது 'பேஸ்புக்' சட்டங்களுக்கு எதிரானது என விதிக்க வேண்டும் என்பதும் இக்கடிதத்தில் உள்ள இன்னொரு கோரிக்கையாகும்.
Thanks To......Tamildailymirror.

18ஆம் நூற்றாண்டு கப்பல் கண்டுபிடிப்பு



18ஆம் நூற்றாண்டுக்கு உரியதாக கருதப்படும் கப்பல் ஒன்றின் சிதைவு அமெரிக்காவின் லோவர் மன்ஹாட்டன் பகுதியில் பழைய உலக வர்த்தக மையத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகரை விரிவுபடுத்தும் நோக்கில் ஹட்ஸன் ஆறு நிரப்பப்பட்ட போது 32அடி நீளமான இந்த கப்பலும் நிரப்பும் பணியில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நூற்றாண்டுகளின் பின் கப்பலில் காணப்பட்ட மரங்கள் காற்றுடன் தொடர்புபடுவதால் விரைந்து அவை பழுதடையக் கூடும். ஆகையினால் இவற்றை பாதுகாக்கும் முயற்றியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

44 கிலோகிராம் நிறையுள்ள ஒரு நங்கூரமும் இதே இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த நங்கூரம் இந்த கப்பலுக்குரியதா என்பது பற்றி எதுவும் கூற முடியாதுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் முதலாவது உலக வர்த்தக மையம் கட்டப்பட்டபோது பாதிக்கப்படாத நிலத்திலிருந்தே இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2001இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பிரபலமான இரட்டைக் கோபுரங்கள் அழிக்கப்பட்டன. அதன் பின்னர் அந்த இடத்தில் புதிய உலக வர்த்தக மையத்தினை அமைக்க தொடங்கினர்.
புதிதாக கட்டப்படும் இக்கட்டிடம் 1776அடி உயரங்களைக் கொண்டது. இதன் பணிகள் 2013ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


2014 உலகக்கோப்பை கால்ப்பந்து-சின்னம்.