Wednesday, June 30, 2010

உலகக் கோப்பை கால்பந்து : காலிறுதியில் 8 அணிகள்

தென்ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெற்றன.இரவு 7.30 மணிக்குத் தொடங்கிய போட்டியில் ஜப்பான் - பராகுவே அணிகள் மோதின. ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இருஅணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. அதனால் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை என்பதால் 'பெனால்டிக் கிக்' தரப்பட்டது. இதில் ஜப்பான் வீரர் ஒருவர் கோல் அடிக்கத் தவறியதால் பராகுவே 5-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
நள்ளிரவு நடைபெற்ற ஸ்பெயின் - போர்ச்சுகல் இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. இத்துடன் நாக்-அவுட் சுற்றுகள் முடிவுக்கு வந்தன.
இன்றும் நாளையும் ஓய்வு நாட்கள் என்பதால், நாளை மறுதினம் ஜூலை 2 ஆம் தேதி காலிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.
காலிறுதியில் மோதும் அணிகளின் விவரம் வருமாறு
பிரேசில் - நெதர்லாந்து
அர்ஜெண்டினா - ஜெர்மனி
உருகுவே - கானா
பராகுவே - ஸ்பெயின் - ஆகிய அணிகள் மோதுகின்றன.
காலிறுதிக்குள் நுழைந்துள்ள அணிகளில் நான்கு நாடுகள் தென் அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவை. 3 அணிகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து கானா மட்டுமே காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. பராகுவே அணியிடம் ஜப்பான் அணி நேற்று வீழ்ந்தால் ஆசியா கண்டத்தில் இருந்தும் எந்த அணியும் காலிறுதிக்குள் நுழையவில்லை.
Thanks To.......www.lankasrisports.com

காதுகளை மூடித் திறக்கும் அதிசய சிறுவன் _

கண்களை மூடித் திறக்கலாம்; வாயை மூடித் திறக்கலாம்; காதை மூடித் திறக்க முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கின்றான் 9 வயதே ஆன சிறுவன் ஒருவன்.
கோவை மாவட்டத்தில் இந்தச் சிறுவனின் அரிய செயலைப் பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட்டின் கூலித் தொழிலாளியான கிருஷ்ணன் என்பவரது மகன் பிரேம்குமார்(9) என்பவரே இந்த அதிசயத்தைச் செய்து காட்டுகின்றார்.
அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவர், தன் இரண்டு காதுகளையும் காதுக்குள் சொருகி வைத்து சக மாணவர்களை அசர வைக்கிறார். இரவு நேரத்தில் தூங்கும் போது, இவரது இரண்டு காதுகளும் மூடிய நிலையில் இருக்கும். காலையில் எழுந்ததும் காதுகள் தானாக திறந்து விடும்.
சிறுவன் எப்போது வேண்டுமானாலும் காதை காதுக்குள் சொருகி வைத்துவிட்டு, தன் படிப்பை முழு கவனத்துடன் படிக்கின்றார். தனித்திறமை கொண்ட இவரது செயலை சக மாணவர்கள் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் பொழுது போக்காக வேடிக்கை பார்க்கின்றனர்.

'ரெப்' இசை மூலம் கணித பாடம் கற்பிக்கும் அமெ. ஆசிரியர்

அமெரிக்காவில் 'ரெப்' இசைமூலம் கணிதபாடம் கற்பிக்கின்றார் ஆசிரியர் ஒருவர்.
லாமார் குயின் (26) என்பவரே இவ்வாறு இசை மூலம் கணித பாடத்தைக் கற்பிக்கின்றார். லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த இவர் 'ரெப்' இசைப் பாடல்கள் அடங்கிய வீடியோவை திரையில் ஓட விட்டுக் கணித பாடம் நடத்துகிறார்.
கணிதம் பல மாணவர்களுக்குப் பிடிக்காத பாடமாக உள்ளது. குறிப்பாக அதில் உள்ள அல்ஜிப்ரா என்ற பாடப் பிரிவைப் படிக்க மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே, அமெரிக்காவில் 'ரெப்' இசை மூலம் அல்ஜிப்ரா கணித பாடத்தை மாணவர்களுக்கு மிக எளிதாக இவர் கற்றுத் தருகிறார்.
இந்தப் பாட திட்டத்தை 8ஆவது வகுப்பு மாணவர்களுக்கு இவர் அறிமுகப்படுத்தியுள்ளார். 'ரெப்' இசை வீடியோ மூலம் பாடம் நடத்துவதால், மாணவர்கள் மிக எளிதாகக் கணிதத்தை புரிந்து கொள்கின்றனர்.
கணித பாடத்தில் பின் தங்கிய நிலையில் இருந்த மாணவர்கள் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த முறையில் பாடம் நடத்தும் திட்டம் அமெரிக்காவின் மற்ற நகரங்களுக்கும் பரவி வருகிறது .
Thanks To....Virakesary

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு

எகிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.
கிறிஸ்துவுக்கு முன் 1664 - 1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆய்வை மேற்கொண்ட, அவுஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.
டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள் , கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.
ஆஸி. ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Thanks To....Virakesari

பேஸ்புக் இல் வேகமாக பரவிவரும் கிளிக் வார்ம் (clickjacking 'Like' worm)

AddThis Social 
Bookmark Button
லட்சக்கனக்கான பேஸ்புக் பயனாளர்களிடையே அவர்களது புரோபைல் மூலமாக ஸ்பாம் மாதிரியான வார்ம் (worm) ஒன்று மிக வேகமாக பரவிவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
10 நாட்களுக்கு முன்னர் இதோ தன்மையில் மற்றொரு வார்ம் பரவியிருந்தாலும் அதை கட்டுபடுத்தி விட்டதாக பேஸ்புக் அறிவித்தது. ஆயினும் தற்போது மீண்டும்
    "LOL This girl gets OWNED after a POLICE OFFICER reads her STATUS MESSAGE."
    "This man takes a picture of himself EVERYDAY for 8 YEARS!!"
    "The Prom Dress That Got This Girl Suspended From School."
    "This Girl Has An Interesting Way Of Eating A Banana, Check It Out!"
என்ற மெஸேஜ்கள் கொண்டு பரவுகின்றது.
மேலுள்ள விடயங்களுடன் காணப்படும் லிங்க்குகளை கிளிக் செய்ததும் வெறும் "Click here to continue" என்ற எழுத்துக்கள் மட்டுமுள்ள பக்கம் ஒன்று திறக்கும் அதன் மீதோ அல்லது அப்பக்கத்தின் எந்த பகுதியில் கிளிக் செய்ததும்  உடனடியாக உங்களின் அனுமதி இல்லாமலே உங்களின் பேஸ்புக் புரோவைலில் இதே போன்ற மெஸெஜ்களை உடனே பரப்பிவிடுகிறது இந்த வார்ம்.

அண்மையில் பேஸ்புக் புதிதாக லைக் (Like) செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய பின்னரே இவ்வகையான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.
மேலுள்ள சொற்கள் கொண்டு வரும் இணைப்புக்கள் மீது கிளிக் செய்யவேண்டாம் என்று பேஸ்புக் தனது பயனாளர்களை கேட்டுள்ளது.
Thanks To.....4Tamilmedia

Tuesday, June 29, 2010

உலகில் மிகச் சிறந்தது.......

Thanks To........4Tamilmedia

உலகின் மிகப் பெரிய தங்க நாணயம்

உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் 03 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனை!
உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் 03 மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலத்தில் விற்பனை ஆகி உள்ளது. 01 மில்லியன் கனேடிய டொலர்கள் முகப்பெறுமதி உடைய ஐந்து தங்க நாணயங்களை கனேடிய திறைசேரி 2007 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.
இவை ஒவ்வொன்றின் எடை 100 கிலோ. இவை ஒவ்வொன்றும் உலகின் மிகப் பெரிய தங்க நாணயங்களாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தன. இவற்றில் ஒரு நாணயம் வியன்னாவில் ஏலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்தது.
அப்போதே ஸ்பானிய நிறுவனம் ஒன்று இதை வாங்கியது. போட்டிக்கு யாருமே ஏலம் கோரவில்லை. வாங்க வந்தவர்களை விட இதைப் பார்வையிட வந்திருந்தோரே அதிகமானவர்கள். இந்த நாணயத்தை வாசகர்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறோம்.
Thanks To.........Veerakesary

10 ஆண்டுக்குப் பின் ஒரு பலவந்த குளியல்!

மேற்கு கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான நபர் 10 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வீசிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டனர் அக்கம்பக்கத்தில் உள்ளோர்.
கடைசியாக ஒரு முடிவெடுத்து 4 பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை கயிற்றால் கட்டி வைத்து, ஆடைகளைப் பலவந்தமாகக் களைந்து பொதுமக்கள் முன்னிலையில் குளிப்பாட்டினர். 10 ஆண்டு கால அழுக்கு ஆயிற்றே? சோப்பு போட்டால் போகுமா? உடல் முழுவதும் மணலைப் பூசி அழுக்கைச் சுரண்டி, தேய்த்து எடுத்தனர். குளியல் முடிய 4 மணி நேரம் ஆகியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதைப் படிக்கும்போதே நமக்கு 'உவ்..வே..' என்று குமட்டுகிறதே, அவரைக் குளிக்க வைத்த புண்ணியவான்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
இச்சம்பவத்துக்குப் பின் 'புனிதப்பட்ட' அந்த நபருக்கு தினமும் ஒரு முறையாவது குளிக்க வேண்டும் என்ற 'ஞானோதயம்' வந்துள்ளதாம்.
தனிமனிதராக இத்தனை காலம் வாழ்ந்துவிட்ட அவர், இப்போது தனக்கு ஒரு துணை கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளாராம்.
Thanks To.........Veerakesary

Monday, June 28, 2010

முதலுதவி

ntl;Lf;fhak;„
fhaj;ijj; Rj;jkhd jz;zPuhy; fOtp mjd; Nky;;  nll;lhy; jltTk;. Njitg; gl;lhy; Ngz;l; va;l; NghlTk;.
%f;fpypUe;J ,uj;jk; tbjy;„
rk;ge;jg;gl;l egiu rw;Nw Nky; Nehf;fpg; ghh;j;jthW cl;fhur; nra;aTk;. mtiu thahy; %r;R tplr; nrhy;y Tk;. %f;fpd; Nky; Fsph; xj;jlk; nfhLf;fTk;. %f;fpd; nkd;ikahd gFjpia tpuy;fshy; tpl;L tpl;L mOj;jpg; gpbf;fTk;. fOj;jpd; gpd; gf;fj;jpy; my;yJ new;wpapy; Fsph; xj;jlk; nfhLg;gJk; gyd; jUk;.
 

Foe;ij vijahtJ tpOq;fp tpl;lhy;„
glglg;ghf Ntz;lhk;. Foe;ijiaf; Fg;Gwg;gLf;f itj;J mjd; gpd; gf;fj;jpy; jl;bdhy; mJ tpOq;fpa nghUs; ntspNa tuyhk;. Foe;ij vij tpOq;fpaJ vd;Nw njhpahky; my;yJ mij vLg;gjpy; rpukk; ,Ue;jhy; cldbahf kUj;Jthplk; mioj;Jr; nry;yTk;.
tpyq;Ff; fb„
tPl;by; tsh;f;fpw gpuhzpf; fb vd;why; fbgl;l ,lj;ij ed;whff; fOtp clNd nll;ld]; Crp nghl;Lf; nfhs;s Ntz;Lk;. Ntw;W tpyq;Ffs; vd;why; fbgl;l ,lj;ijf; Fohapd; mbapy; fhlbf; fOtp Md;bnrg;bf; Nrhg; my;yJ nll;lhy; jltp kPz;Lk; fOtp jhkjpf;fhky; Nugp]; Crp Nghl;Lf; nfhs;s Ntz;Lk;.
kaf;fk;
kaf;fkile;j egiuf; fPNo gLf;f itj;J neQ;Rkw;Wk; tapw;Wg; gFjp Milfisj; jsh;j;j Ntz;Lk;. jiyia xU gf;fkhfj; jpUg;g Ntz;Lk;. fhy;fis Nyrhf cah;j;j Ntz;Lk;. cldbahf Fbf;fNth rhg;gplNth vJTk; nfhLf;ff; $lhJ. kaf;fk; njspe;j gpwF nfhQ;;rkhff; Fbf;f VNjDk; nfhLj;J rpy epkplq;fs; cl;fhu itj;Jg; gpwNf vOe;jpUf;f mDkjpf;f Ntz;Lk;.
Thanks To......a1realism

செயற்கை அறிவு

உலக அளவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் அதிகமாக பேசப்படும் விஷயம் 'செயற்கை அறிவு'. ஆங்கிலத்தில் ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்  சுருக்கமாக ஏ.ஐ. (A.I.) என்று அழைக்கிறார்கள். மனிதனைப் போல சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்ளும் திறனை கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களுக்கு அளிப்பதுதான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் முதல்படிதான் 'ரோபட்டு'கள். ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் 'ரோபட்டு'களின் இயக்கங்கள் உள்ளது. இந்த ஆராய்ச்சியில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
அறிவியல் அதிசயம் பகுதியில் இடம்பெற்று வரும் 'ரோபட்டு'கள் பற்றிய தகவல்களில் இந்த வாரம் 'செயற்கை அறிவு' பற்றிய விவரங்கள் இடம்பெறுகிறது.
செயற்கை அறிவு
நவீன கம்ப்யூட்டர் மற்றும் 'ரோபட்' துறையில் உணர்ச்சி மிகுந்த ஆவலை தூண்டும் பகுதியாக செயற்கை அறிவு  விளங்குகிறது. அதே சமயம் இந்த துறை பற்றிய சர்ச்சைகளும் ஏராளம் உண்டு.
இறைவனின் படைப்பில் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. அதில் ஒன்று மனிதன். ஆதி மனிதன் முதல் இன்றைய நவீன கால மனிதன் வரை மனித இனம் வியக்கத்தகுந்த மாற்றங்களை சந்தித்துள்ளது. தேவைகளை நிறைவேற்ற மனிதன் எடுத்த முயற்சிகள், இதற்காக அவன் நடத்திய ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவை மனித இனத்தை நாகரீகம் மிகுந்ததாக வளர்ச்சி அடையச் செய்தது.
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்கு கற்றுக் கொடுத்து தன்னைப் போல புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன் முயற்சி செய்கிறான். இது தான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் விளக்கம்.
புத்திசாலித்தனம் மிக்க எந்திரம் மற்றும் கம்ப்யூட்டர்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் விஞ்ஞானிகள் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன் இதற்கான ஆய்வுகள் தீவிரம் அடைந்தது.
இந்த ஆராய்ச்சிகளில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் அதிக ஈடுபாடு காட்டினார்.
1947-ம் ஆண்டு இது தொடர்பாக அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும் என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
அதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் புரோகிராம்களை உருவாக்கி அதன் மூலம் எந்திரங்களை, ரோபட்டுகளை இயக்கி வருகிறார்கள். இந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை ரோபட்டுகளின் பணிகள், வேலைத்திறமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மனிதனைப் போல புத்திசாலித்தனம் நிறைந்த கம்ப்யூட்டர் புரோகிராம் மற்றும் ரோபட்டுகளை உருவாக்குவது சவால் நிறைந்தது என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், மனிதனின் புத்திசாலித்தனத்துக்கு அடிப்படையாக விளங்கும் மூளை மற்றும் நரம்பு அமைப்புகள் மிக நுட்பமானவை. அதுபோன்ற ஒரு அமைப்பை (அதாவது, செயற்கை அறிவு) உருவாக்குவது கடினம்.
மனிதனின் எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித அறிவு கொண்ட) எந்திரம்தான் 'செயற்கை அறிவு.' எதை வேண்டுமானாலும் கற்றறியும் திறன் காரணங்களை அறியும் திறன்.
மொழிகளை கையாளும் திறன், மற்றும் தன் எண்ணங்களை தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளை கொண்டதுதான் 'செயற்கை அறிவு'.
இத்தகைய 'செயற்கை அறிவு' மிக்க மனித எந்திரங்கள் (ரோபட்டுகள்) உருவாக்குவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர்களால் ஒரு எல்லையைத் தாண்டி முன்னேற முடியவில்லை.
இன்றைய 'செயற்கை அறிவு' கொண்ட எந்திரங்கள் மனித கெட்டிக்காரத்தனத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளை பிரதிபலிக்கும் திறன் கொண்டவை.
சில நவீன ரோபட்டுகளில் கற்றறியும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கின்றன. பயிற்சி ரோபட்டுகள் தன் வழிப்பாதையில் உள்ள தடைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு தன் நகரும் பாதையை மாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு நினைவில் வைத்துக்கொள்ளும் இந்த ரோபட்டுகள் இதே மாதிரி சந்தர்ப்பங்கள் மீண்டும் வரும்பொழுது திறம் பட கையாண்டு தடைகளை முறியடிக்கின்றன. ஏற்கனவே கூறியது போல் நவீன கணினிகள் மனிதனைப் போல் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டிருப்பது கிடையாது. சில ரோபட்டுகள் மனிதனைப் பார்த்து அறிந்து அவன் அசைவுகளை அப்படியே செய்து காண்பிக்கிறது. ஜப்பானில் ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட்டுகளுக்கு நடனமாடுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.
சில ரோபட்டுகள் சகஜமாக பழகும் தன்மையைக்கூட கொண்டிருக்கின்றது. எம்.ஐ.டி. நிறுவனத்தில் செயற்கையாக சிந்திக்கும் திறன் பரிசோதனைக் கூடத்தில் உள்ள கிஸ் மெட்  ரோபட் மனித உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறும் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறும் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்கின்றது. கிஸ்மெட்டின் வடிவமைப்பாளர்கள் மனிதர்கள் குழந்தையிடம் அவ்வாறு உரையாடுகிறார்கள் (குரலில் ஏற்ற இறக்கம் மற்றும் உடல் அசைவுகள் போன்ற) என்ற ஆரம்பக்கட்ட உரையாடலில் ஆர்வம் காட்டினார்கள். இந்த ஆரம்ப உரையாடல்தான் ரோபட்டுகளின் மனிதனைப்பற்றி கற்றறிவதற்கு உண்டான முக்கிய அடித்தளமாக அமைந்தன.
எம்.ஐ.டி.யின் 'செயற்கை அறிவு' தொடர்பான பரிசோதனைக் கூடத்தில் உள்ள 'கிஸ்மெட்' மற்றும் சில ரோபட்டுகள் பிரத்தியேக கட்டுப்பாட்டு கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன. அதாவது இதன் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு மத்தியக் கணினியை சார்ந்திருப்பதில்லை. இதற்குப்பதிலாக இந்த 'ஆரம்ப கட்ட உரையாடும் முறைகளை' கையாள்வதற்கு ஏற்ற கணினியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. 'இந்த முறைதான் மனித அறிவுத்திறனின் துல்லியமான மாதிரி முறை' என்கிறார் இத்திட்ட இயக்குனர் ரோட்னி புரூக்ஸ்.
மேலும் கூறுகையில் இந்த ரோபட்டுகளின் பெரும்பாலான இயக்கங்கள் தன்னிச்சையாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகும், சுயமாக சிந்திக்கும் திறனில் அதி உன்னத நிலையை எட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை என்கிறார். செயற்கை அறிவு திட்டத்தின் மற்றொரு மிகப் பெரிய சவாலாக இருப்பது இயற்கையாகவே (மனிதனைப்போல்) சிந்திக்கும் திறன் எவ்வாறு வேலை செய்கிறது என்பதே. செயற்கை அறிவை மேம்படுத்துவது என்பது ஒரு செயற்கை இருதயத்தை வடிவமைப்பது போன்ற எளிதான காரியமில்லை. விஞ்ஞானிகளிடம் ஒரு எளிமையான மற்றும் முன்மாதிரி வரைமுறைகள் இல்லை மனித மூளை பல நூற்றுக்கோடிக்கணக்கான நியூரான்களைக் கொண்டிருப்பதை நாமறிவோம். இவற்றிற்கிடையே ஏற்படும் மின் பரிமாற்றங்களின் மூலமாகவே நாம் சிந்திக்கவும் கற்றறியவும் முடிகிறது என்பதையும் அறிவோம். இருந்தாலும் இவற்றிற்கிடையே உள்ள இணைப்புகளின் இந்த வேலையைத்தான் செய்கின்றன என்பதை நாம் சரியாக உறுதியிட்டுக் கூற முடியாது. அந்தளவுக்கு திறன்பட்ட மற்றும் சிக்கலான சுற்று இணைப்புகளைக் கொண்டது மனித மூளை. மேற்கூறிய காரணங்களால் செயற்கை அறிவு பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள் எழுத்து வடிவங்களிலேயே உள்ளன. ஏன்? எதற்கு? எப்படி? நாம் சிந்திக்கிறோம். நாம் கற்றுக் கொள்கிறோம்? என் ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு ரோபட்டுகளை வடிவமைக்கும் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதனை ஒத்த ரோபட்டுகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் புரூக்ஸும் அவரது குழுவும், 'மனித அறிவாற்றலுக்கு ஏற்றுவாறு வடிவமைப்பதற்கு மனித சமுதாயத்தின் அனுபவங்கள் தேவைப்படுகின்றன' எனவும், 'இது மேலும் மனிதர்களுடன் பழகுவதற்குண்டான முறையையும்' எளிதாக்குவதோடு மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதற்கும் ரோபட்டிற்கு வாய்ப்பு உள்ளது' என்கிறார்.
செயற்கை பற்றிய ஆராய்ச்சி இயற்கையாக (மனிதன்) சிந்திக்கும் திறன் பற்றி அறிந்து கொள்வதற்கும் பயன்பட்டு வருகிறது. சிலர் செயற்கை அறிவைக் கொண்டு ரோபட் வடிவமைப்பதை தீவிர எண்ணமாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் எந்திரத் தொழிலாளர், உடல் சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு ரோபட்டுகளை வடிவமைத்து வருகின்றனர். பெரும்பாலான கைதேர்ந்த ரோபட் வடிவமைப்பாளர்கள் ரோபட் உலகில் நடக்கும் புரட்சி 'ஊலடிழசபள' என்ற உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் (மனிதன் மற்றும் எந்திரங்களின் ஒருங்கிணைப்பு) என கணித்துள்ளனர்.
இந்த புரட்சிகள் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் தன் மூளையின் செயல்பாடுகளை அதிக திறமை படைத்த ரோபட்டுகளில் உட்செலுத்தி மனிதன் பல நூற்றாண்டு காலம் வாழ வழி வகுக்கும் எனவும் நம்புகின்றன. எது எப்படி இருந்தாலும் வருங்காலத்தில் ரோபட்டுகள் நமது அன்றாட வாழ்க்கைக்கு ஒரு முக்கிய நபராக அங்கம் வகிக்கப் போகிறது. 1980_ம் ஆண்டு கணினிகள் எவ்வாறு நம் வீட்டிற்குள் நுழைந்தனவோ அதே போல் ரோபட்டுகள் வரும் பத்தாண்டுகளில் தொழிற்சாலை, ஆராய்ச்சி பணிகள் போன்ற எல்லைகளை கடந்து நம் வீட்டின் ஒரு அங்கமாக விளங்கப்போகிறது.
தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.Thanks To........Chittarkottai

Sunday, June 27, 2010

பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

திரைப்படங்களில் கிராமத்து சீன். கதாநாகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான். இன்றைய நி கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.
ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...
"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூ சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
நன்றி: ராகவி - சினேகிதி - செப்டம்பர் 2009
Thanks To.........Chittarkottai

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்

செம்மொழி ஆய்வரங்கத்தில் ஜுங் நம் கிம் எனும் கொரிய ஆராய்ச்சியாளர், கொரிய மொழியில் பயன்பட்டு வரும் 500 தமிழ் வார்த்தைகளை கண்டறிந்து 'கொரிய மற்றும் தமிழ் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்' என்ற தலைப்பில் கட்டுரையாக சமர்பித்திருக்கிறார். கொரிய மொழியில் உள்ள தமிழ் வார்த்தைகளை கண்டறிந்தது குறித்து கூறியதாவது:-
கனடாவில் கொரிய மொழி ஆசிரியராக பணியாற்றி வரும் நான், ஆறு ஆண்டுகளுக்கு முன் டொரோண்டோ நகரில் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தேன். அவர்கள் பேசிய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு கொரிய மொழி போல இருப்பதைக் கேட்டு வியந்தேன். அவர்களிடம் விசாரித்தபோது, இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அப்போதுதான் இரு மொழி வார்த்தைகளுகிடையே உள்ள ஒற்றுமைகளை உணர்ந்தேன்.
அதை தொடர்ந்து தமிழ் மொழியை கற்க ஆரம்பித்தேன். மேலும், இரு மொழி வார்த்தைகளுக்குமிடையே உள்ள உச்சரிப்பு ஒற்றுமை குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினேன்.
அப்போது கொரிய மொழியில் சுமார் 500 தமிழ் வார்த்தைகள் இருப்பதை கண்டறிந்தேன். ஒரே உச்சரிப்பு மற்றும் ஒரே அர்த்தத்தை உடையவையாக அந்த வார்த்தைகள் இருந்தன. அப்பாவை 'அபா' என்றும் வணக்கம் என்பதை 'வணக்காம்தா' என்று பாம்பு என்பதை 'பாயெம்' என்றும் சந்தோசம் என்பதை 'சந்துதம்' என்றும் ஏன் என்பதற்கு 'வேன்' என்றும் மனைவி என்பதை 'மனுரா' என்றும் கொரிய மொழியில் அழைக்கின்றனர்.
உரத்துக்கு 'உரம்' என்றும், கண்ணுக்கு 'நுகண்' என்றும், மூக்குக்கு 'கோ' என்றும், பல்லுக்கு 'இப்பல்', புல்லுக்கு 'புல்', கொஞ்சம் என்பதற்கு 'சொங்கும்' என கூறுகின்றனர்.
இதுபோல, உடலியல் செய்கைகளும் இரு மொழிகளுக்கிடையே ஒற்றுமையாக உள்ளன. குழந்தைகளின் தலையை ஆட்டியபடி 'தோரி தோரி' என கூறுவதும் கைகளை தட்டிக் கொண்டு விளையாடுவதும் 'சா சா க்குங்' என குழந்தைகளை கொஞ்சுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. கொஞ்சுதல் என்ற வார்த்தை கூட 'கொஞ்சு' என்றே கொரிய மொழியில் உள்ளது.
வீட்டில் புதிதாக குழந்தை பிறந்தால், மாவிலைத் தோரணத்தால் அலங்காரம் செய்வது தமிழக பண்பாடு. நோய் கிருமிகளை அண்டாமல் தடுக்கும் சக்தியாக மாவிலை கருதப்படுகிறது. இதுபோல, கொரியாவில் ஆண் குழந்தை பிறந்தால் சிவப்பு மிளகாய் தோரணமும், பெண் குழந்தை பிறந்தால் விறகு கரி தோரணமும் தொங்கவிடுவது வழக்கம். கெட்ட ஆவிகளை தடுக்கும் சக்தியாக அவை கருதப்படுகின்றன.
கிருஸ்து பிறப்பதற்கு முன்னால், ரோமாபுரி பேரரசு மற்றும் தெற்கு சீனாவுக்கு தமிழர்கள் வந்திருக்க கூடும். ஏனெனில், தென்னிந்தியா மற்றும் இலங்கை போன்ற பகுதிகள் அப்போதைய வர்த்தக மையங்களாக விளங்கின. மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான பாலமாகவும் அவை விளங்கின.
எனவே, கிழக்கு மார்க்கமாக தெற்கு சீனா, கொரிய தீபகற்பம், ஜப்பானிய தீவுகள் போன்ற நாடுகளுக்கு தமிழர்கள் வந்துள்ளனர். கி.பி.முதலாம் நூற்றாண்டு வரையிலும் கொரியாவுக்கு திராவிட இனத்துக்கும் (குறிப்பாக தமிழர்கள்) இடையே தொடர்பு இருந்துள்ளது.
வெப்பமான சூழ்நிலை காரணமாக, வெள்ளை நிற ஆடை அணிவதை தமிழர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், குளிர் சூழ்நிலை இருந்த போதிலும் கொரிய மக்களும் வெள்ளை நிற ஆடைகள் அணிவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
இவ்வாறு ஜூங் நம் கிம் தெரிவித்துள்ளார்.   
Thanks To......Ularuvaayan

டெங்குக் காய்ச்சலில் 113 பேர் பலி

இலங்கையில் பரவலாக சகல பகுதிகளிலும் பரவிவரும் டெங்குக் காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் 113 பேர் பலியாகியுள்ளதாகவும், இக்காய்ச்சல் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,411 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலேயே இந்நோய்த் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு மட்டும் 2354 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக கம்பஹாவில் 2219 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் 2181 பேருக்கும் இக்காய்ச்சல் வந்துள்ளது. மன்னாரில் கடந்த வாரம் மட்டும் 45 பேருக்கு இக்காய்ச்சல் பீடித்துள்ளது. ஆனால் அங்கு இதுவரை இறப்பு எதுவும் நிகவில்லை என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதத்தில் நாட்டில் பல பாகங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஜூன் மாதத்தில் டெங்கின் தாக்கம் 1943 பேருக்கு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஜனவரியில் 4672 ஆக இருந்த இந்த எண்ணிக்கை மே மாதம் வரை குறைந்துசென்று 1888 ஐ அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரத்தினபுரியில் 1253 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1048 பேருக்கும் இக்காய்ச்சல் பீடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Thanks To.......Athirvu 

55 மாடிக் கட்டிடத்திற்கு மேல் குளத்துடன் கூடிய சொகுசு ஹோட்டல்



உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
Read More

பறக்கும் கார்


பறக்கும் கார் 2011 இல் அறிமுகம்

வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.
ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.
இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.
வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள்  பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Thanks To......Uthayan

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?
முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.
மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.
இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?
இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.
அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.
அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.
அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.
இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.
அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.
என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.
Thanks To............Uthayan

கூகுள் உட்பட 9 இணையங்களுக்கு பாக். நீதிமன்றம் தடை உத்தரவு

http://www.virakesari.lk/news/admin/images/google_logo..jpg

  கூகுள், ஹொட்மெயில், யாஹூ உள்ளிட்ட 9 இணையதளங்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
லாகூர் உயர்நீதிமன்றத்தின் பகவல்பூர் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், கூகுள், யாஹு, எம்.எஸ்.என், ஹொட்மெயில், யூடியூப், பிங், அமேசான் உள்ளிட்ட 9 இணையதளங்களும் மத விரோத , மத துவேஷ செய்திகளை வெளியிட்டுள்ளதால் இவற்றை தடை செய்ய பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முகம்மது சித்தீக் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த இணையத்தளங்கள் மீது வழக்கு ஏதேனும் தொடரப்படுமா என்பது குறித்து பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.
Thanks To....Veerakesari

Saturday, June 26, 2010

கிவி பழம் சாப்பிட்டால் உடல்நலம் உறுதி

பழத்தின் சுவை புளிப்போ, துவர்ப்போ… உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ… அதில்லை சங்கதி. ‘கிவி  ப்ரூட்’ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் கிவி. இதை நம்மூரில் கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். தமிழில் அதன் பெயர் பசலிப்பழம்.
அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக லேட்டஸ்ட் ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் கூறியதாவது:
கிவி ப்ரூட்டில் ஏராளமான மினரல்கள், விட்டமின்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழமான அதில் விட்டமின் ஏ, சி, இ அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட பலவற்றில் இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.
விட்டமின் சி&யின் பணிகளை விட்டமின் இ அதிகரிக்கும். இந்த இரண்டும் கிவி ப்ரூட்டில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.
கிவி ப்ரூட்டில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி ப்ரூட்டை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.
Thanks To........Meenakam

முக பாவங்களைக்காட்டும் மனித இயந்திரம்

மனிதர்களைப் போல எல்லா வேலைகளையும் செய்யும் மனித எந்திரங்களைக்கண்டுபிடிப்பதில் ஜப்பான் விஞ்ஞானிகள் மிகுந்த புத்திசாலிகள்.
அவர்களுக்கு இணையாக இப்போது பிரிட்டிஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் ரோபோக்களைத் தயாரிப்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஏற்கனவே பல்வேறு விதமான ரோபோக்களை(மனித எந்திரங்களை) கண்டுபிடித்துள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், தற்போது ,மனிதர்களைப்போல முகபாவங்களைக் காட்டும் புதிய ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்ருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள பிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இந்தப் புதிய ரோபோவைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு ஜுலஸ்' என்றும் பெயர் வைத்திருக்கிறார்ள். இந்த ரோபோவின் தலை, மனிதனின் தலையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மனிதர்களைப் போலவே முகபாவங்களைக் காட்டும். அதேபோன்று உதடுகளையும் மனிதரைப் போலவே அசைக்கும்.
றப்பர் தோல்களைப் பயன்படுத்தி மனிதத் தலைகளைப் போல தேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி டேவிட் ஹேன்சன் என்பவரும் இந்த ரோபோ வடிவமைப்புக்காக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு உதவிசெய்திருக்கிறார். இந்த மனித எந்திரத்தின் தலையில் 34 மோட்டார் இயக்கிகள் உள்ளன. இந்த மோட்டார் இயக்கிகளைப் பயன் படுத்தித்தான் இந்த ரோபோ தனது முகத்தில் மனிதர்களைப் போன்ற பாவங்களைக் காட்டுகிறது.
மனிதர்களின் முக அசைவுகளை வீடியோ படமெடுத்து அதை அடிப்படையாக வைத்துத்தான், இந்த ரோபோவின் றப்பர் முகத்தில் எப்படி அசைவுகளை ஏற்படுத்துவது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற மோட்டார்களை ரோபோவின் தலையில் பொருத்தியிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். இதற்காக இவர்கள் தங்களது சொந்த மென்பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த மென்பொருள் வாயிலாகத்தான் இந்த ரோபோ தனது முகபாவங்களைக் காட்டுகிறது. அதாவது வீடியோ கமெராவில் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டுள்ள அசைவுகளை வைத்து இந்த ரோபோ பிரதி பலிக்கிறது. கேலிச்சித்திர வடிவமைப்பாளர் ஒருவரின் உதவியையும் இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மனித முக பாவங்களுக்கும் இந்த ரோபோ முக பாவங்களுக்கும் எந்த வேறு பாடும் இல்லாத அளவுக்கு இது செயற்படுகிறது.
நெற்றியை உயர்த்தும், புருவங்களை மேலே உயர்த்தும், சிரிப்பு அசைவுகளைக் காட்டும், கோபத்தை வெளிப்படுத்தும். என்றாலும் உண்மையான மனித முகத்தில் உள்ள சதை அசைவுகளை அவ்வளவு துல்லியமாகக் காட்ட முடியாது. அதற்கு இன்னும் கொஞ்சம் கலைநுணுக்கம் இந்த ரோபோவின் முகத்தில் தேவைப்படுகிறது.
ஆனாலும் பரவாயில்லை. மனிதர்களைப் போலவே முகபாவங்களை காட்டுகிறது என்பதில் மட்டும் நாம் திருப்தி அடையலாம்.
மொத்தத்தில், இது கொப்பி அடிக்கப்பட்டு செயற்படும் ரோபோவாகத்தான் இருக்கும். இந்த ரோபோ வினாடிக்கு 25 முகபாவங்களை வேகமாகக் காட்டும்.
மனித முக பாவங்களைக் காட்டும் ரோபோக்கள் வந்துவிட்டதைப்போல, மனிதர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் செய்யும் ரோபோக்கள் விரைவில் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
Thanks To...........Marikumar

நாய் மாளிகை



கலிபோர்னியாவில் நாய்க்காக மாளிகை கட்டிய எஜமானி

செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்கள் சிலவற்றிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத சொகுசு வாழ்க்கை மற்றும் வசதிகள் அதன் எஜமானர்களால் வழங்கப்படுவதுண்டு. இந்த வகையில் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தன்னுடைய நாய்க்காக ஒரு மாட மாளிகையில் ஒரு தோட்டம் போன்றவையும் அமைந்துள்ளது.

டாமி காஸி எனும் அந்த கோடீஸ்வர பெண்மணி தன்னுடைய நாய்கள்தான் தனக்கு உயிர் என்று கூறியிருக்கிறார்.

எனவே அவற்றிற்காக சகல வசதி கொண்ட மாளிகையை உருவாக்கி தந்து இருப்பதாக கூறியுள்ளார்.
Thanks To.......Thamilworld

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்

இயற்கையிலநமமுன்னோரசமையலிலபயன்படுத்திபொருட்களிலமருத்துகுணங்களநிறைந்திருப்பது, பின்னாளிலநடத்தப்பட்ஆய்விலதெரிவந்துள்ளது.
அந்வகையிலசமையலிலஅன்றாடமநாமபயன்படுத்துமமஞ்சளதூளினமருத்துகுணங்களசிலவற்றஇதிலபார்ப்போம். பொதுவாமஞ்சளநிறமஏற்படவும், உணவுபபதார்த்தங்களகலராஇருப்பதற்குமமஞ்சளபயன்படுத்தப்படுவதாபலருமஅறிவோம். ஆனால், அவற்றினசெயல்பாடமிகவுமஆச்சரியப்பவைக்கும்.
மசாலாவில் மஞ்சள் நிறத்தைக் கொண்டுவருவதற்கு மஞ்சள் தூள் பயன்படுத்தப்படுகிறது.
`அல்ஜைமர்' நோய் உடையவர்களுக்கு மூளையில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதில் மஞ்சள் தூள் பெரும் பங்காற்றுகிறது. மஞ்சள் தூளில் இருக்கும் குர்குமின் (curcumin) என்ற பொருள் இதற்கு உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவத்தில் வெகுகாலமாக பயன்படுத்தப்படும் மஞ்சள்தூளானது புற்றுநோய்க்கும், மல்டிபிள் செலெரோஸிஸ், சிஸ்டிக் பைபரோஸிஸ் போன்ற வியாதிகளுக்கும் அருமருந்தாக செயலாற்றி வருகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின், ஒரு ஆன்டி-ஆக்ஸிடெண்டும், ஆன்டி இன்ஃப்ளமேட்டரி எனப்படும் எரிச்சல் குறைக்கும் மருந்தும் ஆகும். இது மூளையில் அமைலோய்ட் சேர்வதினால் உருவாகும் எரிச்சலையும், அதனால் உருவாகும் செல் உடைவுகளை சரிப்படுத்தவும் செய்கிறது.
முடக்குவாதம் (arthritis), இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதையும் குர்குமின் தடுக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நன்றி,பதிவு

மூளை சொல்படி நகரும் சக்கரநாற்காலி

ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது. இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை.  மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.
மூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கரநாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.
தற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கரநாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளைஅதிர்வுகளை  ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய  எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமதுமூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள்மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கரநாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது. 
நன்றி,தமிழ் CNN

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வடிவம் அறிமுகம்

---ஆப்பிள் நிறுவனம் தனது வெற்றிகரமான ஐபோனின் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்" புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் 40 சதவீத வருவாய் ஐபோன் விற்பனை மூலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. "ஐபோன்"கள் 2007ல் சந்தைக்கு வந்தன. இதுவரை 5 கோடி போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது மேலும் பல புதிய அம்சங்களுடன் அதன் மேம்படுத்தப்பட்ட "ஐபோன்-4" மாடல் சந்தைக்கு வந்துள்ளது.
ஐபோன்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மொபைல்போன் சகல வசதிகளையும் கொண்டதாகத் திகழ்கிறது. OS 4 எனும் இயங்குதளத்தில் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்ட இந்த புதிய செல்போனில், Video Calling, Retina high-resolution display, 5 மெகா பிக்ஸல் கேமரா, லெட் ஃப்ளாஷ், உச்ச திறன் கொண்ட வீடியோ பதிவு வசதி, வை-ஃபி என ஏராளமான வசதிகளை உள்ளடக்கியது இந்த புதிய செல்போன்.
முந்தைய ஐபோனை விட தற்போதைய "ஐபோன்-4" மெலிதாகவும் சிறியதாகவும் உள்ளது. இதில், தொடர்ச்சியாக 7 மணி நேரம் பேசவும், 10 மணி நேரம் இணையதளத்தை பயன்படுத்தவும் முடியும்.
ஜூன் 24 முதல் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனை செய்ய உள்ளது. ஜூன் 15 முதல் இந்த ஐபோன்-4 க்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கெனவே ஐபோன் வைத்திருப்பவர்கள், புதிய சாஃப்ட்வேர்களை ஐ ட்யூன் தளத்தில் வரும் ஜூன் 21 முதல் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்..
சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா உள்பட 21 நாடுகளில் ஜூலையில் விற்பனைக்கு வருகிறது ஐபோன். இந்தியா உள்ளிட்ட 88 நாடுகளில் வரும் செப்டம்பரில்தான் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கும்..

ஸ்ரீரங்கன் அச்சுதன்.

கால்களே கைகளாக.......????

ஜோர்தானின் அம்மான் நகரில் வசிக்கும் இரு கைகளுமற்ற அலி ஸ்ரோர் (Ali Srour) என்ற சிறுவன், தனது கால்களைப் பயன்படுத்தி அன்றாட கடமைகளை நிறைவேற்றி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றான்.


அவன் தனது கால்களைப் பயன்படுத்தி உணவை உண்பதுடன் கணினி விளையாட்டுக்களையும் திறம்பட விளையாடி வருகின்றான்.

அலி ஸ்ரோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவனது குறைபாட்டுக்கு காரணம் தெரியாது குழப்பமடைந்து உள்ளனர். மரபணு மற்றும் பாரம்பரிய காரணங்களாலேயே அவனுக்கு மேற்படி குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.










Thanks To.....Marikumar

Friday, June 25, 2010

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு `ஐந்து'

`லைப் ஸ்டைல்' மாற்றத்தால் இன்று பலரும் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் பல வியாதிகள் அவர்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டி விடுகின்றன. அதில் ஒன்றுதான் சிறுநீரக சம்பந்தப்பட்ட பிரச்சினை.
சில விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி வந்தாலே அந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.
அவர்கள் கூறுவது இதுதான்...
* தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* தினமும் குறைந்தபட்சம் 1/2 மணி நேரமாவது வியர்க்க விறுவிறுக்க நடந்திடுங்கள்.
* உணவில் உப்பு அதிக அளவில் சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.
* முதுமையான வயதில் உணவில் கூடுதல் புரதத்தை தவிர்த்திடுங்கள்.
* சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஆகியவற்றை முறையான சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
- இவற்றை எல்லாம் நீங்கள் தவறாமல் பின்பற்றி வந்தாலே சிறுநீரகங்கள் பிரச்சினை இல்லாமல் இயங்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
 நன்றி,பொன்மாலை

உயிரை எடுக்கும் மாத்திரைகள் தடையின்றி உலா

ஜலதோஷத்தினால் ஒழுகிக் கொண்டிருக்கும் மூக்கை நிறுத்த நீங்கள் ‘டிவி’க்களின் ஒளிபரப்பாகும் விளம்பரங்களைப் பார்த்து சில மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாம். அந்த மாத்திரைகளால் ஜலதோஷத்திலிருந்து நீங்கள் உடனடியாக விடுதலை பெறுவதோடு, உங்கள் தலைவலியும் கூடப் பறந்து போகும். ஆனால், அந்த மாத்திரைகளால் உங்களுக்கு பக்கவாதநோய் வரலாம்.
 உங்கள் நம்பிக்கைக்கு உரிய குடும்ப டாக்டரின் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுகளைத் தீர்க்க நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு மினி மருந்துக்கடையை வைத்திருக்கலாம். அப்படி மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பது அவசரத்திற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட மாத்திரைகளால் சில அல்ல பெரிய தீங்குகள் ஏற்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 தலைவலிக்காக டாக்டர்கள் மட்டுமின்றி நம் வீட்டுப் பெரியவர்களான தாத்தா, பாட்டி பரிந்துரை செய்யும் மாத்திரையான ‘அனால்ஜின்’ மாத்திரையால் Bone marrow depression நோய்கள் ஏற்படலாம்.
பயணங்களின் போது உங்களின் வயிறு ஏதாவது ஏடாகூடம் ஆகி நடுவழியில் தொந்தரவு கொடுக்காமல் தடுக்க Quiniodochior என்ற மாத்திரையை உங்கள் டாக்டர் பரிந்துரை செய்யலாம். அந்த மாத்திரையால் உங்கள் கண் பார்வை பறிபோகலாம்.
Nimesulide வயிற்றுப்போக்கை சரி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மாத்திரையில் உள்ள ஆசிட் இருதயத் துடிப்பின் சீர்குலைவுக்கும் காரணமாகலாம்.
பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மாத்திரைகளை நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளும்படி டாக்டர்களும், மருந்துக் கடைக்காரர்களும் பரிந்துரை செய்தால் அதற்காக யாரும் இந்த மாத்திரைகளை வாங்க முடியாது. ஏனெனில், ஜலதோஷம், இருமலுக்காக கொடுக்கப்படும் இந்த மாத்திரைகளால் பக்கவாதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதனால் அனைத்து வடஅமெரிக்க நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது தயாரிப்பது கைவிடப்பட்டுள்ளது.
யேல் பல்கலை., மருத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், 702 நோயாளிகளிடம் மேற்கொண்ட ஐந்து ஆண்டு ஆய்வில், ‘பிபிஏ’ வினால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு சிறிய அளவிலான உடல் நலக் குறைவு ஏற்பட்ட பின்னரே, அதற்கான அறிகுறிகள் ஏற்பட்ட பின்னரே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ‘பிபிஏ’ வினால் ஏற்படுவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் ஒருவரை விரைவில் பாதிக்கவும், கிளகோமா Prostaste enlargementக்கும் இது காரணமாக அமைகிறது.
இந்த மாத்திரையால் ஏற்படும் தீங்கு காரணமாக, இவற்றை தங்கள் நாட்டில் தடை செய்யத் தவறியதற்காக கொரிய உணவு மற்றும் மாத்திரைகள் நிர்வாக ஆணையர் ஷிம் சாங்-கூ சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
குழந்தைகள் நல நிபுணரும், இந்திய குழந்தைகள் நல அகடமியின் தலைவருமான டாக்டர் டி.எஸ்.ஜெயின் கூறியதாவது:
சில மருந்துகளை, மாத்திரைகளை டாக்டர்கள் மட்டுமே பரிந்துரை செய்யமுடியும். ஆனால், அதே மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தகவல் தொடர்பு சாதனங்களால் விளம்பரம் செய்யப்படும்போது, அந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை டாக்டர்கள் யாரும் நோயாளிகளுக்கு சொல்வதில்லை. மாத்திரைகள் பற்றி விளம்பரம் செய்யும் நிறுவனங்களும் சொல்வதில்லை. அதுபோன்ற மாத்திரைகளால் நோயாளிகளின் ரத்தஅழுத்தம் அதிகரிப்பதோடு இருதய நோய்களும் உண்டாகின்றன. சாதாரண நபர்களுக்கு இதுபோன்ற மாத்திரைகளால் பெரிய அளவில் கூட பிரச்னைகள் ஏற்படலாம்.
மிகவும் நம்பிக்கையான பிரபலமான ‘அனால்ஜின்’ மாத்திரையை அனைவரும் அறிந்ததே. மிக பிரபலமான வலி நிவாரணியான இந்த மாத்திரை அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டே இந்த மாத்திரைக்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான நேபாளத்தில் கூட இந்த மாத்திரை விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு கூட இந்த மாத்திரை மற்றும் மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா 1995ம் ஆண்டில் தடை விதித்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் Bone marrow depression உருவாக்கும் இந்த மாத்திரையை இன்னும் வலி நிவாரணியாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் தடை செய்யப்பட்டு இன்னும் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மற்றொரு மாத்திரை cisapirde. இந்த மாத்திரையை சாப்பிடு வதால் முறையற்ற, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டு பலர் மரணம் அடைய நேரிடும். 1998ம் ஆண்டிலேயே இந்த மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு தடைவிதித்துள்ளது.
இதயத் துடிப்பு சீராக இல்லாத 341 பேரிடம் விசாரித்ததில் அவர்கள் சிசாபிரைடு மாத்திரை யை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இவர்களில் 80 பேர் 1999ம் ஆண்டு டிசம்பர் 31ல் மரணம் அடைந்தனர். இதனால், இந்த மாத்திரையை ஸ்பெசலிஸ்ட்கள் மட்டுமே பரிந்துரைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த மாத்திரை 28 இதர மாத்திரை மற்றும் மருந்து களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்படக் கூடியது. அதனால், இதயத்துடிப்பு சீராக இல்லாத நோயாளிகள் இருதய நோய் உள்ளவர்கள், இ.ஜி.ஜி., சரியாக இல்லாதவர்கள், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், நுரையீரல் நோய் உள்ள வர்கள், ரத்தத்தில் குறைந்த அளவு கால்சியம், பொட்டாசியம் அல்லது மெக்னீசியம் கொண்டிருப்பவர்கள் இந்த மாத்திரை வாங்கி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் இந்த மாத்திரை உற்பத்தியை 2000ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி முதல் நிறுத்தியுள்ளனர்.
ஏற்றுக்கொள்ள முடியாத பல பக்க விளைவுகள் ஏற்படுவதால் சிசாபிரைடு உற்பத்தியை பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் நிறுவனம் 2000ம் ஆண்டு ஆகஸ்டில் தடை செய்தது. இந்த மாத்திரை சாப்பிட்டவர்களால் 60 சதவீதம் பேருக்கு இருதய சம்பந்தமான நோய்கள் உருவாகியதே இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் உள்ள டாக்டர்கள் இந்த மாத்திரையை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கின்றனர். இ.ஜி.ஜி., ரத்தப் பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் பரிந்துரை செய்கின்றனர். தகுதி வாய்ந்த கேஸ்ட்ரோ என்டரோலா ஜிஸ்ட்கள் மட்டுமே இந்த மாத்திரையை பரிந் துரை செய்யவேண்டும் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எந்த வகையிலும் இந்த மாத்திரை விற்பனையை அதிகரிப்பதில் உற்பத்தியாளர்கள் ஈடுபடக்கூடாது என்றும் கூறியுள்ளது. அதை பெரும்பாலான டாக்டர்கள் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. சிசாபிரைடு எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியது என்பதையும் பெரும்பாலான நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் நம்ப மறுக்கின்றனர்.
நன்றி,தமிழ் CNN

நவீன செல்போன்-மௌன மொழியில் பேசலாம்.

பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது.
முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.
இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளமுடியும்.                                                                                                                                                   நன்றி,பதுர்தீன் தஸ்லீம்.இப்படியும் ஒன்று.



Thursday, June 24, 2010

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.
சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.
Thanks To.......Marikumar

மொபைல் டேட்டா அழிந்து போனால்!

இன்றைய உலகில் மொபைல் போன் பல்வேறு பணிகளுக்கான ஒற்றைச் சாதனமாக செயல்படுகிறது.போன், பாடல், வீடியோ, போட்டோ, இன்டர்நெட், இமெயில், இணைய பயன்பாடு, இடம் அறிதல், வழி நடத்தல், வங்கிக் கணக்குகளைக் கையாளுதல், மெசேஜ்கள், காண்டாக்ட்ஸ், மீடியா தகவல்கள் என இதன் மூலம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட நிலையில், ஒரு மொபைல் போனில் உள்ள தகவல்கள் அழிந்து போனால், போன் தொலைந்து போனால், மீண்டும் பார்மட் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் என்னவாகும்? நம் அன்றாட வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும் அல்லவா?
சில போன்களில் பி.சி. சூட் என்ற சாப்ட்வேர் தரப்பட்டு, அதன் மூலம் நம் தகவல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்றிப் பின் மீண்டும் பெற்று பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் கிடைப்பதில்லை.
இதே போல ஆன்லைனில் சேமித்து வைக்கக் கூடிய வசதி ஒன்றினை ஓர் இணைய தளம் தருகிறது. இந்த சேவையின் பெயர் rSeven. இதனை என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, மொபைல் போனில் பதியவும்.
இந்த சாப்ட்வேர் வசதியும் சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ள மொபைல்களில் மட்டுமே செயல்படுகிறது. விண்டோஸ் மொபைல் பதிப்பு 6 மற்றும் அடுத்து வந்தவை, சிம்பியன் எஸ்60, மூன்றாவது மற்றும் ஐந்தாவது எடிஷன் ஆகியவற்றில் மட்டுமே இது செயல்படுகிறது.
இதனைப் பதிந்தவுடன் மிக எளிதாக, மொபைல் போனில் உள்ள அனைத்து டேட்டாவினையும், இந்த தளத்தில் பதிந்து வைத்து, இவை தொலைந்து போகும் காலத்தில் மீண்டும் பெற்றுப் பயன்படுத்தலாம்.
Thanks To.....www.z9tech.com

உலகின் மிகப் பெரிய சூரிய கல படகு

உலகிப் மிகப் பெரிய சூரியகல படகு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகு 30 மீற்றர் நீளமும் 15 மீற்றர் அகலமும் கொண்டது எனவும் எதிர்வரும் 2011ம் ஆண்டு குறித்த படகு உலகை வலம் வர உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 ஜெர்மனியின் கெயிலில் குறித்த படகு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 மீள் சுழற்சி சக்தி வளப்பயன்பாடு தொடர்பில் சுவிட்சர்லாந்து காட்டி வரும் அக்கறை இந்த படகு அறிமுகம் மூலம் புலனாவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் 300000 சுவிஸ் பிராங்குகளை உதவியாக வழங்கியுள்ளது.
 கடந்த 2004ம் ஆண்டு முதல் படகு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thanks To.....www.coolswiss.com

வருகிறது ஐ போன் 4

அதோ இதோ என்று சொல்லப்பட்ட ஐ போன் 4 அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனமே ஐபோனையும் அது குறித்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டனில் இந்த போன் ஜூன் 24 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அடுத்து ஜூலை மாதத்தில் மேலும் 18 நாடுகளில் வெளியிடப்படும். மேல் நாடுகளில், வெளியான பின், இந்தியாவிலும் விற்பனைக்கு இது செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த போனின் சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.
1.வடிவம்:
புதியதாக, முழு சதுரமாக, கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் இதன் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. வால்யூம் கீகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. முந்தைய போனைக் காட்டிலும் 28% ஸ்லிம்மாக உள்ளது. 9.33 மிமீ தடிமன் உள்ளது. இப்போது உள்ள மொபைல் போன்களில், இதுவே மிகக் குறைந்த தடிமன் உடையாதாக இருக்கிறது.
போனைச் சுற்றிச் செல்லும் ஸ்டீல் வளையம், ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதுவித உலோகமாகும். இது போனுக்கான ஆன்டென்னாவாகவும் இயங்குகிறது. இரண்டாவதாக ஒரு மைக் இணைக்கப்பட்டு, ஒலியின் தேவைற்ற இரைச்சலை நீக்குகிறது. இதன் டூயல் ஸ்பீக்கர்கள் கீழாக அமைக்கப்பட்டுள்ளன. எடை 137 கிராம்.
2. மைக்ரோசிம்:
இந்த போனில் வழக்கமான சிம் கார்டுக்குப் பதிலாக மைக்ரோ சிம்மினைப் பயன்படுத்தலாம்.
3.டிஸ்பிளே:
ஐபோன் 4–ன் திரை அதே 3.5 அங்குல அகலம் கொண்டுள்ளது. ரெசல்யூசன் 640 x 960 ஆக 320 x 480 லிருந்து உயர்த்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் திரையில் அதிக பட்சம் காணப்படும் ரெசல்யூசன் இதுவாகத்தான் இருக்கும். எல்.இ.டி. பேக் லைட்டுடன் கூடிய எல்.சி.டி. திரையாக இது உள்ளது. இந்த திரையை‘Retina Display’ என அழைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பம் ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல்களைத் தருகிறது. இந்த திரை மேற்புறம் அலுமினோ சிலிகேட் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், இதில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாது. இதை ரீசைக்கிள் செய்திட முடியும் என்பதால், அடுத்து ஐபோன் 5 வரும்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
4. கேமரா:
இதன் கேமரா நேரடியாக 8 எம்.பி.க்கு உயரும் என்று எதிர்பார்த்த வேளையில், 5 மெகா பிக்ஸெல் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ஒரு எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இதனை வீடீயோ ரெகார்டிங் போது பயன்படுத்தலாம். வீடியோ ரெகார்டிங் நொடிக்கு 30 பிரேம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டச் போகஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் மற்றும் ஜியோ டேக்கிங் ஆகியவை கிடைக்கின்றன. போன் முன் பக்கம் உள்ள இன்னொரு கேமரா, வீடியோ சேட்டிங் செய்திட மிகவும் உதவுகிறது. பேஸ் டைம் என்னும் வசதி மூலம் கேமராக்களுக்கிடையே மாறிக் கொள்ளலாம்.
5.சிப்:
ஆப்பிள் ஏ4 சிப் ஒரு கிஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படுகிறது. இதே சிப் ஐ பேடிலும் பயன்படுத்தப்படுகிறது. மல்ட்டி டாஸ்க் மற்றும் கேம்ஸ் இயக்கங்கள் இதன் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றன. HSDPA/HSUPA, WiFi 802.11 b/g/n என நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது.
6. கூடுதல் உதிரி வசதிகள்:
பார்வை வசதி குறைந்தவர்களுக்கென ஸ்கிரீன் ரீடிங் என்னும் புதிய நுட்பம் தரப்பட்டுள்ளது. இது போனில் ஏற்படுத்தப்படும் அசைவுகள் மற்றும் தொடுதல் மூலம் இயங்குகிறது. கீ போர்டில் தொடப்படும் எழுத்துக்களை வாய்ஸ் மூலம் தருகிறது. இதன் உள்ளே உள்ள 21 மொழிகளில் இதனை இயக்கலாம். வீடியோ சேட் வசதி இதில் புகுத்தப்பட்டுள்ளது.
இதற்கென வீடியோ சேட் எனப்படும் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை 30 புளுடூத் சாதனங்களுடன் ஒரே நேரத்தில் இணைத்து இயக்கலாம். இதில் தரப்பட்டுள்ள ஸூம் செயல்பாடு மூலம், திரையை ஐந்து பங்கு பெரிதாக்கிக் காணலாம்.
தான் அடுத்து வடிவமமைக்கும் போன்களில் மின்திறன் அதிகப்படுத்தப்படும் என ஆப்பிள் முன்பு அறிவித்திருந்தது. இதில் மின்திறன் 40% அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 3ஜி பிரவுசிங் தொடர்ந்து ஆறு மணி நேரம், வீடியோ 10 மணி நேரம், மியூசிக் 40 மணி நேரம் பயன்படுத்தலாம். ஒரு முறை ஏற்றப்பட்ட சார்ஜ் 300 மணி நேரம் தங்குகிறது.
இதன் விலை 16ஜிபிக்கு 199 டாலர்; 32 ஜிபிக்கு 299 டாலர்.
Thanks To.....www.z9tech.com

Wednesday, June 23, 2010

தாய், மகனை இணைத்தது பேஸ்புக் இணையதளம்

சமூக இணையதளமான பேஸ்புக், பொழுதை போக்குவதற்கானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகளை செய்து வருகிறது. ஆம், 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய், மகனை மீண்டும் இணைத்துள்ளது பேஸ்புக்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜோசப் வகுவெரா, லொரெனா பெரஸ் தம்பதி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2006ம் ஆண்டில் மனைவியை விட்டு பிரிந்து விட்டார் ஜோசப். உடன் மனைவியின் அனுமதியின்றி மகன் இசையா ஜெரமையா வகுவெராவையும் அழைத்துச் சென்று விட்டார். எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனது மகனை காணவில்லை என கணவர் மற்றும் மகன் போட்டோவுடன் பேஸ்புக்கில் பெரஸ் விளம்பரப்படுத்தி இருந்தார்.
இதைப் பார்த்த ஜோசப்பின் முன்னாள் காதலி, இசையா இருப்பிடம் குறித்து போலிசில் தகவல் கொடுத்தார். போலிசார் உதவியுடன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் இசையாவை பெரஸ் கண்டுபிடித்தார். ‘‘மகனை சந்தித்தபோது ஆனந்த கண்ணீர் விட்டேன். அவன் என்னை கட்டித் தழுவி, அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என்றான்’’ என பெரஸ் தெரிவித்தார்.தாயையும் மகனையும் சேர்த்து வைப்பதற்கு உதவிய ஹாரிஸ் பகுதி மாவட்ட வழக்கறிஞர், கூறுகையில், ‘‘தம்பதிக்குள் ஏற்படும் பிரச்னையில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிரிக்கக்கூடாது’’ என்றார்.
Thanks To.......www.z9world.com