Thursday, June 30, 2011

பேஸ் புக் பார்வையாளர்களே ! பேரதிர்ச்சிச் செய்தி.

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.
ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.
எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான்.
புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

Potato Roses










கைத்தொலைபேசி, தொலைக்காட்சியா? - கர்ப்பிணிகள் எச்சரிக்கை!

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவது, தொலைக்காட்ச்சி அதிகமாக பார்ப்பதனால்,  அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது: மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது,  , தொலைக்காட்ச்சி அதிகமாக பார்த்த்துதான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகாகூறினார்.