Sunday, July 25, 2010

டைனோசரை ஒத்த உயிரினத்தின் எலும்புகள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு!

மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எலும்புகள், முன்னர் டைனோசர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினத்தின் காலத்திற்கும் சுமார் 10 மில்லியன் வருடங்களுக்கு முந்தியது எனக் கருதப்படுகின்றது.
தன்சானியாவில் உள்ள இடமொன்றிலிருந்து இந்த புதைபடிவ எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உயிரினம் இருநூற்று நாற்பது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
டைனோசர் பரம்பரையின் ஆரம்பக்கட்டங்கள் குறித்து மீள ஆய்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தப் புதிய கண்டுபடிப்புகள் தம்மை தள்ளியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் நகரங்கள் நகர்வு.

சிலி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி சிலி நாட்டின் மேற்கு கடற்கரையில் 8.8 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.
பூகம்பத்தினால் வீடுகளை இழந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பிரேசில், போர்டலேசா போன்ற நாடுகளில் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பூகம்பத்தால் சிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து 4 பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், புவியியல் வல்லுனர்கள் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில், சிலி நாட்டில் உள்ள நகரங்கள் மேற்கு நோக்கி 10 அடி தூரம் நகர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. தலைநகரான சாண்டியாகோ 11 அங்குலம் அளவுக்கு விலகி நகர்ந்துள்ளது.
வல்பாறைசோ, மென்டோஷா, ஆர்ஜென்டினா போன்ற நகரங்களும் வழக்கத்தை விட நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Thanks To.......Virakesari.

ஆப்பிள் நிறுவன 'ஐபேட்' கம்பியூட்டர் விற்பனையில் சாதனை.

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்பியூட்டரான ஐபேட் விற்பனைக்கு வந்தது. 2 மாதங்களில் 2 மில்லியன் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது.
இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.
ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் தயாரித்த ஐபாட்(i Pod),ஐபோன் (i Phone) முதல் 2 மாதங்களில் முறையே 125,000,820,000 விற்பனையானது என்கிறார் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

7 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்பியது ஜப்பான் விண்கலம்!

  பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் 15 /6 /2010 அன்றைய தினம் பூமிக்கு திரும்பியுள்ளது.
பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்தக் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது.
இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர்.
எனவேதான், அக்கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்து எடுத்துவர ஹயபுசா விண்கலத்தை அவர்கள் அனுப்பினர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்குத் திரும்பியது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள்( கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது.
பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் அரட்டை அடிக்க…

உலகின் மிக பெரிய சோசியல் நெட்வொர்க் பேஸ் புக். இதில் தன்னை இணைத்து கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன் பாடு அதிகரித்து வருகிறது. இதில் நீங்கள் மற்றவரிடம் அரட்டை அடிக்க விருபினால் chat window வை உபயோகிப்பீர்கள். அதில் தட்டச்சி மட்டும் செய்யாமல், அரட்டை அடிக்கும் போது உபயோகிக்க படும் சில சிறப்பான தட்டச்சி அம்சங்கள் உங்களுக்காக. இதை நான் ஒரு இணையத்தளத்தில் பார்தேன்.
உங்கள் வார்தையை தடிப்பாக( Bold ) தட்டச்சு செய்ய. தடிப்பாக காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( * ) சிம்பலை தட்டச்சு செய்யவும், உதரணத்துக்கு:
*I love U* என்று தட்டச்சு செய்தால் I love U என்று தடிப்பாக வரும்
உங்கள் வார்தைக்கு கீழ் அடிக்கோடு இடு ( underline ) தட்டச்சு செய்ய.
அடிக்கோடு இடு காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( _ ) அடிக் கோடு சிம்பலை தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:
_I love U_ என்று தட்டச்சி செய்தால் I love U என்று அடிக் கோடும் வரும்
உங்கள் வார்தையை தடிப்பாகவும், அடிக்கோடு இடும் சேர்ந்து தட்டச்சி செய்ய. வார்த்தைக்கு முன்னும் (*_ ) சிம்பலை சேர்த்து மற்றும் வார்த்தைக்கு பின்பு (*_ ) சிம்பலை சேர்த்து தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:
*_I love U_* என்று தட்டச்சி செய்தால் I love U என்று வரும்
Smile :) or :-) or :] or =)
Frown :( or :-( or :[ or =(
Tongue :p or :-p or =P
Grin :D or :-D or =D
Gasp :O or :-O or :o or :-o
Wink ;) or ;-)
Glasses 8) or 8-) or B) or B-)
Sunglasses 8| or 8-| or B| or B-|
Grumpy >:( or >:-(
Unsure :/ or :-/ or :\ or :-\
Cry :'(
Devil 3:) or 3:-)
Angel O:) or O:-)
Kiss :* or :-*
Heart <3
Kiki ^_^
Squint -_-
Confused O.o or o.O
Upset >:O or >:-O or >:o or >:-o
Pacman :v
Colon Three :3
Robot * :| ]
Putnam * :putnam:
Shark * (^^^)
Penguin * (Added 17 Sept 09) <(“)
இதை பயன்படுத்தி அரட்டை அடித்து மகிழுங்கள்.
Thanks To.......Kokkarako.

இந்தியா புரட்சி - 35 டொலரில் ஒரு கணினி.

  அனைவருக்கும் கணினி எனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகின் மிகவும் மலிவான கணினியைத் தாம் தயாரித்து வருவதாக இந்திய ஊடகத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.
இதன் விலை வெறும் 35 டொலர் மட்டுமே எனவும் மாணவர் நலன் கருதி இவ்விலை 20 டொலர் முதல் 10 டொலர் வரை குறையலாமெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கணினியானது தொடு திரையுடன் கூடியதாகக் காணப்படுமெனவும் இதனுள் பல மென்பொருட்கள் மற்றும் வசதிகள் உள்ளடங்கியிருக்குமெனவும் வெப் பிரவுசர், பிடிஎப் ரீடர், மீடியா பிளேயர், வீடியோ கொன்பிரன்ஸ் மற்றும் புகைப் படமெடுக்கும் வசதி என்பன இதில் முக்கியமாக உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இக்கணினி 2011ஆம் ஆண்டளவில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் முக்கிய நோக்கம் இந்திய கல்லூரி மாணவருக்கிடையில் பாடவிதான ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதாகும்.
2,127 டொலர் நாநோ கார், 2000 டொலர் திறந்த இதய சத்திர சிகிச்சை மற்றும் 16 டொலர் நீர் சுத்தப்படுத்தும் கருவி போன்ற மலிவான இந்திய உற்பத்தி வரிசையில் இதுவும் இந்திய வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துமென அவதானிகள் கருத்து தெரிவிகின்றனர்.
ச.கவிந்தன்

விஷப் பாம்புகள் குறித்த ஐ நா வின் இணைய தளம் அறிமுகம்



உலகளவில் பாம்புக் கடியால் பலர் இறந்து வரும் நிலையில், அப்படியான இறப்புகளளை குறைக்கும் நோக்கிலும், பாம்புக் கடியின் விஷத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்டு செயற்பட முடியாத நிலையில்
இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 25 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சுமார் 2,500 பேர் இறக்கவும் நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
கடுமையான விஷம் கொண்ட பல பாம்புகள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.
ஆனால் எல்லா பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான விஷமுறிவு மருந்துகள் செயற்படாது.
இந்த மாதிரியான சிக்கலான நேரங்களில், பாம்புக் கடிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.
பல நேரங்களில் இந்த இணையதளம் உயிர்காக்கவும் உதவும்.
இந்த இணையதளத்தில் உலகிலுள்ள அனைத்து விஷப் பாம்புகள் குறித்த தகவல்களும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.
சரியான விஷமுறிவு மருந்து மரணத்தை தடுக்கும்
எந்தப் பாம்புகள் எந்த நாட்டில் இருக்கின்றன, அவை கடித்தால் என்ன வகையான விஷமுறிவு மருந்துகள் தேவைப்படும் என்பது தொடர்பான அறிவுரைகளும் அந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
எந்தப் பாம்பையும் பார்த்தவுடன் அது விஷமுடையதா என்பதை அறிவது கடினம்
பாம்புக்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக சரியான விஷமுறிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், அப்படியான கடிகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அரசுகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த இணையதளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில், தமது நாடுகளின் எந்த வகையான விஷ பாம்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு என்ன வகையான விஷமுறிவு வகைகள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டு அரசுகள் அந்த மருந்துகளை போதிய அளவில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகின் பல பாகங்களில் பாம்புக் கடியால் ஏற்படும் பிரச்சினைகள் சுகாதாரத்துறையால் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
பல நாடுகளில் தரமற்ற மற்றும் சரியான நோய் எதிர்ப்பு மருந்துகள் இல்லாது இருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அதன் செயற்திறனை நம்பாத நிலையும் உள்ளது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.
புள்ளி விபரங்கள் இல்லை
பல நாடுகளில் பாம்புக்கடிகள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.
பல்வகை விஷப் பாம்புகள்
இதன் காரணமாக தேவையான அளவுக்கு விஷமுறிவு மருந்துகளை அந்தந்த நாடுகள் திட்டமிட்டு வாங்கமுடியாத நிலை ஏற்படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பல சந்தர்ப்பங்களில் விஷமுறிவு மருந்துகளை தயாரிப்பவர்கள் அதன் விலையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் மருந்து தயாரிப்பையே அந்த நிறுவனங்கள் நிறுத்தியும் விடுகின்றன.
இந்தப் பிரச்சினைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கான விஷமுறிவு மருந்துகளின் விநியோகத்தையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாம்புக் கடியால் பெரிதும் ஆளாவது கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளும் பெண்களும் சிறார்களுமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
இப்படியான மக்களுக்கு இணைய வசதியோ, அல்லது கௌரவமான மருத்துவ வசதிகளோ, அல்லது அவர்களை காப்பாற்றும் விஷமுறிவு மருந்துகளோ கிடைக்காத நிலையுமே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.
1. ஐ நா வின் இணைய தளம்
http://apps.who.int/bloodproducts/snakeantivenoms/database/

சிகரெட் புகைத்தால் அறிவுத் திறனும் குறையும் :இஸ்ரேல் ஆய்வில் தகவல் _

சிகரெட் புகைப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிகரெட் பிடிப்பதால் உடல் நலம் மட்டுமின்றி அறிவுத்திறனும் குறையும் என புதிய ஆய்வு இப்போது தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு இஸ்ரேலில் உள்ள டெல் ஹஸ்கோமரில் உள்ள ஷெபா மருத்துவ மையத்தில் டாக்டர் மார்க் வெய்கர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கு இஸ்ரேல் இராணுவ வீரர்கள் 20, 211 பேர் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சிகரெட் பிடித்தவர்களுக்கு மற்றவர்களைவிட 7.5 புள்ளிகள் அறிவுத்திறன் குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதன் மூலமான பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், ஆய்வுக்குட்பட்ட, அறிவுத் திறன் குறைந்த இராணுவத்தினர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.