Saturday, November 5, 2011


நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு கேடு.

 
நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது.அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.
அண்மையில்  நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வட்ட மேசை மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனியாகக் கருதப்படும் பர்கர், உருளைக்கிழங்கு வறுவல், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகளை அகற்ற பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ளப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகிறது. ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய கணக்கின் படி 5 கோடிக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என்றும் இது 2025-ம் ஆண்டிற்குள் 9 கோடியைத் தாண்டி விடும் என்றும் தெரிவிக்காப்படுகிறது.