Wednesday, February 29, 2012

குங்குமப்பூ

கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் குங்குமப்பூ


கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு குங்குமப்பூ உதவும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய அரபு குடியரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அமீன் தலைமையிலான குழுவினர் கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இவர்கள் எலியைக் கொண்டு சோதனை மேற்கொண்டனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு 2 வாரங்களுக்கு தினமும் குங்குமப் பூவை வெவ்வேறு அளவுகளில் கொடுத்து வந்தனர்.

பின்னர் செயற்கையாக கல்லீரல் புற்றுநோயை உருவாக்குவதற்கான டை எத்தில் நைட்ரோசமைன்(டென்) என்ற மருந்தை செலுத்தினர். 22 வாரங்கள் கழித்து பரிசோதனை செய்ததில், அதிக அளவில் குங்குமப்பூ கொடுக்கப்பட்ட எலிகளுக்கு குறைவாக கொடுக்கப்பட்ட எலிகளைவிட புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
இதன் மூலம் குங்குமப்பூ கல்லீரல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் என உறுதி செய்தனர். உணவுப் பொருட்களுக்கு ஆரஞ்ச் வண்ணம் கொடுப்பதற்காக குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இது கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமான செல்களை அழிக்கிறது அல்லது வளர்வதைக் கட்டுப்படுத்துகிறது என அமீன் தெரிவித்தார்.
ரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.
இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும், போஷாக்கையும் தருகிறதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.
குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தை தான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

நலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

Tamil - Kungumapoo

English - Saffron
Malayalam - Kunguma Poo
Telugu - Kumkuma poova
Sanskrit - kumkuma
Botanical Name - Crocus sativus


இது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.

இரத்தம் சுத்தமடைய 

குங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.
குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு
பிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.

நன்கு பசியைத் தூண்ட
குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தி வந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.
கருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.
தரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.
ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .



குங்குமப்பூ மகத்துவம்
சிகப்பழகைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.


குங்குமப்பூவை பயன்படுத்தும் முறைகள்:-

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.
2. குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.
3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.
5. முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
6. எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.
7. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறி அசத்தலாம்.மேலும் கர்ப்பிணிகள் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டால் குழந்தை மிகவும் சிவப்பாக இருக்கும்.
 நன்றி,சகோதரர் அன்சார் .

Tuesday, February 28, 2012

2012ல் கம்ப்யூட்டரும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில், வரும் 2012ல், பல புதிய சாதனங்கள் தகவல் தொழில் நுட்ப சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான, பேசப்படும் சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இவற்றைப் பற்றி இங்கு காணலாம். 

1. விண்டோஸ் 8: 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமைகளைக் கொண்டு வரஇருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது. 

2. குரல் வழி கட்டளை: 
தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம். நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும். பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். 

இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம். இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3.குறையும் மின் அஞ்சல் பயன்பாடு:
இது பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. இனி இமெயில் புரோகிராம்கள் தேவைப்படாது. 1992 ஆண்டுக்குப் பின் ஹாட்மெயில் அல்லது இமெயில் சேவை தரத் தொடங்கிய நிறுவனங்களில், இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, அதனைப் பெருமையாகப் பேசுவது ஒரு டிஜிட்டல் ஸ்டேட்டஸ் அடையாளமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது வளர்ந்து வரும் சிறுவர்கள், இமெயில் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வது இல்லை. சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுகின்றனர். தங்கள் குழுக்களோடு பதிவுகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். 

4.தொலைக்காட்சிகளில் மாற்றம்:
தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும். 

5. டிஜிட்டல் ஸ்டோர்கள்:
இனி அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோ நாம் வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன. 

6. தடிமன் குறையும்:
டிஜிட்டல் சாதனங்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும். 

7.அனைத்திலும் டேப்ளட் பிசி:
சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதனை மற்ற சாதனங்கள் வடிவமைக்கும் நிறுவனங்களும், ரெப்ரிஜிரேட்டர் தயாரிக்கும் நிறுவனங்களும் பின்பற்றலாம். கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைப்பது இனி கார் ஒன்றின் அம்சமாகக் கருதப்படும். 

8. ஒருவரோடு ஒருவர்: 
இனி ஆன்லைன் கேம்ஸ் எல்லாம் தேவைப்படாது. ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும். எனவே வரும் ஆண்டில் டிஜிட்டல் சாதனங்களின் தடிமன் மிக மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக அமையும்.

Monday, February 27, 2012

அறியாத சில விடயங்கள் - 2

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

Sunday, February 26, 2012

அறியாத சில விடயங்கள் - 1

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

Saturday, February 25, 2012

குப்பை அள்ள ஒரு செயற்கைக்கோள்

விண்ணில் பரவிக்கிடக்கும் ரொக்கெட், செயற்கைகோள் சிதறல்கள் மற்றும் கழிவுகளை அகற்ற சுவிட்சர்லாந்து புதிய செயற்கைகோள் ஒன்றை உருவாக்கி வருகிறது. ‘ஜனிடர்’ என ( “janitor satellite”  ) பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 11மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் லவுசான் மாநிலத்தில் உள்ள சமஷ்டி தொழில்நுட்ப நிலையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த செயற்கைகோள் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ரொக்கெட் மற்றும் செயற்கைகோளின் உடைந்த 5 லட்சம் சிறு துண்டுகள் விண்ணில் சிதறிக் கிடப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.


விண்வெளியை துப்பரவு செய்வதற்கான இந்த இயந்திரம் ஒரு வேக்கூம் கிளீனர் மாதிரி செயற்படும். வான் குப்பைகளை அள்ள வேக்கூம் கிளீனருடன் சுவிஸ் வருவது குறித்து நிச்சயமாக பல நகைச்சுவை கருத்துக்கள் வரலாம்.
ஆனால் இந்த விசயம் ஒன்றும் அவ்வளவு நகைச்சுவையான விசயம் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒரு விசயம். பூமியையும் எமது நாட்டையும் நாம் சுத்தமாக வைத்திருப்பது போல விண்வெளியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் சுவிஸ் விஞ்ஞானிகள்.
பல்லாயிரக் கணக்கான கைவிடப்பட்ட பொருட்கள் பூமியை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. சரியாக எவ்வளவு பொருட்கள் அவ்வாறு இருக்கின்றன என்று எவருக்கும் கணக்கு எதுவும் இதுவரை தெரியாது. இவற்றில் பழைய செய்மதிகள், சர்வதேச வெண்வெளி ஆய்வு கூடத்தில் இருந்து வீசப்பட்ட பொருட்கள், விண் ஓடங்கள் ஆகியவை அடங்கும். இவை ஒரு மணி நேரத்துக்கு இருபத்தெட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.

இந்த குப்பைகளும், துண்டுகளும் பூமியைச் சுற்றவரும் செய்மதிகளுக்கும், ஆட்கள் பயணிக்கும் விண் ஓடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தற்போது இவற்றை அகற்றுவதற்காக சுவிஸ் லௌசான் மாநிலத்தில் உள்ள விண்வெளி மையம் தன்னியங்க கருவி  மூலம் இயக்கக் கூடிய ஒரு இயந்திரத்தை அறிவித்திருக்கிறது. அந்த குப்பைகளை அங்கே பெருக்கியெடுத்து அவற்றை பூமிக்கு கொண்டுவரும் போதே எரியச் செல்வது ஒரு வழி. அல்லது அவற்றை அங்கிருந்து பூமிக்கு கொண்டு வந்து இங்கே அவற்றை எரிப்பது இரண்டாவது வழி. இவை இரண்டு குறித்தும் தாம் ஆராய்வதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

பத்து மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த விண்வெளியை சுத்தம் செய்யும் திட்டம் இன்னமும் மூன்று முதல் ஐந்து வருடங்களில் ஆரம்பமாகும் என்று அந்த மையத்தின் இயக்குனர் வோல்க்கர் காஸ் கூறியுள்ளார்.
Thanks To Lankanow.


Friday, February 24, 2012

சைபர் யுத்தம்

“சைபர் யுத்தம் என்பது என்னை பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு இணை கிடையாது. அது போலத்தான் சைபர் யுத்தம் என்பது.

அமெரிக்காவை சீண்டிவிட்டுள்ளது ஈரான். இனி நாம் யார் என்பதை சைபர் யுத்தம் மூலமும் அவர்களிற்கு காட்டுவோம்”.   Leon Peneta (இயக்குனர் பென்டகன், முன்னாள் இயக்குனர் சீ.ஐ.ஏ.)
அமெரிக்காவின் உளவு விமானம் Drone . இது ஆளில்லா தாக்குதல் மற்றும் உளவு விமானம். இது கடத்தப்பட்டு ஈரானில் தரையிறக்கப்பட்டது. இங்கு விமானக்கடத்தல்காரர்கள் யாரும் இல்லாமலே விமானம் கடத்தப்பட்டுள்ளது. இது நாம் தெரிந்த அதிசயித்த செய்தி.

 யுத்தங்களில் அமெரிக்காவின் தாக்குதல் பலத்தில் பெரும் பங்கு வகிப்பது வான்படை. எதிரியின் தாக்குதல் பலத்தில் பாதியை வான்படை அழித்துவிடும். மிகுதியை தரைப்படையினர் பார்த்துக்கொள்வர். இது வரை கால அமெரிக்க ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் அனைத்திலும் இவ்வாறே நிகழ்ந்துள்ளது.

எதிர்கால யுத்தங்களில் அமெரிக்க வான்படை தங்கியிருக்கும் நவீன விமானங்கள் 3 வகை சார்ந்தவை. Stelth, Delta, Drone. இதில்  Drone என்பது முதல் கட்ட வேலையை செய்வது. துல்லியமான உளவு தகவல்கள், முக்கிய இலக்குகள் மீது நெருங்கித் தாக்குதல் போன்ற அதி முக்கியமான வேலைகளை செய்வது. அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ.யின் இயக்கத்திற்கு பெரும் பங்கு வகிப்பது. கப்டன் அமெரிக்காவின் நம்பிக்கை நச்சத்திரம் தான் ட்ரோன்.


கடந்த மாத நடுப்பகுதியில் அமெரிக்காவின் பல நிலைகள் வைரஸ் தாக்குதலிற்கு உள்ளாக்கப்பட்டன. Skipot   என்ற பெயரில் உள்நுழைந்த இந்த வைரஸ்கள் அமெரிக்காவின் பிரதம வைரஸ் தடுப்பான Symentec Anti Virus  மென்பொருளின் ஊடாக கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.  Symentec நிறுவன தலைவர் இது சாதாரண ட்ரோஜன் வகையினது என அறிவித்தார். அமெரிக்காவின் விமானந்தாக்கி கப்பல், கடற்படைத்தளம், பென்டகன், விமானத்தளம் போன்றவற்றில் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இந்த ட்ரோஜன் வைரஸை அழித்தபோதும் இதனுடன் இணைக்கப்பட்ட உபரி வைரஸ் அமெரிக்காவின் பல படைத்துறை உயர்நிலை அதிகாரிகளின் கணனிகளில் பரவியது. குறிப்பாக Secret Drone Program நிபுணர்களின் கணனிகளில். இதுவே DoD (Defence of Drone)   ட்ரோன் விமான தரையிறக்கத்தில் முக்கிய பங்கினை வகித்துள்ளது. உஸாமா பின் லாதின் மீதான தாக்குதல் என அமெரிக்கா கூறிக்கொள்ளும் அபோதாபாத் தாக்குதலின் போது இந்த விமானமே முற்று முழுதான பங்களிப்பை வழங்கியது. இதன் வழிநடத்தலின் பேரிலேயே அந்த ஒப்பரேஷன் செய்து முடிக்கப்பட்டது.

இப்போது அமெரிக்கா வெட்கத்திலும் வெறுப்பிலும் உள்ளது. கோலியாத்தை வென்ற தாவுத் போல அமெரிக்கா தனது கணனி தொடர்பான மெகா டிபென்ஸ் ஸிஸ்டம் பற்றிய நம்பிக்கையில் இருக்கையில் சாதாரண ஒரு வைரஸின் ஊடாக அமெரிக்காவையே தடுமாற வைத்தது அமெரிக்காவை பாரிய கவலைகளை நோக்கி முன்தள்ளியுள்ளது.


அமெரிக்க அனுகுண்டுகள், ஏவுகணைகள் போன்றவற்றின் கட்டுப்பாட்டு கணனிகளில் ஈரான் என்ன விதமான வில்லங்கங்களை விதைத்துள்ளது என்பதில் முடியை பிய்த்துக்கொண்டிருக்கின்றனர் அமெரிக்க கணனிவியல் நிபுணர்கள். இப்போது ஈரானை தாக்க போய் பாரிய இழப்புக்களை சந்திக்க வேண்டுமோ எனும் அச்சத்தில் இருக்கிறது அமெரிக்கா.
பெங்களுர், ஹைதராபாத் போன்ற இந்திய நகரங்களில் இருந்து 460 இற்கும் மேற்பட்ட கணனியியல் நிபுணர்கள் ஈரானில் முக்கிய நிலைகளில் சேவை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் டுபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக அந்த நாடுகளிற்கு உயர் தொழில் பெற்று சென்றவர்கள். ஓரிரு மாதங்களுல் இவர்களில் பலரை ஈரானிற்குள் அதிகபட்ச சம்பளத்திற்கு கடத்தியுள்ளது ஈரான். கூடவே பாகிஸ்தானிலிருந்து 200இற்கும் மேற்பட்ட கணனிவியல் நிபுணர்கள் இதே பாணியில் ஈரானினுல் உள்வாங்கப்பட்டுள்னர். இது நடந்தது 3 வருடங்களிற்கு முன்பு. இதன் பின்னரே சைபர் யுத்தத்தில் ஈரான் களமிறங்கியுள்ளது. அதாவது ஆத்திரமுறும் அமெரிக்கா தனது சைபர் தாக்குதலை ஈரான் மீது நடாத்தினால் என்ன செய்வது என்பதற்கான சில மாற்றுத்திட்டங்களை வகுத்த பின்பு என்பது குரிப்பிடதக்கது.
நன்றி
தகவல் - றியாஸ்லீ
 
 

Thursday, February 23, 2012

வலிகளும், நிவாரணங்களும்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3.
பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4.
எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.
5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6.
எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

 7.
வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8.
கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9.
குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.  
தகவல் - மனசாலி
நன்றி,பயனுள்ள தகவல்கள்.

Wednesday, February 22, 2012

காதலர் தினத்தில் ஆட்டுக்கும்மானுக்கும் விசித்திர திருமணம்

சீனாவில் உள்ள யூன்னும் என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு உள்ள ஆண் ஆடும்பெண் மானும் காதலர்கள் போல எப்போதும் ஒன்றாகவே இருப்பதையும், ஆட்டையும்,மானையும் பிரித்து வைத்த போது, அவை மிகவும் ஏங்கி சோர்வாகி விட்டதையும் உணர்ந்தவர்கள், மீண்டும் அவற்றை ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர். 
அப்போது, அவை சந்தோஷமாக இருந்தன. எனவே காதல் ஜோடிகளை மேலும் சந்தோஷமாக வைக்கும் வகையில் அவற்றுக்கு காதலர் தினத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆட்டுக்கும்மானுக்கும் நடக்கும் திருமணத்தை காண வருபவர்களுக்காக சிறப்பு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Monday, February 20, 2012

இளைஞர்களே எச்சரிக்கை!! சில பெண்களின் புது பிசினஸ்: சிக்கித்தவிக்கும் இளைஞர்கள்! அதிர்ச்சி ரிபோர்ட்.

இன்ரர் நெட்டில் பொருட்களை விற்கிறார்கள், வாங்குகிறார்கள் ! பங்குச் சந்தை உண்டு, ! ஆனால் இப்ப நீங்கள் இங்கே வாசிக்க இருப்பது ஒரு புது பிசினஸ் அதுவும் வெற்றிகரமாக நடக்கும் பிசினஸ் ! கோடி கோடியா கொட்டும் ! சரி இப்படி எல்லாம் சொல்லி உங்களைக் குழப்ப நாம் விரும்பவில்லை வாருங்கள் நேரடியாகவே மேட்டருக்குள் போய்விடலாம். 

லண்டனில் ஒரு இளைஞன், தனது காதலியுடன் சுமார் 1 வருடங்களாகக் கதைத்திருக்கிறான். அவனுக்கு விசா இல்லை. இருந்தாலும் கள்ளமாக என்றாலும் வேலைசெய்து காதலிக்கு பணத்தை அனுப்புகிறான். நிதம் அவனுக்கு வரும் தொலைபேசி அழைப்பு, அதில் வரும்செய்தி எல்லாம் பணம்வேண்டும் என்பதுதான். ஊரில் காதலை வளர்த்துக்கொண்டு லண்டன் வந்தவர் அல்ல இந்த இளைஞன். சந்தர்ப்ப வசத்தால் பேஸ் புக் மூலம் காதல் மலர்ந்திருக்கிறது. காதலியும் தனது படத்தை ஈமெயில் மூலம் அனுப்ப, அப்படத்தைப் பார்த்த இந்த இளைஞன் பூரித்துப் போனான்.  இவ்வளவு அழகான பெண்ணுக்கு காசு அனுப்பாமல் வேறு யாருக்கு அனுப்புவார்கள் என்றபடி நாட்கள் ஓடுகிறது...

லண்டனில் இருந்து எனக்கு வெறுத்துவிட்டது, நான் கொழும்புக்கு வந்து உன்னைக் கலியாணம் கட்டப்போகிறேன் என்று எப்ப அந்த இளைஞன் ஒரு வார்த்தையை விட்டானோ அன்றே எல்லாம் தலைகீழ் ! மறு நாள் போன் அடிக்கும்போது அந்தப் பெண் சொல்கிறாள், உங்களிடம் நான் ஒரு விடையத்தை மறைத்துவிட்டேன் என்று ! அது என்ன தெரியுமா ? எனக்கு கான்சர். அதுவும் சும்மா கான்சர் இல்லை... இரத்தப் புற்றுநோய் ! இந்த இளைஞரும் அவள் சொல்வதை எல்லாம் நம்பி, அவள் சாகப்போகிறாள் என்று தாடி வளர்த்து அலையத் தொடங்கியுள்ளார். இந்தவேளை ஒரு Medical offer வந்திருக்கு! அதாவது இந்தியா சென்று அப்பலோவில் சிகிச்சை எடுத்தால் சிலவேளை குணமாகலாம். இல்லை எண்டால் கொஞ்ச நாளில் பெண் செத்து விடுவாள் என்று சொல்லியிருக்கிறார்கள். 

உடனே படாத பாடு பட்டு, இந்த இளைஞனும் பணத்தை லண்டனில் புரட்டி அனுப்ப, தான் இந்தியா செல்வதாக அப் பெண் கூறியுள்ளார். சில வாரங்களில் இந்தியவில் இருந்து போன் அடித்த ஒரு நபர், உங்கள் காதலி தற்போது கோமா நிலையில் உள்ளார் எனக்கூறியுள்ளார்.

பின்னர் ஒரு கிழமையில்  போன் அடித்து காதலி இறந்துவிட்டாள். 31 நாட்களுக்குப் பின்னர் 31ம் நாள் நினைவஞ்சலிப் படத்தோடு அவள் புகைப்படம் யாழ் உதயன் பத்திரிகையில் வருகிறது.

அதனையும் பார்க்கும்படி சொல்லியிருக்கிறார்கள் அப் பெண்ணின் தாய் தந்தையர். இதில் இறந்ததாகச் சொல்லப்படும் பெண்ணுக்கு 2 சகோதரிகள் வேறு இருக்கிறார்கள்.என்று சொல்லி இருக்கிறார்கள்.

பெற்றோர் பேப்பரில் கொடுத்த 31ம் நாள் நினைவுப் படத்துக்கும், நண்பர்கள் என்று சொல்லிச் சிலர் தாம் கொடுத்த பிறிதொரு 31ம் நாள் நினைவஞ்சலிப் படத்துக்கும் இடையே வித்தியாசம் உண்டு. உருவ ஒற்றுமை இருந்தாலும் குறிப்பிட்ட பெண்ணால் காதலனுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது எவர் பார்த்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். நடந்தது எல்லாமே ஒரு செட்டப் என்பதனை காதலன் நம்ப மறுக்கிறான். அப் பெண் உண்மையாகவே இறந்துவிட்டதாக அவர் கருதுகிறான்.

பணத்தையும் வாங்கிக்கொண்டு காதலி கான்சரில் இறந்துவிட்டதாக கதை அளக்கிறது ஒரு கும்பல். இந்தியாவில் உள்ள அப்பலோ மருத்துவ மனையில் கொழும்பில் இருந்து குறிப்பிட்ட பெயரில் எந்தப் பெண்ணும் வந்து தங்களிடம் சிகிச்சை பெறவில்லை என்று மறுக்கிறது அதன் நிர்வாகம், அதுவும் அப்படி யாரும் இறக்கவும் இல்லை என்று அவர்கள் அடித்துக்கூறுகிறார்கள். 

ஆனால் இங்கே நடப்பது என்ன ? அப்படி என்றால் இறந்ததாகச் சொல்லப்படும் பெண் யார் ? அப் புகைப்படத்தில் உள்ளவர் யார் ? சரி இது எல்லாம் போகட்டும், இதன் பாகம் 2ம் தற்போது தொடர்கிறது.

அக்கா தான் குடுத்துவைக்கவில்லை நான் உங்களோடு கதைக்க ஆசைப்படுகிறேன் என்று, இறந்த காதலியின் தங்கை தற்போது இந்த இளைஞனோடு கனெக்சனைக் கொடுத்துள்ளார். சுருக்கமா சொல்லப்போனா இறந்த காதலியின் தங்கை இப்ப இந்த இளைஞனை லவ் பண்ணுதாம்.

இனி இவர் படிப்புக்கு, குடும்பச் செலவுக்கு எண்டு எல்லாம் காசு கறக்கும் நாடகம் ஆரம்பமாகும். இப்படியே ஒரு வட்டம் செயல்பட்டு வருகிறது. பேஸ் புக் ஊடாக இளைஞர்களை வளைத்துப் பிடிப்பது, அதுவும் விசா இல்லாட்டி அவர் கொழும்புக்கு வரமாட்டார். பின்னர் பழகி காதலிப்பது போல நடிப்பது. இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள பெண் ஒருவரின் படத்தை எடுத்து அது தான் நான் என்று அனுப்புவது. 

பின்னர் காசைக் கேடப்பது. ஏதாவது ஏடாகூடம், ஆனால் அவள் செத்துவிடுவாள். இல்லையேல் கான்சர் வரும், இல்லையேல் இப்ப எனக்கு எயிட்ஸ் வந்துவிட்டது என்று சொல்லி நழுவி விடுவார்கள் இவர்கள். குளிரிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் காசு காத்தோடு போய்விடும். குறிப்பா சொல்லப்போனால் ரூம் போட்டு இந்த வேலை கொழும்பில் நடக்கிறதாம். ஒரு ரூமில் 5 அல்லது 6 பெண்கள் இருந்து குலத்தொழிலாக இதனைத்தான் செய்கிறார்கள். இதற்கான தகுதி கம்பியூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேணும் ! அவ்வளவே ! 

இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழ் இளைஞர்கள் தான் பலிகடா ! நாம் மேலே குறிப்பிட்ட இளைஞர் 1 வருடத்தில் 10,000 பவுன்சுகளுக்கு மேல் அனுப்பியுள்ளார்.

Sunday, February 19, 2012

எழுமிச்சையிலிருந்து மின்சாரம் :மாணவன் முஹம்மது ஹம்தான் சாதனை!


குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு:-

தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.

இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

லம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின்  மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார்.
இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
"எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழைய குற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன்.
அப்போதுதான் புது வழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதிலிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம் பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பிகளால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது.
மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்."
இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.

Saturday, February 18, 2012

உங்களுக்கு தெரியுமா?

1.ATM card வச்சு இருக்கீங்களா?? 
24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)
For ATM related Services:
> ATM Card/PIN delivery status
> Lost Card/Card Blocking/Hotlisting
> Details of other value added services available – of State Bank ATMs
> State Bank ATM locations/addresses
> Guidance for Card usage at ATMs and Point of Sales.
2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ??
Run---> inetcpl.cpl
இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு??
Go...
இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ??

5. உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??
உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.To know your IP address??
www.knowmyip.com
www.whatismyip.com
www.ipaddresslocation.com


7. Toll Free Numbers for computer Problems solving??
TOLL FREE NUMBERS For any PC problems
AMD-18OO4256664
Dell-18OO444O26
HCL-18OO18O8O8O
IBM-18OO443333
Microsoft-18OO1111OO

8. keyboard shortcut keys எல்லாம் தெரிந்து கொள்ள எங்கே??
Computer keyboard shortcut keys
It has List of all Computer
shortcut keys 4 applications.

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி??
youtube  வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.
10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி??
Run--> msconfig
Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.

நன்றி:கற்போம் தளம்

Friday, February 17, 2012

என்றும் இளமையுடன் இருக்க மாதுளம்பழம்


உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும் அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள மாதுளம்பழம் சாப்பிடுவது  நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம்பழ தோல்அதனுள் இருக்கும் முத்துவிதை ஆகியவற்றை உள்ளடக்கிய பதப்படுத்தப்பட்ட பொருள் 60 பேருக்கு ஒரு மாத காலத்துக்கு வழங்கப்பட்டது. அவர்களுடைய உடலில் நடைபெறும் ரசாயன மாற்றங்களைஇத்தகைய  பொருள் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடப்பட் டது.
மாதுளம் பழத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளை சாப்பிட்டர்களின் உடல் செல்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது தேய்வடைவது குறைவாக இருந்தது. அதாவது மூளைதசைகல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்  பலவீனமாவதை குறைக்கிறது.
மேலும் முதுமைக்கு முக்கியமான அறிகுறியாக விளங்கும் தோல் சுருக்கத்துக்கு காரணமாக உள்ள செல்களின் டிஎன்ஏவை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால்வயது அதிகமானாலும்தோலில் சுருக்கம் ஏற்படாது. இதனால்,  இளமையுடன் இருக்கலாம்.
இதய நோய் வராமல் தடுக்கவும்மன அழுத்தத்திலிருந்து விடுபடவும்செக்ஸ் உணர்வுக்கு ஊக்கமளிக்கவும் மாதுளம்   பழம் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக வெறும் முத்துக்களை சாப்பிடுவதைவிடஅதன் தோல்  மற்றும் விதை ஆகிய அனைத்தையும் பதப்படுத்தி சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும்.
நன்றி,

Thursday, February 16, 2012

பேஸ்புக்கை மிரட்டும் மில்லத்பேஸ்புக்

பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய சமூக இணையதளத்தின் ஸ்தாபகர்கள் பேஸ்புக் இணையதளத்தில் முஸ்லிம்கள் தமது பயனர் கணக்குகளை அழிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன், இதற்குப் பதிலாக மில்லத் பேஸ்புக் இஸ்லாமிய சமூக இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுள்ளனர்.
ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் வகையில் ஃபேஸ்புக்கின் அனைத்து அம்சங்களும் உள்ளடங்கலாக இந்த சமூக வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . 
உலகின் மிகப்பெரிய சமூக இணையதளம் 2010ஆம் ஆண்டு (முஹம்மத் ஸல் அவர்களை) மதிப்புக்கேடான வரைபடம் ஒன்றை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தியது என மில்லத் பேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவரான உமர் ஸகீர் மீர், "பேஸ்புக்கில் மதிப்புக்கேடான செயல்களும் சமூக இணையதளங்களில் முஸ்லிம் இளைஞர்களின் விதிமுறைகளும்" என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்தார்.
இணைய தள முகவரி.

உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து, அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும், நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலக  முஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார்.
2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் மில்லத்பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மில்லத்பேஸ்புக் திறக்கப்பட்டு பத்து நாட்களில் 3இலட்சம் கணக்குகள் பதிவுசெய்யப்பட்டது. தற்போது மில்லத்பேஸ்புக் ஐந்துஇலட்சம் பாவனையாளர்களை கொண்டுள்ளது.
இதேவேளை துருக்கியின் இஸ்தான்பூல் நகரை தளமாக்கொண்டு salamworld எனும் இஸ்லாமிய சமூக இணையதளம் செயற்படவுள்ளது. salamworld இணையதளம் இவ்ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 15, 2012

அழித்த, அழிந்த  பைல்களை மீட்க.......

  Format செய்த அல்லது அழிந்த, அழித்த Hard disc, Usb, Memory Card களின் பைல்களை 100% மீட்டெடுக்க இலவச மென்பொருள்.  கீழுள்ள இணைப்பை சொடுக்கி, வரும் பக்கத்தில் Choose your download method என்பதில் Free Download என்பதை தெரிவு செய்து, வரும் பெட்டி-பாக்ஸின் மேலுள்ள எழுத்துக்களை டைப் செய்து கீழே டவ்ன்லோட் என்பதை க்ளிக் செய்யவும். பின் இன்ஸ்டால் செய்து நிறுவி அழித்த, அழிந்த  பைல்களை மீட்க  முடியும்.
மென்பொருள் தரவிறக்க.......
இங்கே அழுத்தவும்.
http://uploaded.to/file/nyuqwe1o

Tuesday, February 14, 2012

ஒரே இடத்தில் இருந்தபடி வேலை பார்க்கிறீர்களா? : உயிருக்கே ஆபத்து

 அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடல் நலனிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கின்றது அந்த ஆய்வு முடிவு.

ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு உடல் பருமன், டைப் 2 நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் புதிதாக நடைபெற்ற ஆய்வில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் வேலை பார்ப்பது உயிருக்கே ஆபத்தாகும் என்று தெரியவந்துள்ளது. லூசியானாவிலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களைப் பற்றி மருத்துவர் டேவிட் கேவன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. ஆண், பெண் என மொத்தம் 17 ஆயிரம் பேரிடம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரடைப்பு ஏற்படும்
ஒரு நாளில் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு மாரடைப்பு தாக்க ஏராளமான வாய்ப்புகளுண்டு என்கிறது ஆய்வு. இது சிகரெட் புகைப்பதைப் போல உயிருக்கு மிகவும் அபாயகரமானது.

சிகரெட் புகைப்பதால் இருதயத்திலும்இ மூச்சுக் குழாயிலும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். இது உயிருக்கு மிக ஆபத்தானது. அதேபோல உட்கார்ந்தே இருப்பதாலும், அதே அளவுக்கு உடலில் ஆபத்து ஏற்படுமாம்.

உயிருக்கு ஆபத்து
ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேரின் உயிருக்கு ஆபத்து மிக அதிகம். அவ்வாறு உட்கார்ந்தே இருக்கும் போது உடலின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து ஸ்டோரேஜ் தன்மையை அடைந்து விடுகிறதாம். புளி மூட்டையை தூக்கி வைத்தது போல உடல் செயலிழந்து தேக்க நிலையில் இருக்குமாம். அது செயல்படும் திறனை இழந்துவிடுகிறது. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். மொத்தத்தில் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்கிறது ஆய்வு.

அடிக்கடி நடங்க
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்க வேண்டாம். அதையும் மீறி உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இடையிடையே சில நிமிடங்கள் எழுந்து நின்று கொள்ளுங்கள். சிறிது தூரம் நடக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீரடையும். உடலில் ரத்த ஓட்டம் ஸ்டோரேஜ் நிலையை அடையாது, உயிருக்கும் ஆபத்தில்லை என்று டிப்ஸ் தருகிறார் டாக்டர் டேவிட் கேவன்.



பணக்கார நோய்கள் என்று இதைத்தான் சொல்வார்கள் போலும்..
நன்றி,
சகோதரர் அன்சார் (மின்னஞ்சலூடாக....)

Sunday, February 12, 2012

இந்திய சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்த அமைச்சர்கள் ?

சங்பரிவாரத்தினரால் பாகிஸ்தான் கொடி ஏற்றிக் கலவரம் எற்படுத்த முயன்று மாட்டிக் கொண்ட சமாச்சாரம் பற்றி கர்நாடக சட்டப் பேரவையில் பேச்சு நடந்து கொண்டிருந்த போது மூன்று அமைச்சர்கள் சர்வ சாதாரணமாக செல்போனில் ஆபாசப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துள்ளது இன்றைய பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாகவும் பரபரப்பு செய்தியாகவும் இருந்ததைப் பார்த்தோம்.

பொதுவாகவே பாராளுமன்றம்> சட்டமன்றம் போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் அதிகமானோர் ரவுடிகளாகவும்> கூத்தாடிகளாகவும்> கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்தவர்களாகவும் இருக்கின்றனர். 

தேசப்பற்று அறவே இல்லாத இவர்களால் அங்கு பேசப்படும் நாட்டு நலனில் அவ்வளவாக கவனம் செலுத்துவதில்லை அதனால் அவர்களை பல வேலைகளில் உறக்கமும் மேலிடத் தொடங்குகிறது.

இவர்களில் பலர் ஏற்கனவே உறங்கி வழிந்து கேமராவின் கழுகுக் கண்களில் மாட்டிக் கொண்ட சம்பவமும் ஏற்கனவே நிறைய நடந்துள்ளது அதில் தமிழ்நாட்டு ராமராஜனும் அடங்குவார்.

கூத்தாடிகளும்> ரவுடிகளும்> கேலிக்கைகளில் மூழ்கித் திளைத்தவர்களும் பாராளுமன்ற> சட்டமன்றத்தை ஆக்ரமித்துக் கொண்டதால் படித்தவர்களும்> தேசப் பற்றாளர்களும் அதிகமானோர் பாராளுமன்ற> சட்டமன்ற உறுப்பினராவதற்கு விரும்புவதில்லை.

அதனால் இவர்களே அதிகமாக செல்கின்றனர் அதனால் இவர்கள் வெளியில் செய்த ரவுடியிஷங்களையும்> ஆபாசங்கயையும் உள்ளேயும் தயக்கமின்றி செய்கின்றனர். இவர்களின் மேல்படி வெறுக்கத்தக்க செயல்களால் பலமுறை கண்ணியமிக்க பாராளுமன்ற> சட்டமன்றம் ஸ்தம்பித்திருக்கிறது. 

இவ்வாறு செய்பவர்கள் மீண்டும் செய்யமலிருப்பதற்கு போதுமான தண்டனைகளும் நீதிமன்றங்களால் வழங்கப்படுவதில்லை இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தில் இதற்கு இடமில்லாமல் இல்லை இருக்கவே செய்கிறது. 

ஆனால் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் லஞ்சத்தின் அடிப்படையில் நீதிபதி பதவியை பெற்றுக் கொண்ட சில நீதிபதிகள் மேல்படி குற்றமிழைக்கும் பண முதலைகளிடமிருந்து லஞ்சத்தை கத்தை> கத்தையாக கறந்;து கொண்டு தண்டனை பெறாமல் வெளியேற்றி விடுகின்றனர்.

இதற்கு முன்; 2008 ஆகஸ்டு 26ம் தேதி மும்பை புனேயில் தனியார் பங்களா ஒன்றில் நடத்தப்பட்ட மது விருந்து ஒன்றில் ஆபாச நடனத்துடன் கூடவே ஆபாசப் படமும் காட்டப்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிப்போரின் உறக்கம் கலைந்து பொதுமக்களால் போலிஸூக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேல்படி ஆபாசப் பிரியர்கள் பிடிபட்ட தகவலை அறிந்திருக்கிறோம்.  

பிடிபட்டதில் அதினமானோர் சுங்கத்துறை அதிகாரிகள் ஆவர் அவர்களிடம் போலீஸார் எதாவது பெரும் தொகையை வாங்கிக் கொண்டு விட்டிருந்திருப்பார்கள் ஆனால் அங்கே பப்ளிக் கூடிவிட்டதால் வேறு வழியில்லாமல் இந்திய தண்டளைச் சட்டமமாகிய ஆபாசப் படம் பார்த்தல் - பார்க்கத் தூண்டுதல் பிரிவு 292ன் படி வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மேல்படி ஆபாசப் பிரியர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர். 

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே.தஹிலரமணி அது பொது இடம் அல்ல தனியாருக்கு சொந்தமான பங்களா என்பதுடன் அது உள்ளரங்கு நிகழ்ச்சி என்பதால் இது பொதுமக்களை பாதித்ததாக கருதப் படாது அதனால் இது குற்றமாகாது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வாசித்து வழக்கை ரத்து செய்து விட்டார்.

அவர்கள் அந்த பங்களாவுக்குள் விடிய விடிய அடித்த ரகளை அக்கம் பக்கத்தில் வசிப்போரின் காது சவ்வுகளை கிழித்து விட்டதாக புகாரளித்தே அங்கு போலீஸ் வரவழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இன்று நாட்டின் முதுகெலும்பாகிய சட்டப்பேரவையில் இத்தளை கீழ்தரமாக நடந்து கொண்ட மேல்படி மூன்று அமைச்சர்களையும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குறைந்த பட்சம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லிக் கூச்சலிட்டும் எங்கள் செல்லுக்கு திடீரென வந்த எஸ்.எம்.எஸ் ஐ ஓப்பன் செய்து செய்து பார்த்ததில் வெளிநாட்டு ரேப் சீனை பார்த்துக் கொண்டிருந்தோம் அதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றுக் கூறிப் பிடிவாதமாக மறுத்து விட்டனர். (சுரண்டலில் இன்னும் அவர்கள் தங்களுடைய குறிப்பிட்ட இலக்கை அடைய வில்லை போலும் ?).

இறுதியில் ஆளும் கட்சி அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதில் அவர்களிடமிருந்து ராஜினாமா பெறுவது என்று முடிவெடுத்து அவர்களிடம் ராஜினாமாவை வலுக்கட்டாயமாக வாங்கி உள்னர். இது தான் கண்ணியமிக்க சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்ததற்காக அவர்களுக்கான தண்டனை (?).

இதில் ஒருவர் பெண்கள் நலத்துறை அமைச்சர் என்பது அதிர்ச்சி தகவல் ? இதுவரை இவர் பெண்களுக்கான என்ன மாதிரியான நலத் திட்டங்களை தீட்டி நடைமுறைப் படுத்தினாரோ தெரியவில்லை ?  


ப்ளாட்பாரத்தில் ஆபாச சிடி விற்கும் ஏழைகளுக்கு மட்டும் தான் மேல்படி ஆபாசப் படம் பார்த்தல் - பார்க்கத் தூண்டுதல் பிரிவு 292ன் இந்திய குற்றவியல் சட்டம் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வோம்.  

  • ஆபாசத்தை பச்சையாக அரங்கேற்றும் நட்சத்திர ஹோட்டல் காரர்களுக்கு 292ன் கீழ் தண்டனை கிடையாது.
  • ஆபாசத்தை பச்சையாக அரங்கேற்றும் சினிமாக் காரர்களுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது. 
  • ஆபாசத்தை பொது மக்கள் காணும் விதமாக பொதுமக்களை வழிகெடுக்கும் விதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு எடுத்து நடத்தும் அரசியல் வாதிகளுக்கும்> அரசு அதிகாரிகளுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது.
  • ஆபாசத்தை பச்சையாக கடற்கரை ஓரங்களிலும்> கடற்கரை சாலைகளின் நவீன பங்களாக்களில் நடத்தும் வி.ஐ.பி வீட்டுப் பிள்ளைகளுக்கும் 292ன் கீழ் தண்டனை கிடையாது.

தண்டனை வழங்க இந்திய குற்றவியல் சட்டத்தில் இடமிருந்தும் நீதிபதிகள் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிக்க விட்டு விடுகின்றனர்.     

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் பக்கம் இவர்கள் திரும்பாதவரை இந்தியாவின் சன(?)நாயகம் படுகுழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டு மூடுவதை யாராலும் தடுக்கவே முடியாது.   

தகவல்: ஆதிரை பாரூக்.( மின்னஞ்சலூடாக..)