Thursday, June 30, 2011

பேஸ் புக் பார்வையாளர்களே ! பேரதிர்ச்சிச் செய்தி.

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.
ஆம், புதிதாக வந்து உள்ளது http://www.orgasmprofile.com என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.
எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவரின் பால் அடையாளத்தை கட்டத்தில் குறிப்பிடுதல் வேண்டும். அவ்வளவுதான்.
புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் பாலியல் உச்சப் பரவச நிலையில் உள்ளார் என்று காட்டுகின்ற வீடியோ தயாராகி விடும். வீடியோவை எவருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

Potato Roses










கைத்தொலைபேசி, தொலைக்காட்சியா? - கர்ப்பிணிகள் எச்சரிக்கை!

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவது, தொலைக்காட்ச்சி அதிகமாக பார்ப்பதனால்,  அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது: மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்; சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர்; உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது,  , தொலைக்காட்ச்சி அதிகமாக பார்த்த்துதான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகாகூறினார்.

Tuesday, June 28, 2011

செல்போன் ஆன் செய்தால் விமான விபத்து ஏற்படலாம்-ஆய்வில் எச்சரிக்கை.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கமான ஐஏடிஏநடத்திய ஆய்வில் வெளியான தகவல் வருமாறு:
கடந்த 6 ஆண்டுகளில் நடந்த 75 சிறிய, பெரிய விமான விபத்துகளில் எலக்டிரானிக் சிஸ்டத்துடன் பயணிகளின் எலக்டிரானிக் கருவிகளுக்கு இருந்த தொடர்புகள் பற்றி ஆராயப்பட்டது. ஒரு சம்பவத்தில் 4,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் தானியங்கி இயக் கம் கோளாறு ஆனது.
அதையறிந்ததும் பயணிகளை பணிப்பெண்கள் சோதித்ததில் 4 பயணிகள் செல்போனை ஆன் செய்து இயக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவற்றை சுவிட்ச் ஆப் செய்ய செய்தனர். உடனே, விமானத்தின் எலக்டிரானிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு சரியானது.
விமானத்துக்குள் 2 லேப்டாப் பயன்படுத்தப்பட்டபோது கடிகார முள் பின்னோக்கி சென்றதும், கேபினில் இருந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் சரியாக வேலை செய்யாததும் கண்டுபிடிக்கப்பட்டது.
செல்போன் மட்டுமின்றி எலக்டிரானிக் கருவிகளை பயணிகள் ஆன் செய்தால் விமானத்தின் இயக்க முறை கோளாறு அடைவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.

மெல்லக் கொல்லும் புகைப் பழக்கம்


புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.
ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஸ்டைல்' : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. 
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
மறுப்போம், மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி, குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.
விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும், ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
*
புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
*
புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம், 
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
*
எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த 
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.
நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
*
எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48
மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72
மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3
முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
*
ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10
ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல் 
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.
-
டாக்டர் ஜெ.சங்குமணி, மதுரை. 98432 72876 .
புகைத்தால் புற்றுநோய் நிச்சயம் : *சிகரெட் போன்ற புகையிலை பொருளில் புற்றுநோயை உற்பத்தி செய்யும் நச்சுப் பொருட்கள் உள்ளன. இவை வாய், தொண்டை, மூச்சுக்குழாய், உணவுக் குழாய், சிறுநீர பாதை வரை எங்கு வேண்டுமானாலும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
*
நுரையீரல் நோய் புற்றுநோய் ஏற்பட காரணம் புகைபிடிப்பதே.
*
உலக மக்கள் தொகையில் ஆஸ்துமா 15 சதவீத மக்களையும், சி.ஓ.பி.டி., என்ற இளைப்பு நோய் 5 சதவீத மக்களையும் பாதித்துள்ளது. இதற்கு புகை பிடிப்பதும் காரணம்.
*
சிகரெட் புகைப்பதால் நுரையீரல், 30 வயதில் 60 வயதுக்குரிய தன்மையுடன் செயல்படும்.
*
புகைப் பழக்கத்தை நிறுத்த தற்போது வாயில் மெல்லும் வகையில் சூயிங்கம், தோலில் ஒட்டிக் கொள்ளும் வகையில் நிகோட்டின் ஸ்டிக்கர் போன்றவை வந்துள்ளன.
-
டாக்டர் எம்.பழனியப்பன். மதுரை. 98421 16070

Monday, June 27, 2011

Skype To Facebook

 ஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.
இந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.
அதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.
நீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.
Thanks To Lankasri.

மிதி வண்டிகள்.

 முப்பது வயதிலேயே சர்க்கரை வியாதி, நாற்பது வயதில் மாரடைப்பு என இளைய மற்றும் நடுத்தர வயதினரின் ஆரோக்கியமும் ஆயுளும் கீழ்நோக்கிச் செல்லக் காரணம் போதிய உடற்பயிற்சியின்மையே!
இப்போதைய அவசர யுகத்தில் நேரத்தைச் சேமிப்பதற்காக இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பெருமளவில் உபயோகப்படுத்தப்படுகின்றன. விளைவு, நேரம் சேமிக்கப்படும் அதேவேளையில் உடல் ஆரோக்கியம் உதாசீனப்படுத்தப்படுவதை ஏனோ நம்மில் பெரும்பாலானோர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
 கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர் இன்னமும்கூட விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட உடலுழைப்பு, நடந்தே செல்லும் மனோபாவம், மாசற்ற சுற்றுச்சூழல் ஆகியவற்றால் தங்கள் உடல் ஆரோக்கியத்தை ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நகர்ப்புற மக்களோ குறிப்பாக இளைஞர்களோ கல்லூரி, நிறுவனங்களில் உடலுழைப்பற்ற பணி, படிப்பு, பின்னர் கணினி அல்லது தொலைக்காட்சி முன்னர் தவம் என மூளை உழைப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்குக் கொடுப்பதில்லை. குறிப்பாக, இரு சக்கர வாகன உற்பத்தி அசுர வேகத்தில் ஆரம்பிக்க, சென்ற தலைமுறையினர் வரை ஆரோக்கியத்தின் பிரதான காரணிகளுள் ஒன்றான மிதிவண்டியை ஓட்டுவதென்பது இப்போது அபூர்வமாகி வருகிறது.
 சென்னை நகர மக்களில் 1970-ல் 21.3 சதவீதமாக இருந்த மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை 2005-ல் 12.8 சதவீதமாகக் குறைந்து போனது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை நிச்சயமாக மேலும் குறைந்திருக்கவே வாய்ப்புண்டு. ஆயிரம், இரண்டாயிரம் என செலவு செய்து உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளம் என ஆர்வமுடன் செல்லும் இளைய தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத அதேசமயம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படச் செய்யும் மிதிவண்டிகளை ஓட்ட முன்வர வேண்டும்.
 எல்லாம் சரிதான், சென்னை போன்ற பெருநகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலில் இலகுரக, கனரக வாகனங்களுக்கு இடையில் மிதிவண்டி ஓட்டுவது எந்த அளவுக்குச் சாத்தியமானது என்ற கேள்வி எழுவதிலும் நியாயமுண்டு. மேலை நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவின் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் மிதிவண்டிகள் ஓட்டிச் செல்வதற்கென்று சாலைகளில் தனியாக பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை நகரின் ஒருசில இடங்களில் மாநகராட்சியினர் மிதிவண்டிகள் செல்வதற்கான பாதைகள் ஒதுக்கியிருப்பது ஒரு நல்ல ஆரம்பம். மிதிவண்டிகள் செல்வதற்கான இதுபோன்ற பாதைகளை நகரெங்கும் அமைக்க முன்வர வேண்டும்.
 மிகுதியான மிதிவண்டிகளின் பயன்பாடு புகை, தூசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்கும் என்பதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அடித்தளம் அமைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Saturday, June 25, 2011

அற்புதமான மேசை.


கோடீஸ்வரர்கள் உருவாவதில் உலகில் இந்தியா 4வது இடம்

அதிக சொத்து சேர்க்க வாய்ப்புள்ள உலக நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடம் வகிப்பதாக சர்வதேச ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப், கடந்த ஆண்டில் அதிக பணக்காரர்கள் உருவான அடிப்படையில் நடத்திய ஆய்வில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பட்டியலை குளோபல் வெல்த் ரிப்போட்என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:
உலகின் எல்லா பகுதிகளிலும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட சீரான பொருளாதார வளர்ச்சியால் சர்வதேச நாடுகளில் வசதி படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. உலகம் முழுவதும் சொத்து வளர்ச்சி கடந்த ஆண்டில் ரூ.405 லட்சம் கோடி உயர்ந்து, மொத்தம் ரூ.5,481 லட்சம் கோடியானது. 2015ம் ஆண்டு வரை இந்த வளர்ச்சி ஆண்டுக்கு 5.9 சதவீதம் அதிகரிக்கும்.
வசதி படைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க பங்கு சந்தை வர்த்தகம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக இந்தியா, சீனா போன்ற விரைவாக வளரும் நாடுகளில் பணக்காரர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வசதி படைத்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 18 சதவீதம் அதிகரிக்கக்கூடும். உலகின் மொத்த வசதி படைத்தவர்கள் எண்ணிக்கையில் ஆசியாவின் பங்கும் 18 சதவீதமாக உள்ளது. அது 2015ல் 25 சதவீதமாக உயரக்கூடும்.
புதிய பணக்காரர்களை உருவாக்குவதில் உலக அளவில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியாவுக்கு 4ம் இடம் கிடைத்துள்ளது. கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 12.2 சதவீதம் உயர்ந்து 1.25 கோடி பேராக ஆகியுள்ளது. அதில் அமெரிக்கர்கள் மட்டும் 52 லட்சம் பேர். அடுத்த இடங்களை ஜப்பான், சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Friday, June 24, 2011

கூகுளின் புதிய வசதி

Google Voice Search: கூகுளின் புதிய வசதி
மிக பிரபலமான கூகுள் நிறுவனம் குறுகிய கால இடைவெளியில் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
நாளாந்தம் பல மாற்றங்களோடு பல சேவைகளை அள்ளி விடும் கூகுள் நிறுவனத்தின் படைப்புக்களில் இருந்து அண்மையில் வெளிவந்த வசதிகளுள் ஒன்று தான் Google Voice Search.
கையடக்க தொலைபேசிகளில் பயன்பட்ட இந்த தேடல் முறை இப்போது கூகுள் குரோமில் நிறுவப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நீங்கள் தேடும் விடயங்களை தேடி தருகிறது. தற்போது இந்த வசதி கூகிள் குரோமில் மட்டுமே உள்ளது.
உங்கள் மைக்ரோ போனை தயார் செய்து கொண்டு மைக் பட்டன் கிளிக் செய்தால் SPEAK NOW என தோன்றும் போது நீங்கள் தேடும் சொல்லின் வார்த்தையை உச்சரிப்பதன் மூலம் உங்களுக்கான தேடல் ஆரம்பமாகும்.
 Thanks To..... Lankasri

இணையத்தில் அதிக நேரம் செலவிட்டு கனேடியர்கள் சாதனை.

இணைய தளப் பயன்பாடு குறித்து ஆய்வு செய்திடும் காம்ஸ்கோர் நிறுவனம், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் எடுத்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, இணையத்தில் யார் அதிக நேரம் உலா வருபவர்கள் தெரியுமா? அமெரிக்கர்களா? பிரிட்டிஷ்காரர்களா? சீன அல்லது இந்தியக் குடிமக்களா? இவர்கள் யாரும் இல்லை.
கனடா நாட்டு மக்கள் தான் அதிக நேரம் இணையத்தில் உள்ளனர். 2010 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஒவ்வொருவரும் சராசரியாக 43.5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
இது பன்னாட்டளவிலான சராசரி நேரத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். இவர்களில் பெரும்பாலானவர் களின் வயது 55க்கும் மேல் என்பது இன்னொரு வியத்தகு செய்தி. 2009 ஆம் ஆண்டிலும் இதே பெருமையை கனடா தட்டிச் சென்றது.
தற்போது கனடாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் 2 கோடியே 30 லட்சம் பேர் உள்ளனர். இதே காலத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் 35.5 மணி நேரமும், பிரிட்டிஷ் நாட்டவர் 32.3 மணி நேரமும், தென் கொரியாவினைச் சேர்ந்தவர்கள் 27.7 மணி நேரமும் இணையத்தில் இருந்துள்ளனர்.
இந்திய இணையம் குறித்து இங்கே பார்க்கலாமா! மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ஒரு கோடியே 12 லட்சத்து 10 ஆயிரமாக வளர்ந்துள்ளது.
மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 77 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களில் நகரங்களில் பயன்படுத்துபவர்கள் 51.23 கோடி. கிராமப் புறங்களில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ளன. காம் ஸ்கோர் நிறுவனத்தின் கணக்குப் படி, ஒரு நேரத்தில் சராசரியாக, 3 கோடியே 2 லட்சம் பேர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கின்றனர்.
இவர்களில் 72% பேர் வீடியோ படங்களை இணையத்தில் பார்க்கின்றனர். இவர்கள் சராசரியாக 58 படங்களைப் பார்க்கின்றனர். 5 மணி நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர்.
யு ட்யூப் தளத்தில் பார்க்கப்படும் இணைய வீடியோக்களில் 44.5 % இந்தியாவில் பார்க்கப்படுகின்றன. 78 கோடி தடவை இவை காணப்படுகின்றன. பேஸ்புக் சோஷியல் தளத்தில்66 லட்சம் பேர் பதிந்துள்ளனர். இவர்கள் 3 கோடி@ய ஒரு லட்சம் வீடியோ படங்களைப் பார்த்துள்ளனர.
நன்றி.சகோதரர் கான் - தோஹா, கத்தார்.

ஆபத்தான மீன்கள்.










Thursday, June 23, 2011

கூகிள் சாதனை

தமிழ் மொழியாக்கம் கூகிளின் சாதனை.
என்ன ஆச்சர்யமாகவா உள்ளது.... அதுதான் உண்மை.... கொஞ்சம் கீழே போய் வாசித்து விட்டு சும்மா ஆங்கிலத்தில் டைப் செய்துதான் பாருங்களேன்.....  
கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இப்போது  பூர்த்தி செய்துள்ளது.
ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் மொழி மாற்றம் செய்து தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.
அதற்கான சுட்டி:

கஞ்சி குடிப்பது இதயத்துக்கு நல்லது

லண்டன்,  அன்றாடம் கஞ்சி குடிப்பது இதயத்துக்கு நல்லது என்பது மருத்துவரீதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
டாக்டர் பிரங்க் தைஸ் என்பவர் தலைமையில் 40 முதல் 65 வயதுக்குள்பட்ட 260 பேரிடம் அபர்தீன் பல்கலைக்கழகம் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வை நடத்தியது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவருக்கும் வழக்கமான உணவு கொடுக்கப்பட்டது. அதில் 3-ல் 1 மடங்குமட்டும் ரொட்டிமட்டுமோ அல்லது கோதுமை கஞ்சி மற்றும் கோதுமை- ஓட்ஸ் கஞ்சி கொடுக்கப்பட்டது.
இதில்  வழக்கமான உணவுடன் கஞ்சிகுடித்தவர்களுக்குமட்டும் ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைந்திருந்தது. இதய நோய் 25 சதமும், பக்கவாதம் வருவது 25 சதமும் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது என டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அன்றாட உணவில்  சிறிதளவு கோதுமை கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடித்தால் அது பெரிய அளவில் இதயத்திற்கு நன்மை செய்கிறது. மாரடைப்போ அல்லது பக்கவாதமோ வரும் அபாயத்தை இது தடுக்கிறது என அமெரிக்க கிளினிகல் நியூட்ரீசன் என்ற சஞ்சிகையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத் தமிழர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்து சென்றதைப் பற்றி நாம் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...
உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்
களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?
1960-
ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.
ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.
ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.
என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.
தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.
இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.
ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.
குறிப்பாக, ஸ்ரீதரின் கண்டுபிடிப்பான "ப்ளூம் பாக்ஸ்' மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத அளவுக்கு தொழில்நுட்பம் இருந்ததால், பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்ததாக ஜான் டூயர் தெரிவித்துள்ளார்.
மின்சார உற்பத்தியைப் பொருத்தவரை நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை மின் இழப்புதான். உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து பயனாளிகளுக்குச் சென்றடைவது வரை ஏறத்தாழ 30 முதல் 45 சதம் வரை மின்சாரம் இழப்பு ஏற்படுவதாகத் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால், ஸ்ரீதர் கண்டுபிடித்துள்ள "ப்ளூம் பாக்ஸில்' மின் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே கூறலாம்.
"
இந்தப் பெட்டியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்த தொலைவிலேயே பயன்படுத்துவதால் மின் இழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஏறத்தாழ 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்தி இயந்திரம். இந்தப் பெட்டிக்குள் ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் சில நிமிஷங்களில் நமக்குத் தேவையான மின்சாரம் தயாராகிவிடும்
இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச் சாண வாயுவையோ அல்லது சூரிய ஒளியைச் செலுத்தியோ மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். மேலும், இந்தப் பெட்டியை கட்டடத்துக்குள் அல்லது வெட்டவெளியில் கூட வைத்துக் கொள்ளலாம்.
ஒரு "ப்ளூம் பாக்ஸ்' இருந்தால் அமெரிக்காவில் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரமும் இந்தியாவில் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரமும் கிடைத்துவிடும்' என்கிறார் ஸ்ரீதர்.
தற்போது, அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூகுள் நிறுவனம் "ப்ளூம் பாக்ஸ்' மூலம் 400 கிலோவாட் மின்சாரத்தை தயாரித்து வருகிறது.
வால்மார்ட், பெட் எக்ஸ், இபே, கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் போன்ற பல நிறுவனங்களும் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.
பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் "ப்ளூம் பாக்ஸ்' சாதாரண மக்கள் பயன்படுத்த இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், விலை ஏறத்தாழ 3,000 டாலர் (இந்திய மதிப்பின்படி 1.40 லட்சம்) வரை இருக்கும் என்றே கூறப்படுகிறது.
வீட்டுக்கு வீடு மின்சார உற்பத்திப் பெட்டியைக் காணும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

Tuesday, June 21, 2011

தாய்ப்பால் தரும் பசு.

ப்யூனஸ் அயர்ஸ்:உலகில் முதன் முறையாக மனித மரபணுக்களை இணைத்துகுளோனிங் மூலம் புதிய பசு ஒன்றை அர்ஜென்டினா நாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்பசு தரும் பால்தாய்ப்பாலைப் போன்றே இருக்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப தேசிய நிறுவனம்புதிய பசு ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளது.இப்பசுவின் மரபணுக்களில்இரண்டு மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவைதாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியவை. இந்த மரபணுக்கள்பசுவின் மரபணுக்களுடன் சேர்க்கப்பட்டதால் இப்பசுமனிதர்களின் தாய்ப்பாலைப் போலவிட்டமின்கள் கொண்டபாலைத் தரும்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதிபிறந்த இந்தப் பசுவுக்கு ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிறக்கும் போதே 45 கிலோவுக்கும் அதிகமாக இருந்ததால்அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "உலகில் முதன் முறையாக மனித மரபணுக்கள் சேர்க்கப்பட்டு குளோனிங் மூலம் ரோசிட்டா ஐ.எஸ்.ஏ.உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பால்தாய்ப்பாலில் உள்ள விட்டமின்களைக் கொண்டிருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பசு உருவாக்கத்திற்கான முயற்சியை இந்நிறுவனமும்சான்மார்ட்டின் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டன.

Saturday, June 18, 2011

வாழும் வழி

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3.
இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4.
உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5.
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. சென்ற ஆண்டை
விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9.
குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 
தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்
10.
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12.
உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13.
மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16.
கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17.
வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18.
எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20.
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
சமூகம்.
21.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள்.
22.
மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70
வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25.
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
வாழ்க்கை
26.
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27.
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30.
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

Friday, June 17, 2011

ஃபேஸ்புக் -எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை

 கூகுளையே மிரள வைக்கும் அளவுக்கு கிடுகிடு வளர்ச்சியை எட்டியுள்ள ஃபேஸ்புக் சமூக வலைத்தளம், இன்றைய இளைய சமூகத்தினரின் இணைய டைரி என்றால் அது மிகையில்லை.
அந்த அளவுக்கு நாட்டு நடப்பு முதல் வீட்டு நடப்பு வரை எல்லாவற்றையும் அதில் எழுதி தள்ளி விடுகிறார்கள். ஆர்வத்தில் அலைமோதும் இளைய தலைமுறையினர்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்கான ஒரு வேடிக்கையான மற்றும் ஜாலியான வழிமுறை ஃபேஸ்புக் என்றாலும், இத்தகைய சமூக வலைத்தளங்களில் நம்மை பற்றிய குறிப்புகளை வெளியிடும் போது குறிப்பாக பெண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
அவ்வாறு எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை எந்த மாதிரியான விடயங்களில், எது எதை தெரிவிக்கலாம், எவற்றை தெரிவிக்கக்கூடாது. என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதை பார்க்கலாம்.
நமது சொந்த புகைப்படம் (மார்ஃபிங்கில் மாற்றப்படும் ஆபத்து) உள்பட சில வகையான புகைப்படங்களை நமது வலைப்பக்கத்தில் ஏற்றுவது ஆபத்தாக முடியலாம்.யாராவது அவதூறாக பேசலாம் அல்லது ஏதாவது குற்றத்திற்கோ அல்லது அதைவிட மோசமான நிகழ்வுகளுக்கோ ஆட்பட நேரிடலாம்.
"டேட்டா மைனிங்" (Data Mining)  என்றழைக்கப்படும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவை ஃபேஸ்புக்கை துளாவி நமது பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை எடுத்துவிடும். அப்படி கிடைக்கும் விவரங்கள் கிரிமினல் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு தங்கக்கட்டிக்கு சமமானவை" என்கிறார் பிரபல தகவல் தொழில்நுட்ப நிபுணரான டேவ் ஒயிட்லெக்.
எனவே பிறந்த தேதி, தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்றவற்றை ஃபேஸ்புக் தளத்தில் தெரிவிக்ககூடாது. இந்த விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ள நிலையில், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றின் இணைய பயன்பாட்டின்போது "பாதுகாப்பு கேள்விகள்" - security questions - , கடவுச்சொல் - password - ஆக கேட்கப்படுபவற்றில் மேற்கூறியவைதான் முதன்மை பங்காற்றுகிறது.
எனவே மேற்கூறிய விவரங்களை தெரிவிப்பது எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளலாம்.
அதேப்போன்று, வங்கி விண்ணப்பங்கள், இணையத்தின் மூலமான வங்கி பண பரிவர்த்தனை போன்றவற்றில் நீங்கள் யார் என்பதன் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கப்படும் பாதுகாப்பு கேள்விகளில்,உங்களது தாயாரின் முதல் பெயர் என்ன என்பது கேட்கப்படுகிறது.
மேலும் நீங்கள் முதன் முதலில் படித்த பள்ளியின் பெயரும் கேட்கப்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இத்தகைய விவரங்களையும் தெரிவிக்காமல் தவிர்ப்பது நல்லது.
அவ்வாறு செய்வது நமது அடையாள திருட்டை தவிர்க்க வைப்பதோடு, கொள்ளையர்கள் மற்றும் திருடர்களிடமிருந்தும்-நம்மை-காப்பாற்றும்.
மேலும் நீங்கள் உங்களது ஃபேஸ்புக் தளத்தில் உங்களது அன்றாட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வழக்கமுடையவர்களாக இருந்தால், " அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருக்கமாட்டேன்..., 2 ஆம் தேதி ஊருக்கு செல்கிறேன்; திரும்பி வர 10 நாட்கள் ஆகும்..." என்றெல்லாம் தெரிவிக்காதீர்கள்.
இப்படி தகவல்களை உளறிக்கொட்டுவது திருடர்களையும், கொள்ளையர்களையும் நாமே வெற்றிலை பாக்கு வைத்து நமது வீட்டிற்கு கொள்ளையடிக்க வர அழைப்பதற்கு சமமாகிவிடும்.
மேலும் சாதி, மதம், இனம் குறித்த அவதூறான கருத்துக்களை தெரிவிப்பதோ அல்லது சட்டவிரோத புகைப்படங்களை போடுவதோ கூடாது. அவ்வாறு செய்வது உங்களது வாழ்க்கைக்கே ஆபத்தாகக் கூட போய்விட வாய்ப்புள்ளது.
மேலும் நமது தொலைபேசி எண்களை குறிப்பிடுவதால், அதை வாங்குங்கள்...இதை வாங்குங்கள், லோன் தருகிறோம், மருத்துவக் காப்பீடு போடுங்கள்... என்றெல்லாம் வரும் தொ(ல்)லைபேசி அழைப்புகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
அத்துடன் இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் அதிகமாகி வருகிறது. அப்படி இருக்கையில் நம்மை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக் தளத்திலிருந்து சேகரித்துக் கொண்டு, நமது குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதோ அல்லது வெளியில் தனியாக செல்லும் போதோ நம்மை பற்றிய விவரங்களை கூறி, நான் உனது பெற்றோருக்கு தெரிந்தவன் தான் என்பது போல் காட்டிக்கொண்டு நமது குழந்தைகளை கடத்தவும் வாய்ப்புண்டு.
எனவே ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களது பெயரை தவிர, உங்களைப்பற்றிய வேறு எவ்வித அந்தரங்க தகவல்களையும் தெரிவிக்காதீர்கள்!