Thursday, April 7, 2011

சிறகடித்து பறக்கும் "இயந்திரப்பறவை"

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியின் பயன்பாடாக விஞ்ஞானிகள் இன்று புதுமையான பல கண்டுபிடிப்புக்களை எம் கண்முன்னால் காட்டி எம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கின்றனர். இயற்கையின் படைப்புக்களுக்கு சவால் விடும் வகையில் இயற்கைக்கு இணையான பல்வேறு கண்டுபிடிப்புக்களை நாம் காணமுடிகிறது.
 இதற்கு ஒத்தாற்போல் அச்சு அசல் ஒரு பறவையின் தோற்றத்துடன் கூடிய ரோபோ பறவையை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். பறவையைப்போன்றே மிக உச்சத்தில் பறக்கவல்ல இந்த இயந்திர பறவைகள் நிஜ பறவைகளைப்போலவே சிறகடித்தும் கழுத்து மற்றும் வால் பகுதிகளை அசைத்தும் திருப்பியும் பறக்கும் திறமையை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பலரையும் வியப்பில் ஆழ்த்தும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான இந்த இயந்திரப்பறவை ரிமோட் கன்றோல் மூலம் இயக்கப்படுகிறது. இந்த பறவை ஒன்றின் நிறை 450 கிராம்கள் ஆகும்.
 நன்றி, சகோதரர். அன்சார் முகம்மது.

மாமிச மலை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மியாமி  நகரத்தில் வசிக்கும் 40வயதுடையதை டொமினிக் லனோயிஸ் (Dominique Lanoise) என்ற பெண்மணி தனது அளவுக்கதிகமான உடல் எடையினால் அசையக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இவரின் தற்போதைய நிறை 400 கிலோ வாக காணப்படுகிறது. 
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்.. எனக்கு தற்போது 6 பிள்ளைகள் இருக்கின்றனர். எனது முதல் குழந்தை பிறந்த பின்னர்தான் எனது உடலில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது.
அதன் பின்னரே உடல் எடை கணிசமான முறையில் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும்,  இன்று எனது எல்லா வேலைகளையும் அவர்களே செய்வதோடு என்னையும் அவர்களே பராமரித்து வருகின்றார்கள்.
எனவே எனக்கு எந்த வைத்திய சிகிச்சையும் தேவையில்லை. இருக்கும் எனது மிகுதி  வாழ் நாளையும் என் குழந்தைகளுடனையே கழிக்க விரும்புகின்றேன் என தெரிவித்தார். 
தனது உடலுக்கு பொருத்தமாக ஒரு உடையை கூட அணியமுடியாமல் வீட்டில்  இருக்கும் இவர் தனது வாழ்நாளை தன் படுக்கையறையிலே கழிக்கிறார்.







 நன்றி, நியூயாழ்.