Friday, June 14, 2013

உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையர்

(JM) உலகின் மிகவும் வயதான மனிதராக இலங்கையைச் சேர்ந்த சேர்ந்த 116 வயது மூதாட்டியை கின்னஸ் சாதனைத் பதிவேடு அறிவித்துள்ளது.  உலகின் வயதான மனிதராக அறிவிக்கப்பட்டிருந்த ஜப்பானைச் சேர்ந்த, ஜிரோமோன் கிமுரா கடந்த 12ம் நாள் மரணமானதையடுத்தே, இலங்கையைச்  சேர்ந்த அப்புலானந்த உக்கு உலகின் மூத்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   
 
அப்புலாந்த உக்கு என்ற இந்த மூதாட்டி கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனல்ல பிரதேசத்தில் உள்ள புலத்கமுவ என்ற இடத்தில் வசித்து வருகிறார்.    இவர் 1897ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி பிறந்தவர். 
இவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் - 977960037V ஆகும்.   இவருக்கு எட்டு பிள்ளைகளும், 80இற்கும் அதிகமான பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.    இவரையடுத்து உலகின் அடுத்த வயதான நபராக ஜப்பானின் மிசாகா ஒகாவா இருந்து வருகிறார், அவர் 1898இல் பிறந்தவர்.