Saturday, June 12, 2010

வியக்க வைக்கும் ''மொபைல் போன் நுட்பங்கள்''



தகவல் தொடர்புத்துறையில் இந்தியா நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டிருப்பதாக அடிக்கடி நாம் செய்தித்தாள்களில் படிக்க நேர்கிறது. மே மாதத்தில் 30 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்தார்கள், மொத்த இணைப்பு 20கோடியை தாண்டிவிட்டது, உலகிலேயே சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் உள்ளது என்றெல்லாம் இந்திய அரசு சொல்லிக் கொண்டாலும் உண்மையில் மிக மோசமான மதிப்பு கூட்டப்படாத சேவைகளுடன் தான் இந்தியாவில் உள்ள செல்போன் நிறுவனங்கள் சேவையை வழங்கிவருகின்றன.
பல நாடுகளில் எப்போதோ வந்துவிட்ட 3G சேவை இன்னும் இந்தியாவில் முழுமையாக செய்யல்படுத்தவில்லை. இந்த தொழில்நுட்பத்தை முதலில் சில குறிப்பிட்ட மாநகரங்களில் அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனமும் வழக்கம் போல குறைட்டை விட்டுக்கொண்டிருக்கிறது.
பொதுவாக மொபைல் நிறுவனங்கள் தரும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் GPRS,MMS,WAP PORTAL,VOICE SERVICE,CAALERTUNES,RINGTONES,WALLPAPERS,
GAMES DOWNLOADS போன்ற சேவைகள் தரப்பட்டாலும் எப்போதோ நோக்கியா மொபைல் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு சேவைகள் இன்னும் இந்தியாவில் இன்னும் முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை, காரணம் இந்த சேவைகளை மொபைல் ஆப்ரேட்டர்கள் மூலமாகத்தான் பயன்படுத்த முடியும் .

VISUAL RADIO - (விஷுவல் ரேடியோ)

இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க நோக்கியா நிறுவனத்தை சார்ந்ததாகும், பொதுவாக நாம் மொபைலில் ரேடியோ கேட்கும் போது அந்த ரேடியோ ஸ்டேஷன் பெயர் மற்றும் அலைவரிசை எண்ணை மட்டுமே திரையில் நம்மால் பார்க்க முடியும், ஆனால் நோக்கியா கண்டுபிடித்த இந்த நுட்பம் மூலம் அந்த பாடல் இடம்பெற்ற படம் என்ன?, பாடலை பாடியது யார்?உட்பட ப்பல விபாரங்களையும், வானிலை நிலவரங்களையும் சாலைகளில் ட்ராபிக் நிலவரங்களையும் உட்பட எல்லாவற்றையும் நமது மொபைல் திரையில் நேரலையாக காண முடியும்.
இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த நோக்கியா நிறுவனம் முதல் முறையாக அதை தாங்கள் தயாரிக்கும் மொபைல்களில் புகுத்தி அதன் சொந்த நாடான பின்லாந்து நாட்டில் சோதனை செய்து பார்த்தது, அது வெற்றி பெறவே உலகத்திலுள்ள பல நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை நோக்கியா நிறுவனம் தங்களது மொபைல் சாதனங்கள் மூலம் அறிமுகப்படுத்தியது. இந்த நுட்பம் நோக்கியா போன்களில் மட்டுமே இருக்கும்,
இந்த வகை போன்கள் 5000/- என்ற விலையிலிருந்து சந்தையில் கிடைக்கிறது.குறிப்பாக நோக்கியாவின் N-SERIES போன் வகைகளில் இந்த தொழில்நுட்பம் உத்திரவாதத்துடன் உள்ளது.

PUSH TO TALK - (புஷ் டூ டாக்)

இந்த தொழில்நுட்பம் மற்ற கம்பெனியின் மொபைல்களிலும் இருந்தாலும் நோக்கியா நிறுவனம் தான் இந்த தொழில்நுட்பம் உள்ள போன்களை அதிகமாக வெளியிடுகிறது.
இந்த "புஷ் டூ டாக்" தொழில்நுட்பம் ஒரு ஒரு வாக்கி-டாக்கி சமாச்சாரத்தை ஒத்ததுதான். இந்த வகை போன்களில் இதற்காகவே தனியாக ஒரு பட்டன் இருக்கும் அதனை அழுத்தி நாம் ஐந்துக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் ஒரே நேரத்தில் தொடர்பை ஏற்படுத்தி பேச முடியும்.
அதாவது பொதுவாக CONFERENCE கால் என்று சொல்லப்படும் வசதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நண்பர்களிடம் பேச வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரின் நம்பரையும் டயல் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் இந்த நுட்பத்தில் அந்த நம்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக சேமித்து வைத்து விட்டால் ஒரு பட்டனை அழுத்தி ஒரே நேரத்தில் அத்தனை பேரிடமும் பேசமுடியும்.இந்த தொழில்நுட்பத்தை நமது மொபைல் ஆப்ரேட்டர்கள் உதவியால் தான் பயன்படுத்த முடியும்.
புதிய புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதனை மக்களிடம் கொண்டு செல்லும் உலக நாடுகள் வரிசையில் இந்தியா மட்டுமே இன்னும் முயலோடு போட்டியில் கலந்து கொண்ட ஆமையாக இருக்கிறது. எப்போது உண்மையிலேயே இந்தியா தகவல் தொழில் நுட்பத்துறையில் முன்னேறும்?
பின்குறிப்பு - 1 : அண்டை நாடான இலங்கையில் 3G சேவை வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் அதன் அண்ணன் இந்தியாவில் இன்னும் அதன் அரிச்சுவடையே காணும்.
பின்குறிப்பு - 2: இந்த இரண்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மொபைல்களை நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் அறிமுகப்படுத்தி விட்டது. ஆனால் இங்குள்ள மொபைல் ஆப்ரேட்டர் நிறுவனங்கள் இந்த சேவைகளை முழுமையாக தர அக்கறை காட்டவில்லை.அதனால் நோக்கியா நிறுவனம் புதிதாக தயாரித்து வெளியிடும் பெரும்பாலான மொபைல்களில் இந்த தொழில்நுட்பங்களை பார்க்க முடிவதில்லை.


Orange Push-To Talk Wireless

Europe : Orange launched a unique international service, offering instant voice communication and easy-to-access group calling and messaging with the added benefit of a real-time availability icon, so you can see who is available and who’s not. The service is initially being trialled by business customers.
Talk Now™– similar to the US Push-To-Talk service but with a more advanced feature-set and richer functionality - will give Orange customers a new way of communicating alongside their existing voice and messaging services. Talk Now™ will be launched in 10 countries this year, starting with the UK and France in Q2 2004.
Building on the Orange Experience, which promises to be simple, compelling and personal, Talk Now™ creates an immediate connection between two or more mobile phones so minimal time is spent searching for or dialling individual telephone numbers. You can see who is available to speak or receive single or group messages instantly. Talk Now™ will also allow Orange customers to:
• create buddy lists that can be used to facilitate instant conference calling
• know when contacts are available to talk and when they are busy
• speak to or message a contact who has selected themselves as available
• record a conference call and send it to others if they are not available
• send a voice message to other Talk Now™ users at the touch of a button

Talk Now™ will be available internationally allowing customers easy, instant access to colleagues, friends and family in a different country who use the service. Orange expects to attract one million users to the new service in the 12 months following rollout.
Speaking at the launch in London this morning, Sol Trujillo, CEO, Orange Group, said: "As we are the first to launch in the world we are offering something no other company can offer. Talk Now provides the business community with an immediate and reliable way to better manage teams of people within an organisation. It addresses a real need amongst businesses to disseminate or communicate time critical information quickly and efficiently. The service also provides consumers with an ideal way to keep in touch with friends and family by making it easy to instantly communicate with each other as a group at the touch of a button."
The launch follows Orange research into customer needs, and successful customer trials by companies including IBM and the RAC. The RAC is already actively exploring the value of instant messaging and is looking to see if this can be extended into the wireless arena. The RAC is investigating the Orange Talk Now™ service as a possible wireless Instant Messaging solution.
The service is scalable and will benefit from added functionality throughout the year. Talk Now™ will initially be available on the Orange Treo 600 – an Orange Signature phone - with further handsets announced later in Q2, including rugged devices for field-workers and consumer-style handsets.
With the added functionality that it offers, Talk Now™ will be offered as a premium service. Full pricing details will be available nearer commercial availability, with pricing bundles geared toward specific customer markets.
Trujillo added: "Talk Now offers a level of functionality and a feature-set that is relevant to every single one of our 47 million customers – instant access to each and every one of their family, friends and colleagues."
நன்றி,நிடூர்

கட்டடக்கலைஜனின் கை வண்ணம்



































சிங்காரச் சென்னை - ஒரு பார்வை!



சென்னை திருவல்லிக்கேணி பள்ளிவாசல்

தமிழகத்தின் தலைநகரமான சென்னை. கடந்த 15 ஆண்டுகளில் இங்கு பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. கலாச்சாரம் மாறியிருக்கிறது. வாழ்க்கை வசதிகள் பெருகியிருக்கின்றன. சென்னைக்கு இப்போது 368 வயதாகிறது. ஆனாலும் இளமையாக ஜொலிக்கிறது.

இன்றைய தேதியில் சென்னையில் புற நகர்களையும் சேர்த்து 80 லட்சத்து 63 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

சதுர கி.மீ.க்கு 24 ஆயிரத்து 400 பேர் குடியிருக்கிறார்கள். தினமும் பரபரக்கும் 375 ரூட்களில் 2 ஆயிரத்து 773 பஸ்களில் சுமார் 40 லட்சம் பயணிகள் அங்கும், இங்குமாக ஓடுகிறார்கள்.
விஷயம் இதுவல்ல! உலக நாடுகளின் ஏகோபித்த பார்வை இப்போது சென்னை மீதிருக்கிறது.
இதற்கு காரணம் அதன் மள, மள முன்னேற்றம்! கடந்த 2002-2003-ல் பொருளாதாரத்தில் உலக அளவில் 179-வது இடத்தில் இருந்த சென்னை இந்த 2006-2007-ல் 138-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
ஆசிய அளவில் 31-வது முக்கி நகரமாக காட்சியளிக்கிறது சென்னை. சென்னைக்கு மேம்பால நகரம் என்று கூட பெயர் வைக்கலாம்; அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள். இந்தியாவின் வளரும் கமர்ஷியல், இன்டஸ்டீரியல் நகரங்களில் 3-வது இடம் சென்னைக்குத் தான்! ''இந்தியாவின் ஆட்டோ மொபைல் கேப்பிட்டல்'' என்ற பெயரும் கூட சென்னைக்கு கிடைத்தாகிவிட்டது.
கொல்கத்தாவையும், மும்பையையும் பின் னோக்கி தள்ளிவிட்டு டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை `பாயும்புலி'யாகி இருக்கிறது. கம்பியூட்டர் சாஃப்டுவேர், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல்ஸ், லெதர், பிளாஸ்டிக், வாகன உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் சென்னை சக்கைபோடு போட ஆரம்பித்திருக்கிறது.



மேலே படத்தில் காண்பது சென்னைக்கு அருகிலுள்ள சிறுசேரியில் கட்டப்பட்டு வரும் டாடா கன்ஸல்டிங் சர்வீஸின் கட்டிடங்களில் ஒன்றாகும் இது. இதுபோல் 7 கட்டிடங்கள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு வருகின்றன. 20,000 பேர் ஒரே இடத்தில் பணி செய்யும் விதமாக தெற்காசியாவின் மிகப்பெரிய சாஃப்ட்வேர் கேந்திரமாக உருவாகி வருகிறது.
ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கும் மேல் தமிழகத்திலிருந்து கம்பியூட்டர் சாஃப்டுவேர் பொருட்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதில் 70 சதவீதம் அமெரிக்காவிற்கும், 10 சதவீதம் இங்கிலாந்திற்கும் செல்கிறது. இதில் இந்தியாவில் 3-வது இடம் சென்னைக்கு!
ஹுண்டாய், ஃபோர்டு, மிட்சுபிசி, அசோக் லேலண்டு, டி.வி.எஸ்., மகேந்திரா உள்பட பல நிறுவனங்கள் சேர்ந்து ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் புதிய கார், லாரிகளை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு இங்கிருந்து அனுப்புகின்றன. வாகனத் தயாரிப்புகள் மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடியில் நடை பெறுகின்றன. இந்தியாவின் மொத்த வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் சென்னையின் பங்கு 35 சதவீதம் ஆகும்.

உலகின் 10 பிரபல செல்ஃபோன் மாடல்களை ரூ.650 கோடியிலான `நோக்கியா' நிறுவனம் தயாரிப்பது இங்கிருந்து தான். இதேபோல் மோட்டாரல்லாவின் பங்கு ரூ.460 கோடி. பெருகி வரும் புதிய தொழிற்சாலைகளால் பெரும்புதூரில் மட்டும் 50 ஆயிரம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்திருக்கிறது.

இது தவிர தகவல் தொழில் நுட்பத்துறைகளில் 1 லட்சம் பேரும், கால் சென்டர் மற்றும் பி.பி.ஓக்களில் 1 லட்சம் பேரும் புதிதாக வேலை பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். வருகிற 2008-ல் இவர்களின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும் என்கிறார்கள். இவற்றின் எதிரொலியாக சென்னையைச் சுற்றிலும் நில மதிப்பும், கன்ஸ்ட்ரகஷன்ளும் உயர்ந்திருக்கின்றன.


தற்போது திருவான்மிஞ்ரில் சதுர அடிக்கு ரூ.5 ஆயிரமும், அடையாரில் ரூ.6 ஆயிரமும், ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.8 ஆயிரமும், வேளச்சேரியில் ரூ.4 ஆயிரமும், போரூரில் ரூ.2,500மாக வீடுகளின் மதிப்பு அனைத்து இடங்களிலுமே அதிகரித்து இருக்கிறது. ரியல் எஸ்டேட் பிசினஸ் 400 மடங்கு பெருகியிருக்கிறது. இருந்த போதிலும் சென்னையை பொறுத்த வரையில் 40 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள்.

இவை ஒரு புறமிருக்க வியாபார நிறுவனங்களும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு `பிசினஸ்' சில் வெகுவாக வளர ஆரம்பித்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றின் ஒரு நாள் பிசினஸ் சுமார் ஆயிரம் கோடியை தாண்டுகிறது.

கோடி, கோடியாக சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் சென்னையில் தனி மனித வாழ்க்கையும் கூட வெகுவாக உயர்ந்திருக்கிறது. முன்பை விடவும் தனியார் நிறுவனங்கள் இப்போது அதிக சம்பளம் தரத்தொடங்கியிருக்கின்றன. ஒரு கம்பியூட்டர் என்ஜினீயர் சாதாரணமாக ரூ.50 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். இது தவிர நிறுவனங்கள் தேவையான கடன் வசதிகளையும் செய்து தருகின்றன.

தொழில் செய்பவர் களுக்கும் கூட சாதாரண சம்பாத்யம் அல்ல. 2 கம்பியூட்டர்களை வைத்து சில டிசைன்களை செய்து தருபவர் மற்றும் ரூ.20 ஆயிரம் லெகுவாக சம்பாதிக்கிறார். பெட்டிக்கடைக்காருக்கு கூட எச்செலவும்போக மாதம் ரூ.5 ஆயிரம் தேறுகிறது. இத்தகைய வரவுக்கு தக்கபடி சென்னையின் செலவும் ஒரு பக்கம் இருக்கிறது. நடுத்தரவாசிகள் சிக்கித் தவிக்கும் கண்ணீர் கதை ஒருபுறம் இருக்கத் தான் செய்கிறது.


வாடகை, பால், பலசரக்கு, பஸ் செலவு, குழந்தைகளின் எதிர்காலம் என அவர்கள் விழிபிதுங்கித்தான் போகிறார்கள்.

இதில் மிகப்பெரிய விசித்திரம் மேற்சொன்னவை எல்லாமே மத்திய சென்னைக்கும், தென்சென்னைக்கும் மாத்திரமே பொருந்தும். வடசென்னைக்காரர்கள் நிலைமை முற்றிலும் தலைகீழ். முன்பு கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்திருந்த காலனி போன்ற கதை இவர்களுடையது.

பெரிய தொழிற்சாலைகள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என எதுவும் கிடையாது. நடுத்தரத்திற்கு கீழானது தான் இவர்களது வாழ்க்கை.

அதேசமயம் தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத ஆடம்பரச் செலவு சென்னையில் இன்னொரு பக்கம் கும்மாளம் போடுகிறது. ஆடம்பரக் கார்கள், அதிகரிப்பு, ஒசத்தியான பொருட்களின் பர்ச்சேஸ், நூதனமான சூதாட்டங்கள், மேலை நாட்டு பயணங்கள்.


ஏழை, பாழைகள் 12 கி.மீ. நீளமுள்ள மெரினா கடற்கரையின் ஏதோ ஒரு மூலையில் இருந்தபடி ஓசிக்காற்று வாங்கி வீடு செல்ல, நட்சத்திர ஓட்டலில் ஏ.சி. அறையில் அமர்ந்து பெக், பெக்காக உள்ளே தள்ளி மேற்கத்திய இசைக்கு தள்ளாடி ரூ.5 ஆயிரம் பில் தருபவர்களும் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள்.

ஒரு நட்சத்திர ஓட்டலில் ரூ.600 விலையுள்ள வஞ்சிற மீன் வருவல் தினமும் 100 விற்று காலியாகிறது. அந்தஸ்தான ஒரு ஓட்டலில் தண்ணியடிக்கும் பில் மட்டும் தினமும் ரூ. 2லட்சம் கல்லாவில் சேர்கிறது.

சென்னையின் வசதிபடைத்த வீட்டுக்குழந்தைகள் சராசரியாக தினமும் ரூ.100 பாக்கெட் மணியாக காலி செய்கிறார்கள். ஓட்டல்களிலும், ஷாப்பிங் காம்ப்ளக்சுகளிலும், ஜவுளிக்கடைகளிலும் எல்லாமே மேலைநாடுகள் போல உருமாறி, நினைத்த சந்தோஷத்தை தர வல்லவையாக இருக்கின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இல்லையென்றால் அவர்கள் பிள்ளையின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.


மெரினா இல்லாத சென்னையா?!
நன்றி,நிடூர்

மீண்டும் பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை

சென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos) என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

நன்றி,www.z9tech.com