Friday, November 25, 2011

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று நாடு முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா  கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு.
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா? பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது எங்கும் கிடைக்கிறது.  இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். 
இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டுமல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதா .
Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும்  Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto  போன்ற உப பொருட்களும் சேர்க்கப்
படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது. ஆக, பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.
மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும். இதில் சத்துகள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்புள்ளது.
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளறு ,
நிரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
இப்போதாவது  நாமும் விழித்து கொள்வோம் 
நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு  பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
நன்றி, எனது கருத்து இணையம்.

20,000 இலங்கையருக்கு தென்கொரியாவில் ஓய்வூதியம்.


தென் கொரியாவில் தொழில் புரியும் சுமார் 20,000 இலங்கையர்களும் கொரியாவின் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ள னர். இலங்கையர்களுக்கென 36 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் படி, சுமார் மூன்று இலட்சம் ரூபா வரையில் இலங்கையர் ஒருவர் ஓய்வூதிய கொடுப்பனவாக பெறுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக் கிறது.
கொரியாவில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தமொன்று கடந்த 22ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத் துக்குமிடையே ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அமைச்சின் செயலாளர் கர்னல் நிஸ்ஸங்க என். விஜேரட்னவும், கொரிய தேசிய ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீசியோங் ஹ¥ன் என்பவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அமைச்சர் டிலான் பெரேரா முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தம் ஊடாக ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களின் விபரங்களை அமைச்சுக்கு ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டம் கட்டமாக பெற்றுக் கொடுக்க கொரிய அரசு முன்வந்துள்ளது.
இத்தகவல்களின் அடிப்படையில் இலங்கையரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு அமைச்சினூடாக உறுதிப்படுத்தப்பட்டு கொரிய ஓய்வூதிய திணைக்களத்துக்கு அனுப்பப்படும்.
அனுப்பப்பட்ட தரவுகள் சரியானதாக இருக்கிறது என்பதை கொரிய திணைக்களம் உறுதி செய்த பின்னர் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றவருக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும். தென் கொரியாவுக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் டிலான் பெரேராவின் வேண்டுகோளை ஏற்றே கொரிய அரசு இந்த ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்தியுள்ளது.
Thanks to Thinakaran.

Monday, November 14, 2011

  நீண்ட ஆயுளின் ரகசியம்

இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நீண்ட காலம் வாழ வேண்டும் என்றுதான் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழி தெரியாமல் யாரெல்லாம் நீண்ட ஆயுளுக்கு வழி கூறுகிறார்களோ அதைத் தேடி அலைகின்றனர். அல்லது அவர்கள் கூறும் வழிகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் நீண்ட ஆயுளுக்கான வழி அவரவர்களிடம் தான் உள்ளது. என்ற ரகசியம் பலருக்கும் புரிவதில்லை. இதைத்தான் லண்டனைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஆண்ட்ரூ ஸ்டெப்டோ ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
அவரது ஆராய்ச்சியின் முடிவு என்ன தெரியுமா? மகிழ்ச்சியாக இருந்தால் நீண்ட காலம் வாழலாம் என்பது தான் அது. அட இது தெரியாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ஸ்டெப்டோ.
தனது ஆராய்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுத்தவர்கள் அனைவருமே 52 வயது முதல் 79 வயதுக்குள்பட்டவர்கள். சுமார் 4 ஆயிரம் பேரிடம் ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சியின் முடிவை கட்டுரையாக வெளியிட்டுள்ளார் ஸ்டெப்டோ. இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் எல்லாம் நல்ல சிந்தனை உள்ளவர்களுக்கு மன இறுக்கம் குறைவதற்கான ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் தெரிவித்தன. ஆனால் பேராசிரியர் ஸ்டெப்டோவின் ஆராய்ச்சி முடிவுகள் எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது நிரூபணமாகியுள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட 4 ஆயிரம் பேரிடமும் தினசரி நான்கு முறை அவர்களது மனோ நிலை எப்படி என்று கேட்கப்பட்டு அதற்கான விடை பதிவு செய்யப்பட்டது. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்டனர். ஆராய்ச்சியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு அவர்களது மனோ நிலையும் ஆராய்ச்சிக்குள்படுத்தப்பட்டது. ஒவ்வொருவரின் வயது, பாலினம், மன இறுக்கம், அவர்களுக்கு இருந்த நோய்கள், உடலியல் சார்ந்த நடவடிக்கைகள் ஆகியன ஆராயப்பட்டன. இதில் மகிழ்ச்சியாக இருந்தவர்களுக்கு எவ்வித நோயும் அண்டவில்லை. மேலும் இத்தகையோர் குறைந்த வயதில் உயிரிழப்பதும் இல்லை என்பது அறியப்பட்டது. இதிலிருந்து உடலியல் ரீதியிலான மாற்றம் சந்தோஷமாக இருப்பவர்களிடையே இருப்பது புலனாகியுள்ளது. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது புரிந்தது என்று ஸ்டெப்டோ தனது ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். மன இறுக்கத்துக்குக் காரணமான கார்டிசால் எனும் ஹார்மோன் சுரப்பு இவர்களுக்குக் குறைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதும் என்ற மனதுடன் இருப்பவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

Saturday, November 5, 2011


நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு கேடு.

 
நொறுக்குத் தீனி உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியது.அதிக உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வர காரணமாக அமைகிறது.
அண்மையில்  நடைபெற்ற அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் வட்ட மேசை மாநாட்டில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனியாகக் கருதப்படும் பர்கர், உருளைக்கிழங்கு வறுவல், சமோசா, குளிர்பானங்கள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.
அதனால் பள்ளிக்கு அருகில் உள்ள நொறுக்குத் தீனி கடைகளை அகற்ற பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ளப் பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக உடல் பருமன் பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைகிறது. ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய கணக்கின் படி 5 கோடிக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என்றும் இது 2025-ம் ஆண்டிற்குள் 9 கோடியைத் தாண்டி விடும் என்றும் தெரிவிக்காப்படுகிறது.

Friday, November 4, 2011

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு வசதிகளுடன் பிளாக்பெர்ரி


ஹஜ் பயணிகளுக்கு மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக பிளாக்பெர்ரி (Blackberry) மொபைல் போன் வந்துள்ளது. புனிதப் பயணத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு உபயோகமான விஷயங்கள் பிளாக்பெர்ரி மொபைலில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான சாஃப்ட்வேரை பிளாக்பெர்ரி நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்கேட்ஸ் உருவாக்கியுள்ளது. பிளாக்பெர்ரி பயன்படுத்துவோர் இந்த சாஃப்ட்வேரை  ஆப்வேர்ல்ட் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இந்த சாஃப்ட்வேர் அரபு, ஆங்கிலம், துருக்கி, பார்சி, உருது மற்றும் பஹசா உள்ளிட்ட 6 மொழிகளில் செயல்படும். ஹஜ் புனித யாத்திரைக்கான வழி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம். வீடியோ காட்சிகளும் இதில் உள்ளன. இஹ்ரம் முதல் உம்ரா வரை அனைத்து புனித யாத்திரை சார்ந்த விஷயங்களும் இதில் விளக்கமாக உள்ளது. 
பட விளக்கம், படக் காட்சிகள் மற்றும் வீடியோ காட்சிகளாக இவை இடம்பெற்றுள்ளன.