Wednesday, May 19, 2010

ரோபோ நடத்திவைத்த திருமணம்

ரோபோ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இயந்திர மனிதனால் உலகில் முதல் தடவையாக ஒரு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் இந்த விநோத திருமணத்தை மந்திரங்கள் சொல்லி நடத்திவைத்தது, மினுக்கும் கண்களும், பிளாஸ்டிக் குதிரைவால் கொண்டையும் போட்டிருந்த ஐ ஃபேரி என்ற இயந்திர யுவதி.

ஜப்பானில் அதிவேகமாக வளர்ந்துவரும் ரோபோ உற்பத்தித் தொழில்துறை மூலம் இந்த ஜோடி ஒருவரோடு ஒருவர் பழக நேர்ந்திருந்தது.
இவர்களுக்கு திருமணம் செய்த ஐ ஃபேரி ரோபோவை உருவாக்கியது மணப்பெண் சடோகோ ஷிபாடா வேலைபார்க்கின்ற நிறுவனம் ஆகும்.

"மனிதர்களுடைய அன்றாட வாழ்வின் பல விஷயங்களில் ரோபோக்களுக்கு இடமிருக்க வேண்டும் என்று எப்போதுமே நம்பிவந்துள்ளவள் நான். இந்த அழகான இயந்திர யுவதி என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுக்கு ஒரு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்." என்கிறார் மணப்பெண்.

புதிய கணவர் டொமோஹிரோ ஷிபாடா ஒரு பல்கலைக்கழகத்தில் ரோபோடிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதன் பாடத்துறையில் பாடம் நடத்துகிறார்.

"முதலிலே இருவரும் பழக ஆரம்பிதததற்கு இந்த ரோபோக்கள்தான் காரணம். எனவே ரோபோவை வைத்து திருமணம் செய்துகொள்ள நாங்கள் முடிவெடுத்தோம்." என்கிறார் இந்த மாப்பிள்ளை.

நன்றி.www.z9world.com



No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.