Tuesday, June 1, 2010

பயங்கரவாதிகளை சுட கேமரா கண்டுபிடிப்பு

ஷில்லாங் : பயங்கரவாத தாக்குதல்களை எவ்வாறு எதிர் கொள்வது என பலரும் ஆய்வு நடத்தி வரும் சமயத்தில், சில இளம் மாணவர்கள், இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கும் நவீன ஆயுதங்களை கண்டு பிடித்துள்ளனர்.பயங்கரவாதிகள் பெரிய கட்டடங்களில் தாக்குதல் நடத்தும் போது, தொலைவில் இருந்தபடியே அவர்களை தாக்கும் தொழில் நுட்பத்தை, ஒரிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த துபான் குமார் சமால் என்னும் பிளஸ் 2 மாணவன் கண்டு பிடித்துள்ளார்.

சிறுவர்களின் அறிவியல் கண்காட்சியில் இந்த படைப்பு இடம் பெற்றுள்ளது.கண்காணிப்பு கேமராவுடன் இணைந்துள்ள துப்பாக்கியை, கன்ட்ரோல் ரூமில் இருந்தவாறு இயக்கி எதிரிகளைத் தாக்கலாம். சுழன்று கொண்டிருக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் எதிரிகளை அடையாளம் கண்டு, கேமராவை எதிரிகளை நோக்கி திருப்பி, அதிலிருக்கும் துப்பாக்கி மூலம் சுட்டுத் தள்ளலாம். இந்த சாதனை மாணவன், தென் ஆப்ரிக்காவில் பைலட் டிரைனிங் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.இந்த மாணவன், எடை குறைந்த “ஏர் கிராப்ட்’ ஒன்றையும் கண்டு பிடித்துள்ளார்.

“இதன் மூலம் குறிப்பிட்ட இலக்கை அடைவது மட்டுமல்லாமல், வெள்ள நிவாரணத்தின் போது மீட்புப் பொருட்களை எடுத்துச் செல்லவும் உதவும்’ என்றும் விளக்கினார்.போரில் காயம்பட்ட வீரர்களுக்கு உதவும் வகையில், புதிய வகை பாசியை, உ.பி., பெரேலி பப்ளிக் ஸ்கூல் மாணவி பாரதி சிங் கண்டுபிடித்துள்ளார். “காயம் பட்ட இடத்தில் இந்த பாசியை வைக்கும் போது, பாசியில் இருந்து ஒரு வகை ஊட்டச்சத்து வெளியேறும். இது, வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்’ என மாணவி பாரதி சிங் கூறினார்

Source & Thanks : dinamalar.com

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.