Friday, June 4, 2010

இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்து மூவர் பலி, அறுவர் காயம்..!

இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியின்மீது வீசப்பட்டு வெடிக்காத குண்டொன்று நேற்றையதினம் வெடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்தனர் என தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவம் மத்திய ஜேர்மனியில் உள்ள கோயெட்டி ஜென்நகரில் இடம்பெற்றுள்ளது. மேற்படி குண்டு அங்கு கிடந்தமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

500கிலோ எடையுள்ள அந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். இதற்காக அப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 3பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி,அதிரடி

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.