Saturday, June 19, 2010

உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு!

உலகின் மிகச் சிறந்த வான் ஆராய்ச்சி மையத்திற்கான தேடலில் கிடைத்ததென்னவோ உலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட, மிக அமைதியான, இதுவரை எந்த மனிதனின் காலடியும் படாத ஒரு இடம். வான் ஆராய்ச்சிக்கான மிக கச்சிதமான இடத்தினை தேர்வு செய்ய புறப்பட்ட அமெரிக்க- ஆஸ்திரேலிய ஆராய்ச்சி குழு ஒன்று இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.


வான் ஆராய்ச்சியை பாதிக்கும் மேகமூட்டம், சீதோஷ்ணம், நீராவி, வெளிர்ந்த வானம், வேக காற்று மற்றும் வளிமண்டல சுருள்கள் போன்றவற்றினை பற்றி ஆராய இந்த குழு திட்டமிட்டிருந்தது. பூமி உருண்டையின் அடிமட்டத்தில் அண்டார்டிகா கண்டத்தின் ஓர் பீடபூமியில் 13297 அடி (4053 மீட்டர்) உயரத்தில் அமைந்த அப்படியான ஒரு இடத்திற்கு அவர்கள் ரிட்ஜ் எ (Ridge A ) என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த இடத்தில் சராசரி குளிர்கால வெப்பநிலை மைனஸ் 70 டிகிரி செண்டிக்ரட் எனவும்காற்றின் ஈரப்பதம் மிகவும் குறைவு எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. "இங்கே மிகவும் அமைதியாக இருக்கிறது. காற்று வீசுதல் மற்றும் சீதோஷ்ண மாற்றம் என்பதே கிட்டத்தட்ட கிடையாது" என்று இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர் வில் சான்டேர்ஸ் தெரிவித்தார்.

இந்த கூறுகள் அனைத்தும் மிகச்சிறந்த ஒரு வான் ஆராய்ச்சி மையம் ஒன்றிற்கான அடித்தளத்தினை அமைக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் வான் ஆராய்ச்சிப் புகைப்படங்கள் உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்படும் வான் ஆராய்ச்சி புகைப்படங்களை விடவும் குறைந்த பட்சம் மூன்று மடங்கு துல்லியமாக இருக்கும் என்றும், இங்கு வானம் மிகவும் தனது இயல்பு கரு நிறத்திலும், வறண்டும் இருப்பதால் ஒரு சாதாரண தொலைநோக்கி (telescope) என்பது இங்கே உலகின் மிகச்சிறந்த ஒரு தொலைநோக்கியை போன்ற வீச்சுடன் இருக்கும் என்றும் சாண்டர்ஸ் மேலும் தெரிவித்தார்.

நன்றி,இந்நேரம்

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.