Friday, July 2, 2010

கின்னஸ் சாதனை முயற்சி

  கின்னஸ் சாதனைக்காக 330 வார்த்தைகளில் தலைப்பு : விருதுநகரில் முயற்சி 
 கின்னஸ் சாதனைக்காக, 330 வார்த்தைகளில் புத்தக தலைப்பு ஒன்றை அமைத்துள்ளார் நகை தொழிலாளி ஒருவர்.
தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளியான மணிகண்டன் என்பவரே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
கின்னஸ் சாதனைக்காக, புத்தகத் தலைப்பு ஒன்றை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார் இவர். நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனையிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு, 24 மி.மீ. அகல, நீளத்தில் செஸ் போர்ட் ஒன்றை வடிவமைத்து இவர் கின்னஸ் சாதனை படைத்தார்.
மேலும், 163 கிராம் வெள்ளியில் மின் விசிறி, 110 கிராம் வெள்ளியில் மோட்டார் பைக், நான்கு கிராம் தங்கத்தில் மோதிர வாட்ச், 8 மி.மீ., நீள, அகலத்தில் திருக்குறள் புத்தகம் போன்றவற்றை வடிவமைத்து, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2007இல் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 1,433 எழுத்துக்களில், 290 வார்த்தைகளில் புத்தகத் தலைப்பை அமைத்தது கின்னஸ் சாதனையாக உள்ளது.
மணிகண்டன் தற்போது நடிகர் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்திற்கு, 1,458 எழுத்துக்களில் 330 வார்த்தைகளில் தலைப்பு அமைத்துள்ளார்.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில்,
"ஒரு கின்னஸ் சாதனையும், நான்கு லிம்கா சாதனையையும் படைத்துள்ளேன். தற்போது, இந்த நீளமான புத்தக தலைப்பை, கடந்த ஆறு மாதமாக முயற்சி செய்து முடித்துள்ளேன். இதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க உள்ளேன்" என்றார்.
Thanks To....Virakesari

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.