Thursday, September 16, 2010

உலக மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதலாவது இந்தியர்-சுசில் குமார்.

கடந்த செப்டம்பர் 12 ம் திகதி மொஸ்கோவில் நடைபெற்ற உலக சம்பியன் மல்யுத்த இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் கோகவ் அலனை வீழ்த்தி ஹரியானாவை சேர்ந்த 27 வயதான சுசில் குமார் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
சுசில் குமார் ஏற்கனவே அரை இறுதிவரை சென்று வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்கு பின்பு இவர் நிருபர்களிடம் கூறுகையில் இந்த வெற்றி கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் கிடைத்த வெற்றியை விட சிறந்தது என்று கூறினார்.
இவர்  கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



இறுதிப்போட்டி  வீடியோ.
 மேலதிக விபரங்களுக்கு........
http://www.latestsportsbuzz.com/?p=7071

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.