Friday, July 23, 2010

'அடோப் பிளாஷ்' அறிமுகப்படுத்தும் புதிய முப்பரிமாண புரட்சி.

  'அடோப் பிளாஷ்', இணையத் தள பாவனையாளர்கள் பரவலாகப் பயன்படுத்திவரும் ஒரு மென்பொருளாகும். உலகளாவிய ரீதியில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இதனை பாவித்து வருகின்றனர்.
'அடோப்' நிறுவனத்தின் அனைத்து மென் பொருட்களும் வெளியீடுகளும் வரைக்கலையில் (graphics) தனித்துவம் பெற்றவை. இந்த வரிசையில் அடுத்த வெளியீடாக முப்பரிமாண 'அடோப் பிளாஷ்' வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென சிறப்பு முப்பரிமாண (3D) கண்ணாடியையும் அது வெளியிடவுள்ளது. இவ்வெளியீடானது 'அடோப்' தனது அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் புரட்சிக்கு ஆயத்தமாக எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொழில்நுட்பமானது இணையத்தளங்களை வடிவமைக்கவுள்ள முப்பரிமாண தோற்றத்தில் பிரமாண்டமாக வடிவமைக்க உதவும். பாவனையாளர்கள் இதனைப் பார்வையிடும் போது, எழுத்து வரைகலை, காணொளிகள் மற்றும் கணினி விளையாட்டுக்கள் போன்றவற்றில் முப்பரிமாண அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான அந்நிறுவத்தின் சிறப்பு மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Thanks To.....Virakesari.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.