Wednesday, March 23, 2011

சவூதி அரேபிய வைத்திய வரலாற்றில் நிகழ்ந்த சாதனை 

கெமரூன் நாட்டின் பழங்குடியினர் வசிக்கும் பாப்பன்கி கிராமத்தில் எமரென்ஷி, நகோங் ஜேம்ஸ் அகும்பு  தம்பதிகளுக்கு ஒட்டிய நிலையின் பிறந்த இந்த இரட்டை குழந்தைகளை, கெமரூன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் ராபிஆ அவர்கள்,  இக்குழந்தைகளை பிரிப்பதற்கான முயற்சிகளையும், செலவுகளையும் ஏற்று கொள்வதாக உறுதியளித்ததன் பிரகாரம்.....
ஏப்ரல் 21, 2007 ல் சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் வைத்தியசாலையில் 65 வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றின் 16  மணிநேர சத்திர சிகிச்சையின் வெற்றிகரமாக  பிரித்தனர்.சவூதி அரேபிய வைத்திய துறை வரலாற்றில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
பிரிக்கப்பட்ட  இரு குழந்தைகளும் தலா ஒவ்வொரு காலுடன் உள்ளமையால் பொய்க்கால் பொருத்துவதற்கான பொறுப்பினையும் சவூதி அரசு ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த  செய்தி பாபன்கி கிராமத்துக்கு கிடைத்தவுடன் சந்தோசத்தால் மகிழ்ச்சியடைன்தனர்.
அதன் பின்னர் இத்தம்பதிகள் இஸ்லாத்தை ஏற்று ஆயிஷா, அப்துல்லாஹ்வாக மாறி இஸ்லாத்தை கடைப்பிடித்து வருவதுடன், 1000 பேர் பழங்குடியினர் வசிக்கும்  அக்கிராமத்தில் சுமார் 400 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி. தமிழ்தாவா.



No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.