Wednesday, July 21, 2010

நீண்டநேர விளையாட்டு - கின்னஸ்க்காக சிறுவன் சாதனை.

வத்திராயிருப்பு : கின்னஸ் சாதனைக்காக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் டெனித் ஆதித்யா உலகின் நீண்ட நேரம் இயங்கும் "கம்ப்யூட்டர் கேம்' உருவாக்கியுள்ளான்.
வத்திராயிருப்பில் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான் டெனித் ஆதித்யா. தந்தை மாவேல்ராஜன். தாயார் ஆக்னெலின் இடைநிலை ஆசிரியை. இவர்கள், மகனின் ஆர்வத்தால் நான்கு ஆண்டுகளுக்கு முன் கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விட்டனர். தனது திறமையால் சி ப்ளஸ், விசுவல் பேசிக், லாங்வேஜ் வரை விரைவில் கற்றான். 2010 பிப்ரவரியில் கின்னஸ் சாதனைக்காக புதிய சாப்ட்வேர்களையும், அதில் எட்டு "கேம்'களை வடிவமைத்தான். இவை கின்னஸ் அமைப்பின் முதல்கட்ட தேர்வில் தேர்வாகி அடுத்தகட்ட பரிசீலனையில் உள்ளது. அடுத்த சாதனையாக உலகிலேயே மிக நீண்ட நேரம் இயங்கக்கூடிய "பவர் மைண்ட்' என்ற கேம் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளான். இதுகுறித்து நேற்று வத்திராயிருப்பில் பலர் முன்னிலையில் விவரித்தான்.
டெனித் ஆதித்யா கூறியதாவது: இது ஞாபக சக்தியை வளர்க்கும் "நியூமெரிக்கல் கேம் சாப்ட்வேர்'. பொழுதுபோக்கு "கேம்'களில் அதிகபட்சம் "10 ஸ்டேஜ்' வரை இருக்கும். நான் வடிவமைத்தது 570 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாடக்கூடியது. இதன் மொத்த அளவு "52 கேபி' மட்டுமே, என்றான்.
Thanks To.......Dhinamalar.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.