Wednesday, August 18, 2010

எச்சரிக்கை - செல்பேசி வெடித்து ஒருவர் மரணம்.


ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில், செல்பேசி வெடித்துச் சிதறியதில் மனோஜ் குமார் (24) என்பவர் உயிரிழந்தார்.
பாந்தா கிராமத்தைச் சேர்ந்த அவர், தனது மாடுகளைத் தேடி வனப் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றார்.

செல்போனில் பேசியவாறு அவர் நடந்துச் சென்றபோது, திடீரென செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது. நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இரவில் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், கிராம மக்கள் வனப் பகுதிக்கு தேடிச் சென்றனர். நீண்டநேர தேடுதலுக்குப் பின்னர் அடர்ந்த வனப் பகுதியில் அவரது சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அப் பகுதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் வெடித்துச் சிதறியதாலேயே மனோஜ் குமார் உயிரிழந்துள்ளார் என்பதை போலீஸôரும் உறுதி செய்துள்ளனர்.

அவரது இடது காது, கழுத்து, தோள் பகுதியில் தீக் காயம் காணப்படுகிறது. சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய நோக்கியா 1209 மாடல் செல்போன் பாகங்களையும் சேகரித்துள்ளோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.          Thanks To.....NewIndiaNews
 

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.