Saturday, July 10, 2010

வறட்சியால் அழிந்த நகரம்

மழை பெய்யாததால் ஒரு நகரமே அழிந்து விடும் என்பதற்கு, கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் நகரம் ஓர் உதாரணமாகும். கோயில் நகரமான அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக காரணங்கள் கூறப்படுகின்றன.
கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாகவே, அங்கோர் வாட் நகரம் அழிந்தது என சமீபத்தில் நடந்த ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்துள்ளது.
மரத்தில் காணப்படும் மர வளையங்கள், அந்த மரம் உள்ள இடத்தில் பெய்யும் மழையின் அளவைக் காட்டுகின்றன. அங்கோர் வாட் நகரில் உள்ள மரங்களின், மர வளையங்களை வைத்து நடத்திய ஆய்வில், மழைப்பொழிவு இல்லாததே, அங்கோர் வாட் நகரின் அழிவுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
Thanks To....Dhinamalar

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.