Wednesday, August 11, 2010

ஒரு வாழைமரத்தில் பல பூக்கள்!

ஒரு வாழைமரத்தில் பல பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி ஒரு அதிசயம் இலங்கையின் நுவரெலியாவில் நிகழ்ந்துள்ளது.
நுவரெலியா மாவட்டம் நானுஒயா வங்கி ஓய கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசய வாழை மரம் காணப்படுகின்றது.
இந்த வாழை மரத்தில் சுமார் 25 வாழைப்பூக்கள் காணப்படுகின்றன. பொதுவாக வாழை மரமொன்றில் ஒரு பூ மாத்திரமே பூக்கும் என்பதே இயற்கை.
ஆனால் இந்த வாழைமரம் பல பூக்களுடன் இருப்பதைப்பார்த்து பிரதேச மக்கள் வியப்படைந்துள்ளனர்.
நன்றி.வீரகேசரி.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.