Tuesday, June 22, 2010

பார்வையாளர்களைக் கவர உயிரை பணயம் வைக்கும் மனிதர்

மிருகக் காட்சிச் சாலைக்கு பார்வையாளர்கள் அதிகளவில் வருவதற்காக அவர்களைக் கவர தனது உயிரைப் பணயம் வைத்து ஒருவர் வேலை செய்கின்றார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் மலபோன் மிருகக் காட்சிசாலை உள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான இந்த மிருகக்காட்சி சாலையில் முதலைக்கு ஒரு பணியாளர் உணவூட்டும் காட்சி பிரபலமாக இருக்கிறது.
அந்த பணியாளர் கம்பி தடுப்பு வேலிக்கு மீது சாய்ந்தபடி தலை கவிழ்ந்த நிலையில் தொங்கிக்கொண்டு முதலைக்கு உணவு கொடுக்கிறார். அந்த உணவை கவ்விப்பிடிக்க சில அடி உயரத்துக்கு முதலை பாய்ந்து குதிக்கிறது.
அப்படி குதிக்கும்போது அது அந்த ஊழியரை தொட்டு விடும் தூரத்துக்கு வந்து விடுகிறது. அப்படி அது குதித்து தொட்டு விட்டாலும் ஆபத்து, அவர் கால் தவறி முதலையின் வாய்க்குள் விழுந்து விட்டாலும் ஆபத்து.
Thanks To....Thamilkathir.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.