Sunday, August 8, 2010

4 கை, 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை!

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு தலை, இரு உடல், நான்கு கை, நான்கு கால்களுடன் வினோத குழந்தை பிறந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று காலையில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்தது. அவருக்கு நான்கு கை, நான்கு கால்களுடன் வினோதமான பெண் குழந்தை பிறந்தது; இது அவருக்கு மூன்றாவது பிரசவம்.
அக்குழந்தைக்கு ஒரு முகமும், அதேசமயம் தலையில் மற்றொரு தலை ஒட்டியது போல சற்றே பெரியதாகவும் இருந்தது. அக்குழந்தையின் வலது பக்கவாட்டு மார்பில் மற்றொரு உடல் இணைந்திருந்தது. குழந்தை பிறந்த ஓரிரு நிமிடங்களில் இறந்துவிட்டது. அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் தில்ஷாத் தலைமையில் டாக்டர்கள் லலிதா, ஹெலன் சிகிச்சை அளித்தனர். தலைமை டாக்டர் கூறியதாவது: லட்சத்தில் ஒருவருக்கு இது போன்ற குழந்தைகள் பிறப்பதுண்டு.
கருத்தரித்து 13 நாட்களுக்குப் பின் கரு பிரிந்தால் இது போன்று நிகழ்வதுண்டு. அதற்கு முன் பிரிந்தால் அது முழுமையான இரட்டைக் குழந்தையாக இருக்கும். பிரசவத்தின் போது ரத்தசோகையாக இருந்ததால், தீவிர சிகிச்சை அளித்து சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாய் நலமுடன் உள்ளார். இவ்வாறு டாக்டர் கூறினார்.
Thanks To..........Farook Ashaar

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.