Sunday, August 8, 2010

பல்லினால் தேங்காய் உரித்து கின்னஸுக்கு முயற்சிக்கும் பெங்களூர் வாலிபர்!

உலகளவில் சாதனை செய்வதற்கு பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக எப்படியான விஷப் பரீட்சையினை செய்யவும் தயங்குவதில்லை.
தங்களது உடலுறுப்புகளையே ஆயுதமாக பயன்படுத்தியும் பலர் சாதனை செய்து வருகின்றனர். அந்தவகையில் பெங்களூரை சேர்ந்த 32 வயதுடைய விஜய் குமார் என்ற வாலிபர், தனது பல்லினால் தேங்காய் உரித்து சாதனை படைத்துள்ளார்.
 கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரினை பதிவுசெய்ய நினைத்த விஜய் குமார் ஒரு நிமிடத்திற்குள் மூன்று தேங்காய்களை தனது பல்லினால் உரித்துக் காண்பித்தார். இவரது இச்சாதனை கின்னஸ் தெரிவுக் குழுவினரினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.