Sunday, August 8, 2010

பொன் மொழிகள்.

* பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது.

* சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.

* போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும். 

* தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பிவிடும். 

* பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை; மற்றவர்களுக்கும் நன்மை இல்லை  

* பிதுர் காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வகாரியங்களுக்கு பக்தி வேண்டும்.

* கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...

* நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்.அது தான் தர்மம். -பெர்சீன் பழ்மொழி. 

* உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள். 

* உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான். 

* ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள். 

* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள். 

* கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும். 

* வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.

* கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.