Sunday, August 8, 2010

'டுவிட்டர்' இணையத்தளம் நெருக்கடியில்...!

உலகின் பிரபல்யமாக விளங்கிய சமூக இணையத்தளமான 'டுவிட்டர்' தற்போது நெருக்கடி ஒன்றைச் சந்தித்துள்ளது. 'டுவிட்டர்' இணையத்தளத்தில் கணக்குகளைப் பேணும் பலர் அவர்களைத் தொடர்வோர் மற்றும் நண்பர்களை இழந்துள்ளனர்.
அதிகமான பாவனையாளர்கள் தமது நண்பர்களுக்குப் 'பின்பற்று' (follow) என்ற வேண்டுகோளை பலவந்தமாக அனுப்புகின்றனர்.இதனை ஏற்றுக்கொள்ளும் நண்பர்களின் கணக்குகள் மூலமாக சமூக வலைப்பின்னலில் உள்ள ஏனையோரது கணக்குகளை 'ஹக்' (hack) செய்ய முடியும்.
இது தொடர்பில் 'டுவிட்டர்' இணையத்தளம் துரிதகெதியில் செயற்பட்டு வருவதுடன் நண்பர்களைத் தொடரும் இணைப்பை நிறுத்தியுள்ளது. தவறுகள் ஏற்பட்ட 'டுவிட்டர்' கணக்குகளை மீள ஒழுங்கமைக்கும் நடவடிக்கையிலும் 'டுவிட்டர்' தொழில்நுட்பப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
100 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட 'டுவிட்டர்' இணையத்தளத்தின் சேவைகளைப் பிரபல ஊடகங்கள் உட்பட பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.