Saturday, August 7, 2010

சர்வதேச மண் சிற்ப போட்டி: சுதர்சன் பட்நாயக் முதல் பரிசு

பெர்லின், ஆக. 1: ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எட்டாவது சர்வதேச மண் சிற்ப போட்டியில், இந்தியாவின் புகழ் பெற்ற கலைஞர் சுதர்சன் பட்நாயக் முதல் பரிசு வென்றுள்ளார்.  பூமி வெப்பம் அடைவது குறித்து சுதர்சன் வடிவமைத்த சிற்பம் அதிக ஓட்டுகளை பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
இவ்விருதை சுதர்தன் ஐந்தாவது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்து நாடுகளைச் சேர்ந்த மண் சிற்பக் கலைஞர்கள் பங்கு பெற்ற இப்போட்டியில், இங்கிலாந்தின் பாட்ரிக் ஸ்டெப்டோய் இரண்டாமிடத்தையும், டென்மார்க்கை சேர்ந்த மரியா எல்யாட் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.