Monday, August 2, 2010

ஐம்பதாவது வயதில் மீண்டும் மர்லின் ஒட்டே.

மார்லின் ஓட்டேய்

மார்லின் ஓட்டேய்
மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனாக இருந்துள்ள மார்லின் ஓட்டேய் தனது 50 ஆவது வயதில் மீண்டும் போட்டிகளில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
 பார்சிலோனாவில் நடைபெறவுள்ள ஐரோப்பிய சாம்பியஷிப் போட்டிகளில் தான் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் மகளிர் பிரிவில் மிக அதிக வயதில் பங்கேற்கும் வீராங்கணை எனும் பெருமையையும் அவர் பெறவுள்ளார்.
ஜமைக்கா நாட்டில் பிறந்து அந்த நாட்டுக்காக ஓடி ஒலிம்பிக் மற்றும் உலகப் போட்டிகளில் சாதனைகளை படைத்துள்ள மார்லின் ஓட்டேய், 2002 ஆம் ஆண்டு ஸ்லொவேனிய நாட்டு பிரஜையானார்.
தற்போது இந்த மாதம் 31 ஆம் தேதி பார்சிலோனாவில் தொடங்கவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஸ்லொவேனிய நாட்டு அணியில் ஓட தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 7 ஒலிம்பிக் போட்டிகளில் 9 பதக்கங்களை ஜமைக்கா நாட்டின் பிரஜையாக இருக்கும் போது வென்றார்.
உலக அளவில் பல முன்னணிப் போட்டிகளில் இதுவரை 29 பதக்கங்களை மார்லின் ஓட்டேய் வென்றுள்ளார். அதில் 14 பதக்கங்களை உலகத் தடகளப் போட்டிகளில் வென்றுள்ளார். மற்ற எந்த விளையாட்டு வீரரைக் காட்டிலும் உலகப் போட்டிகளில் கூடுதலான பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995 ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகத் தடகளப் போட்டிகளில், மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டத்தில், தங்கப் பதக்கம் வென்றார். அப்போது அவருக்கு 35 வயது. மிக அதிக வயதில் உலகப் பட்டத்தை வென்ற ஒரு வீராங்கணை என்கிற பெருமையை மார்லின் ஓட்டேய் பெற்றார்.
அதே போன்று 2000 ஆம் ஆண்டு சிட்னியில் இடம் பெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஜமைக்கா அணி மகளிருக்கான 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றது. அந்த அணியில் பங்குபெற்ற மார்லின் ஓட்டேய்க்கு அப்போது வயது 40
தனது 50 ஆவது வயதில் ஸ்லொவேனிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதையடுத்தே அவர் அந்த நாட்டின் சார்பாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியிட தேர்தெடுக்கப்பட்டுள்ளார்
இது வரை பிரான்ஸின் நிக்கோல் பர்க்புஷே லெவேக்கே மிக அதிக வயதில், அதாவது தனது 47 ஆவது வயதில் ஐரோப்பியப் போட்டிகளில் பங்கு பெற்ற வீராங்கணை என்கிற பெருமையைப் பெற்றிருந்தார்.

No comments:

Post a Comment

வருகைக்கு நன்றி,
தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் சொல்லிவிட்டு செல்லுங்கள். மீண்டும் வருக.